மேலும் அறிய

MS Dhoni: 'நான் எரிச்சலூட்டும் கேப்டன் தான்.. ஆனால்..’ - சி.எஸ்.கே. வீரர்களை எச்சரித்த கேப்டன் தோனி..!

தான் அடிக்கடி ஃபீல்டிங் மாற்றம் செய்வது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி கருத்து தெரிவித்துள்ளார். 

தான் அடிக்கடி ஃபீல்டிங் மாற்றம் செய்வது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி கருத்து தெரிவித்துள்ளார். 

10வது முறையாக ஃபைனல் சென்ற சிஎஸ்கே

16வது ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் போட்டிகள் முடிவில் குஜராத், சென்னை, மும்பை, லக்னோ அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது. இதில் நேற்று நடைபெற்ற முதல் தகுதிச் சுற்றுப் போட்டியில் சென்னை சேப்பாக்கத்தில் குஜராத், சென்னை அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் குவித்தது. 

தொடர்ந்து பேட் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் சென்னை அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. தோனி தலைமையில் 14 சீசனில் விளையாடியுள்ள சென்னை அணி 10வது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. இதனை சென்னை அணி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர். 

புகழ்ச்சி மழையில் தோனி

நேற்றைய ஆட்டத்திலும் சென்னை அணி பேட்டிங்கின் போது ருதுராஜ் கெய்க்வாட், டெவன் கான்வே ஆகியோரை தவிர பிற பேட்ஸ்மேன்கள் பெரிய அளவில் சோபிக்கவில்லை. அதேசமயம் ஃபீல்டிங்கின் போது கேப்டன் தோனி ஆலோசனைகளால் முக்கியமான கட்டத்தில் விக்கெட்டுகள் வீழ்ந்தது. இதனை குறிப்பிட்டு ரசிகர்கள் அவரை புகழ்ந்து தள்ளியுள்ளனர். அதேசமயம் தோனி பந்துக்கு பந்து ஃபீல்டிங்கை மாற்றுவது குறித்தும் ஒவ்வொரு போட்டியின் போதும் விமர்சனம் எழுந்து வருகிறது. இதனைப் பற்றி அவர் கருத்து தெரிவித்துள்ளார். 

எரிச்சலூட்டும் கேப்டன்

குஜராத் அணிக்கு போட்டிக்குப் பின் பேசிய தோனி,  “நான் அடிக்கடி ஃபீல்டிங் மாற்றுவதால் வீரர்கள் என்னை ‘எரிச்சலூட்டும் கேப்டன்’ ஆக பார்க்க வாய்ப்புள்ளது. காரணம் நான் ஒவ்வொரு பந்துக்கும் ஃபீல்டிங்கை மாற்றிக் கொண்டே இருப்பேன். என் உள்ளுணர்வுக்கு ஏற்ற வகையில் ஃபீல்டிங் மாற்றப்படும். இது பல நேரங்களில் அணிக்கு பயனளித்தும் உள்ளது. நான் சென்னை அணி வீரர்களிடம் வைக்கும் கோரிக்கை ஒன்று தான். ‘ஒரு கேட்சை கைவிடும்போது என்னிடமிருந்து எந்த எதிர்வினையும் இருக்காது. ஆனால் ஃபீல்டர்களின் கவனம் எப்போதும் என்மீது இருக்க வேண்டும். அதனால் என்னை கவனியுங்கள்”  என அவர் தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து இந்த சீசனுடன் தோனி ஓய்வுப் பெற உள்ளார் என்ற கேள்விக்கும் அவர் பதிலளித்தார். அடுத்த ஐபிஎல் சீசனுக்கான ஏலத்திற்கு இன்னும் 8, 9 மாதங்கள் இருக்கும் நிலையில் இப்போது ஓய்வு பற்றி பேசுவது சரியாக இருக்காது. விளையாட்டோ அல்லது பயிற்சியோ நான் எப்போதும் சென்னை அணியுடன் தான் இருப்பேன் எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க: Behind The Movie: விஜயகாந்துக்கு எழுதிய கதை.. உள்ளே வந்த சூர்யா.. ஆதவன் படத்துக்கு பின்னால் இவ்வளவு விஷயம் இருக்கா?

தலைப்பு செய்திகள்

"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget