IPL 2026 Qualifier 1 RCB vs GT: ஆர்சிபி - குஜராத் ரெடி! குவாலிஃபயர் 1 முழுசா நடக்குமா? குறுக்கே வருமா மழை?
நடப்பு ஐபிஎல் தொடரின் குவாலிஃபயர் 1 போட்டியில் ஆர்சிபி - குஜராத் அணிகள் இன்று நேருக்கு நேர் மோதுகின்றனர்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 19வது சீசனின் ப்ளே ஆஃப் சுற்று இன்று தொடங்கியுள்ளது. இந்த தொடரின் குவாலிஃபயர் 1 போட்டி இன்று நடக்கிறது.
குவாலிஃபயர் 1:
இந்த போட்டியில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ள ஆர்சிபி அணியும், புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ள குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றனர். இந்த போட்டியில் வெற்றி பெற்றால் நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறலாம்? என்பதால் இரு அணிகளும் வெற்றிக்காக போராடுவார்கள்.
இந்த போட்டி ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள தரம்சாலா மைதானத்தில் நடக்கிறது. இந்தியாவிலே மிகவும் உயரமான பகுதியில் அமைந்துள்ள கிரிக்கெட் மைதானம் இதுவே ஆகும். இமயமலைக்கு நடுவே அமைந்துள்ள இந்த மைதானம் கடல் மட்டத்தில் இருந்து 1457 அடி உயரத்தில் அமைந்துள்ளது. 23 ஆயிரம் ரசிகர்கள் அமர்ந்து நேரில் பார்க்கும் வசதி கொண்டது.
மழை பெய்யுமா?
போட்டி நடைபெற உள்ள நிலையில், இன்றைய குவாலிஃபயர் போட்டி நடக்கும்போது மழை பெய்யுமா? போட்டி எந்த தடையும் இல்லாமல் நடக்குமா? என்பதை கீழே காணலாம். இன்றைய பகல் பொழுதில் 26 டிகிரி செல்சியஸ் காணப்பட்டது. போட்டி நடக்கும்போது 21 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை காணப்படும். ஈரப்பதம் 20 சதவீதமாகவும், மேகமூட்டம் 5 சதவீதமாகவும் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதேசமயம், போட்டி நடக்கும் நேரத்தில் மழைப்பொழிவுக்கான வாய்ப்பு மிக மிக குறைவாக இருப்பதால் போட்டி நடைபெறுவதற்கு எந்த தடையும் இருக்காது என்று கருதப்படுகிறது. இதனால், ரசிகர்கள் போட்டி முழுமையையும் எந்த தடையும் இல்லாமல் காணலாம்.
வேகப்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கமா?
இந்த மைதானம் பேட்டிங்கிற்கு சொர்க்கபுரி என்பதால் இன்றைய போட்டியில் பந்துவீச்சில் ஆதிக்கம் செலுத்தும் அணிக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசம் ஆகும். பேட்டிங்கைப் பொறுத்தமட்டில் இரு அணிகளும் ரன்மழை பொழியும் வகையிலே இந்த மைதானம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தரம்சாலாவில் சுழலைக் காட்டிலும் வேகப்பந்துவீச்சுக்கு மைதானம் ஒத்துழைக்கும் என்பதால் இரு அணியும் வேகப்பந்துவீச்சிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் என்று எதிர்பார்க்கலாம். இன்னும் சற்று நேரத்தில் நடக்கும் இந்த போட்டியை காண ரசிகர்கள் மைதானத்தில் குவிந்து வருகின்றனர்.
பலத்த போட்டி:
ஆர்சிபி அணியும், குஜராத் அணியும் இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில், இன்றைய போட்டியிலும் இரு அணியினரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவே விரும்புவார்கள். இன்றைய போட்டியில் தோல்வி அடையும் அணிக்கு இறுதிப்போட்டிக்குச் செல்வதற்கான குவாலிஃபயர் 2 போட்டியில் ஆட வாய்ப்பு கிடைக்கும். இருப்பினும், நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறவே இரு அணிகளும் ஆர்வம் காட்டும்.
ட்ரெண்டிங் செய்திகள்



















