மேலும் அறிய

Womens IPL: மகளிர் ஐபிஎல் அணியை வாங்க ஆர்வம் காட்டும் சிஎஸ்கே அணி நிர்வாகம்..

மகளிர் ஐபிஎல் தொடரில் ஒரு அணியை வாங்க, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2008ஆம் ஆண்டு முதன்முறையாக எட்டு அணிகளுடன் தோற்றுவிக்கப்பட்ட ஆடவர் ஐபிஎல் தொடர் பிரமாண்ட வளர்ச்சிபெற்று கோடிகள் புரளும் விளையாட்டுத் தொடராக 10 அணிகளுடன் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.

மகளிர் ஐபிஎல் அணிகளுக்கான ஏலம்

இந்நிலையில், முதல் முறையாக நடப்பாண்டில் 5 அணிகளை கொண்டு, மகளிர் ஐபிஎல் தொடர் நடைபெற உள்ளது. வரும்  மார்ச் 3ம் தேதி தொடங்கும் மகளிர் ஐபிஎல் தொடர் 26-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த தொடரில் மொத்தம் 18 போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இதற்கான அணிகளை வாங்க விரும்பும் நிறுவனங்கள் உரிமை கோரலாம் என்று,  இந்திய கிரிக்கெட் வாரியம் டெண்டர் அழைப்பை விடுத்து இருந்தது. இதற்கான விண்ணப்பங்கள் வரும் 21ம் தேதி வரை வழங்கப்படும் எனவும், டெண்டர் விண்ணப்பம் பெற ரூ.5 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் அண்மையில் அறிவிக்கப்பட்டது.

விருப்பும் தெரிவித்துள்ள ஆடவர் அணி நிர்வாகங்கள்:

இந்நிலையில், மகளிர் அணிகளை வாங்கவும் ஆடவர் ஐபிஎல் தொடரில் அணிகளை கொண்டுள்ள சில பிரான்ச்சாய்ஸ்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் பெண்கள் ஐ.பி.எல். அணிகளை வாங்கும் விருப்பத்துடன் உள்ளன. இதற்காக டெண்டர் விண்ணப்பத்தையும் சமர்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

சிஎஸ்கே அணி விருப்பம்:

இதுதொடர்பாக பேசியுள்ள சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், நாங்கள் ஏல ஆவணத்தை வாங்க விண்ணப்பித்துள்ளோம். இப்போது அதன் பொருளாதாரம் பற்றி அறிய வேண்டும். நாங்கள் ஆர்வமாக உள்ளோம். சென்னை சூப்பர் கிங்ஸில் பெண்கள் குழு இல்லை என்றால், அது நன்றாக இருக்காது. மகளிர்  கிரிக்கெட்டை ஊக்குவிக்க நாங்கள் விரும்புகிறோம் என காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

மகளிர் ஐபிஎல்:

மகளிர் டி-20 போட்டிகளுக்கு இந்தியாவில் வரவேற்பு கிடைக்காததால், மகளிர் ஐபிஎல் தொடர் மீது பிசிசிஐ ஆர்வம் காட்டாமல் இருந்தது. ஆனால், மகளிர் ஐபிஎல் தொடரை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 2018 – 2020காலக்கட்டத்தில் மூன்று அணிகள் கொண்ட மகளிர் ஐபிஎல் தொடரை பிசிசிஐ நடத்தியது.

ஆனால் தொடர்ந்து அப்போட்டிகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டன. இந்தியாவின் ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மாறாக மகளிர் கிரிக்கெட் அணி சர்வதேச அளவில் துவண்டு கிடக்கும் நிலையில், அதை ஊக்கப்படுத்தும் நோக்கில் மகளிர் ஐபிஎல் தொடர் நடப்பாண்டு முதல் நடைபெற உள்ளது.

