மேலும் அறிய

RCB vs CSK: "மகேந்திர சிங் தோனி கிரீஸில் இருந்ததால்..." வெற்றிக்கு பின் திக் திக் நிமிடங்களை பகிர்ந்த ஆர்சிபி கேப்டன் ஃபாஃப்!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் கேப்டன் ஃபாஃப் டு பிளெஸ்சிஸ் தங்கள் கம் பேக் மற்றும் பிளே ஆஃப்க்கு சென்றது குறித்து பேசியுள்ளார்.

ஐபிஎல் 2024ன் நேற்றைய 68வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில், யாரும் எதிர்பார்க்காத வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. இதன்மூலம், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய நான்காவது அணி என்ற பெருமையுடன் எலிமினேட்டர் சுற்றில் விளையாட இருக்கிறது. அதே நேரத்தில் எப்படியாவது பிளே ஆஃப் சுற்றுக்கு சென்றுவிடும் என்று எதிர்பார்த்த சென்னை சூப்பர் கிங்ஸ் பயணம் இந்த சீசனில் முடிவுக்கு வந்தது.

இந்த வெற்றிக்குப் பிறகு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் கேப்டன் ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ் தங்கள் கம் பேக் மற்றும் பிளே ஆஃப்க்கு சென்றது குறித்து பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "என்ன ஒரு இரவு... நம்பமுடியாதது. இங்குள்ள சூழ்நிலையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது, இந்த சீசனின் கடைசி லீக் போட்டியில் இப்படி வெற்றி பெற்றது ஒரு பெரிய உணர்வு. குறிப்பாக இதுபோன்ற ஆடுகளத்தில் முதலில் பேட்டிங் செய்யும்போது ரன்கள் குவிப்பது எளிதானது அல்ல.

'இந்த சீசனில் இதுவரை நான் விளையாடியதில் இது மிகவும் சவாலான ஆடுகளம்...'

இந்த சீசனில் தான் இதுவரை விளையாடிய மிகவும் சவாலான ஆடுகளம். மழைக்குப் பிறகு நானும், விராட் கோலியும் களமிறங்கும்போது அதிகபட்சமாக 140-150 ரன்களை அடிக்கலாம் என யோசித்துக்கொண்டிருந்தோம். காரணம் அதற்கு முன் ஆடுகளத்தில் நிறைய தண்ணீர் இருந்ததாக நடுவர்கள் சொன்னார்கள். இதையடுத்து, மீண்டும் பேட்டிங் செய்ய வந்தபோது, ​​ராஞ்சி டெஸ்டின் ஐந்தாம் நாள் ஆடுகளம் போல் இந்த பிட்ச் இருக்கிறது என்று மிட்செல் சான்ட்னரிடம் கூறினேன். ஆனால், இதையும் மீறி இந்த ஆடுகளத்தில் 200 ரன்களை கடந்தது மிகவும் குறிப்பிடத்தக்கது. எங்கள் பேட்ஸ்மேன்கள் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக, கடந்த 6 போட்டிகளில்... ஆனால் இந்த ஆடுகளத்தில் அடித்த  ரன்களை எதிரணி அடிக்காமல் பாதுகாப்பதும் அவ்வளவு எளிதான விஷயம் இல்லை. 

"மகேந்திர சிங் தோனி கிரீஸில் இருந்ததால், நீங்கள்..."

மகேந்திர சிங் தோனி கிரீஸில் இருந்ததால், நீங்கள் சற்று நேரம் கூட அமைதியாக இருக்க முடியாது. அவர் பலமுறை பினிஷர் வேலையை சிறப்பாக செய்துள்ளார். ஆனால் ஈரமான பந்தில் பந்துவீசி நமது பந்துவீச்சாளர்கள் ரன்களை கட்டுப்படுத்திய விதம் பாராட்டுக்குரியது. இது தவிர, யாஷ் தயாள் இறுதிக்கட்டத்தில் சிறப்பாக பந்துவீசி அசத்தினார். எனது POTM விருதை யாஷ் தயாளுக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன். அவருக்குதான் இது சரியாக இருக்கும், ஈரமான பந்தில் ரன் கொடுக்காமல் இருப்பது அவ்வளவு எளிதானது அல்ல. மேலும் கடந்த 6 போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்று ப்ளே ஆஃப் சுற்றுக்கு வந்துவிட்டோம், இது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் நேரம். இன்று இந்த மகிழ்ச்சியுடன் உறங்க சென்றுவிட்டு, நாளை முதல் நாக் அவுட் போட்டிகளுக்கு தயாராக களமிறங்குவோம்” என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Namakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | CollectorNainar Nagendran Join ADMK : அதிமுகவில் மீண்டும் நயினார்?பாஜகவில் வெடித்த கலகம்!அ.மலை பக்கா ஸ்கெட்ச்Mayiladuthurai Murder | சாராய விற்ற கும்பல் தட்டிக்கேட்ட இளைஞர்கள் படுகொலை செய்த சம்பவம் | CrimePa Ranjith Slams MK Stalin | ”சாதிய வன்கொடுமை! ஒத்துக்கோங்க ஸ்டாலின்”பா. ரஞ்சித் சரமாரி கேள்வி! | DMK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் அபராதம்.. புதிய FASTag விதிகள் நாளை முதல் அமல்!
குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் அபராதம்.. புதிய FASTag விதிகள் நாளை முதல் அமல்!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
GG vs UPW, WPL 2025: முதல் வெற்றியை பெற போவது யார்? குஜராத் vs யு.பி பலப்பரீட்சை.. மைதானம் எப்படி? முழு விவரம்!
GG vs UPW, WPL 2025: முதல் வெற்றியை பெற போவது யார்? குஜராத் vs யு.பி பலப்பரீட்சை.. மைதானம் எப்படி? முழு விவரம்!
பாஜகவோ, திமுகவோ.. ஃபாசிச அணுகுமுறையை யாராக இருந்தாலும் எதிர்ப்போம்: விஜய் சூளுரை!
பாஜகவோ, திமுகவோ.. ஃபாசிச அணுகுமுறையை யாராக இருந்தாலும் எதிர்ப்போம்: விஜய் சூளுரை!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.