CSK Vs PBKS: சிஎஸ்கே-வை மீட்கப் போவது யார்.? 220 ரன்களை இலக்காக நிர்ணயித்த பஞ்சாப்.. தேறுமா சென்னை.?
IPL 2025 CSK Vs PBSK: பஞ்சாப்பில் இன்று நடைபெற்றுவரும் பஞ்சாப் மற்றும் சென்னை அணிகளுக்கிடையிலான ஐபிஎல் லீக் போட்டியில், முதலில் ஆடிய பஞ்சாப் அணி, சென்னைக்கு 220 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

பஞ்சாப்பில் இன்று நடைபெற்றுவரும் பஞ்சாப் மற்றும் சென்னை அணிகளுக்கிடையிலான ஐபிஎல் லீக் போட்டியில், முதலில் ஆடிய பஞ்சாப் அணி, 219 ரன்களை குவித்தது. இதையடுத்து சென்னை அணிக்கு 220 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அதிரடி ஆட்டம்
ஐபிஎல் தொடரின் 22-வது லீக் போட்டியில் இன்று, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான போட்டியில், டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ப்ரியன்ஷ் ஆர்யா மற்றும் ப்ரப்சிம்ரன் களமிறங்கிய நிலையில், ரன் ஏதும் எடுக்காமலேயே ப்ரப்சிம்ரன் டக் அவுட் ஆகி வெளியேறினார். இதனைத் தொடர்ந்து வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யரும் 9 ரன்களில் வெளியேறினார். மறுபுறம், சிஎஸ்கே-வின் பந்துவீச்சை துவைத்து எடுத்தார் ப்ரியன்ஷ் ஆர்யா. 19 பந்துகளில் அவர் அரை சதம் அடித்தார். ஆனால், மறுமுனையில் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வரிசையாக வெளியேறிக் கொண்டிருந்தனர்.
சதம் விளாசிய ப்ரியன்ஷ் ஆர்யா
ஸ்டாய்னிஸ் 4 ரன்கள், நேகல் வதேரா 9 ரன்கள், அதிரடி ஆட்டக்காரர் மேக்ஸ்வெல் 1 ரன் எடுத்தும் வெளியேறினர். மேக்ஸ்வெல்லைத் தொடர்ந்து வந்த ஷஷாங்க் சிங் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருக்கு முன் அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த ப்ரியன்ஷ் ஆர்யா, 9 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் சதத்தை நிறைவு செய்து அசத்திய நிலையில், 42 பந்துகளில் 103 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து ஆட வந்த மார்கோ ஜேன்சனும் அதிரடி காட்டி 19 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மறுமுனையில், ஷஷாங்க் சிங் 36 பந்துகளில் அரை சதத்தை பூர்த்தி செய்து, 52 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இறுதியில், 20 ஓவர்களில் பஞ்சாப் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 219 ரன்களை குவித்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் தரப்பில், கலீல் அகமது, அஷ்வின் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