முதன்முறையாக நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் 5 அணிகள் பங்கேற்க உள்ளன. அணிகளை ஏலத்தில் எடுக்க, ஒவ்வொரு அணிக்கும்  அடிப்படை விலை ரூ.400 கோடியாக நிர்ணயிக்கப்பட்டடுள்ளதாக ஆரம்பத்தில் கூறப்பட்டது. ஆனால், அணிகளை ஏலத்தில் எடுக்க எந்தவொரு அடிப்படை தொகையையும் பிசிசிஐ நிர்ணயிக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அமித்ஷாவுடன் ஒரே மேடையில் ஏறும் துணை முதலமைச்சர்.. பாதுகாப்பு வளையத்தில் கோயம்புத்தூர்
அமித்ஷாவுடன் ஒரே மேடையில் ஏறும் துணை முதலமைச்சர்.. பாதுகாப்பு வளையத்தில் கோயம்புத்தூர்
"ரூ 5,000 கொடுக்கிறோம்.. நம்பி ஓட்டு போடுங்க" முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் அதிரடி!
Good Bad Ugly Teaser: தெறிக்குதே.. அஜித்தின் குட் பேட் அக்லி டீசர் எப்போ ரிலீஸ் தெரியுமா?
Good Bad Ugly Teaser: தெறிக்குதே.. அஜித்தின் குட் பேட் அக்லி டீசர் எப்போ ரிலீஸ் தெரியுமா?
Mayiladuthurai Power Shutdown (26.02.2025): மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின்தடை - இதுல உங்க ஊர் இருக்கா பாருங்க?
Mayiladuthurai Power Shutdown (26.02.2025): மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின்தடை - இதுல உங்க ஊர் இருக்கா பாருங்க?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கண்டுகொள்ளாத EPS? விழாவுக்கு வராத தங்கமணி! அதிமுகவில் மீண்டும் சிக்கல்Selvaperunthagai | ”செ.பெருந்தகைய மாத்துங்க... காங். கட்டப்பஞ்சாயத்து கமிட்டியா?” டெல்லிக்கு படையெடுத்த நிர்வாகிகள்! | Congress”ரூ.12,000 வச்சுக்கோங்க” கையில் கொடுத்த மாணவி! பூரித்து போன அமைச்சர்Amman Arjunan MLA: வருமானத்திற்கு அதிகமாக சொத்து!  எம்எல்ஏ வீட்டில் ரெய்டு! எஸ்.பி.வேலுமணிக்கு செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அமித்ஷாவுடன் ஒரே மேடையில் ஏறும் துணை முதலமைச்சர்.. பாதுகாப்பு வளையத்தில் கோயம்புத்தூர்
அமித்ஷாவுடன் ஒரே மேடையில் ஏறும் துணை முதலமைச்சர்.. பாதுகாப்பு வளையத்தில் கோயம்புத்தூர்
"ரூ 5,000 கொடுக்கிறோம்.. நம்பி ஓட்டு போடுங்க" முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் அதிரடி!
Good Bad Ugly Teaser: தெறிக்குதே.. அஜித்தின் குட் பேட் அக்லி டீசர் எப்போ ரிலீஸ் தெரியுமா?
Good Bad Ugly Teaser: தெறிக்குதே.. அஜித்தின் குட் பேட் அக்லி டீசர் எப்போ ரிலீஸ் தெரியுமா?
Mayiladuthurai Power Shutdown (26.02.2025): மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின்தடை - இதுல உங்க ஊர் இருக்கா பாருங்க?
Mayiladuthurai Power Shutdown (26.02.2025): மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின்தடை - இதுல உங்க ஊர் இருக்கா பாருங்க?
"இன்குலாப் ஜிந்தாபாத்" 7ஆவது மாடியில் இருந்து குதித்த நபர்.. தலைமை செயலகத்தில் பரபரப்பு!
அரசு தற்காலிக பணியாளர்களுக்கு பறிபோகிறது வேலை! நீதிமன்ற உத்தரவால் பெரும் பரபரப்பு
அரசு தற்காலிக பணியாளர்களுக்கு பறிபோகிறது வேலை! நீதிமன்ற உத்தரவால் பெரும் பரபரப்பு
AUS vs SA: கைவிடப்பட்ட ஆஸ்திரேலியா -தெ. ஆப்பிரிக்கா போட்டி! அரையிறுதிக்குப் போகப்போவது யார்?
AUS vs SA: கைவிடப்பட்ட ஆஸ்திரேலியா -தெ. ஆப்பிரிக்கா போட்டி! அரையிறுதிக்குப் போகப்போவது யார்?
பாட்டி, தம்பி, காதலி.. ஐவர் கொடூர கொலை.. வேட்டை ஆடிய இளைஞர்.. கேரளாவை அதிரவிட்ட சம்பவம்!
பாட்டி, தம்பி, காதலி.. ஐவர் கொடூர கொலை.. வேட்டை ஆடிய இளைஞர்.. கேரளாவை அதிரவிட்ட சம்பவம்!
Embed widget