மேலும் அறிய

Ravichandran Ashwin: "CSK-வில் எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது!" மனம் திறந்து பேசிய அஸ்வின்: ஓய்வு முடிவின் பின்னணி என்ன?

தன்னுடைய ஓய்வு முடிவு தனிப்பட்ட காரணங்களுக்காக மட்டுமல்ல, அணியின் அடுத்தகட்ட முடிவுகளுக்குத் துணையாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் எடுக்கப்பட்டதாக அஸ்வின் வலியுறுத்தினார்

சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் மீண்டும் இணைந்தது பல ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்த நிலையில், அந்தப் பயணம் கசப்பான அனுபவமாக முடிந்ததாக அஸ்வின் உருக்கமாகப் பேசியுள்ளார்.

மன அழுத்தமும், ஏமாற்றமும்:

"CSK-வில் நான் கழித்த அந்த சீசன் எனக்கு மிகுந்த ஏமாற்றத்தையே தந்தது. களத்தில் என்னால் இன்னும் சிறப்பாகச் செயல்பட்டிருக்க முடியும் என்று என் மனது சொல்கிறது. ஆனால், குடும்பம் மற்றும் பிற பொறுப்புகளைக் கவனித்துக்கொண்டு, இந்த மன அழுத்தத்தைச் சுமக்க எனக்குத் திராணி இல்லை. அதனால் நானே விலகிக்கொண்டேன்" என்று அஸ்வின் தெரிவித்தார்.

மேலும், "அந்தக் காயங்களை மீண்டும் கிளற நான் விரும்பவில்லை. அது எனக்கு மனதளவில் பெரும் வேதனையை அளித்தது. கிரிக்கெட் பயணத்தை சென்னையில் தொடங்கினேன், இப்போது என் சொந்த ஊரான சிஎஸ்கே அணியோடு அதை நிறைவு செய்வது எனக்கு திருப்தி அளிக்கிறது" என்றார்.

2025-இல் நடந்தது என்ன?

2025 ஐபிஎல் தொடரில் 14 போட்டிகள் இருந்த நிலையில், அஸ்வினுக்கு வெறும் 9 போட்டிகளில் மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. அணியில் தனது பங்கு என்ன என்பது குறித்து அவர் நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. தற்போது ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சிஎஸ்கே, 2026 ஐபிஎல் தொடரிலும் தொடர்ந்து 3 தோல்விகளைச் சந்தித்து தடுமாறி வருவது ரசிகர்களைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

அணியின் நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு

அஸ்வினின் விலகல் குறித்த சுவாரஸ்யமான தகவலையும் அவர் பகிர்ந்துள்ளார்: "நான் ஓய்வு பெற எடுத்த முடிவு, அணியின் சுமையைக் குறைத்தது. என்னை தக்கவைப்பதா அல்லது விடுவிப்பதா என்ற குழப்பத்திலிருந்து அவர்களை விடுவித்தேன். நான் விலகியதன் மூலம் சிஎஸ்கே அணிக்கு 10 கோடி ரூபாய் மிச்சமாகியுள்ளது" என்றார்.

9.75 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த அஸ்வின், தனது விலகல் மூலம் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்க வழிவகை செய்துள்ளார். எம்.எஸ். தோனியின் நிழலில் பயணிக்கும் சிஎஸ்கே அணிக்கு, அஸ்வினின் இந்த விலகல் புதிய வீரர்களைத் திரட்டப் பேருதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!

வீடியோ

Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி
Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
ஒரே சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்.. Vida இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை, தரம் எப்படி?
ஒரே சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்.. Vida இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை, தரம் எப்படி?
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
Tamil Nadu By Election : தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை.! நீதிமன்றம் அதிரடி- இது தான் காரணமா.?
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்த தடை.! இது தான் காரணமா.?
Embed widget