மேலும் அறிய

Pathirana in IPL: இலங்கையின் பெரிய சொத்தா இருப்பாரு - பத்திரனா குறித்து மனம் திறந்த தோனி..!

Pathirana in IPL: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் பந்து வீச்சாளர் பத்திரனா இலங்கை அணியின் பெரிய சொத்தாக இருப்பார் என தோனி கூறியுள்ளார்.

Pathirana in IPL: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் பந்து வீச்சாளர் பத்திரனா இலங்கை அணியின் பெரிய சொத்தாக இருப்பார் என தோனி கூறியுள்ளார். 

ஐபிஎல் போட்டியில் பணப்புழக்கம் என்னதான் அதிகமாக இருந்தாலும் இளம் வீரர்களை அடையாளப்படுத்தி அவர்களை சர்வதேச போட்டிகளில் களமிறங்குவதற்கான மிகப்பெரிய பாலமாக உள்ளது. ஐபிஎல் போட்டியினால் சர்வதேச போட்டிகளில் விளையாடியவர்கள் பலர் உள்ளனர். அவ்வகையில் சென்னை அணியின் இளம் நட்சத்திரமாக உள்ள பத்திரனா தனது சிறந்த பந்து வீச்சினால் எதிரணியினரை திணறவைப்பதுடன் விக்கெட்டுகளையும் அள்ளுகிறார். 

இவரது பந்து வீச்சு இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான மலிங்காவின் பந்து வீச்சினைப்போல் உள்ளது என பலரும் கூறிவருகின்றனர். இதற்கு ஏற்றது போல் மலிங்கா ஐபிஎல் போட்டிகளில் பந்து வீசியதையும் பத்திரனா பந்து வீசுவதையும் தொலைக்காட்சிகளில் ஒப்பிட்டு விவாதங்கள் நடத்தி வருகின்றனர். யார்க்கர்களை துல்லியமாக வீசும் இவரது பந்து வீச்சில் ரன்கள் எடுக்க பேட்ஸ்மேன்கள் திணறுகின்றனர் என்றே கூறவேண்டும். கடந்த ஆண்டே சென்னை அணிக்காக விளையாடிய பத்திரனா, இந்த ஆண்டு தான் மிகவும் கவனிக்கப்படும் வீரராக உள்ளார். இதுவரைப் 7 போட்டிகளில் விளையாடியுள்ள பத்திரனா 10 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். அதேபோல் 27.2 ஓவர்கள் பந்து வீசி 208 ரன்கள் மட்டும் தான் விட்டுக்கொடுத்துள்ளார். மிகச்சிறப்பாக பந்து வீசும் பத்திரனா குறித்து பலர் தங்களது கருத்துகளை கூறி வந்த நிலையில், மும்பை அணிக்கு எதிரான போட்டியை வென்ற பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி மனம் திறந்துள்ளார். 

அவர் கூறியதாவது, ”என்னுடைய தனிப்பட்ட அறிவுரை என்றால், பத்திரனா சிறப்பாக பந்து வீசுகிறார். அவர் டெஸ்ட் கிரிக்கெட் பக்கம் போகவே கூடாது. அவர் டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடினாலே போதும். அவரை இன்னும் சிறப்பாக தயார் செய்ய வேண்டும். வரும் காலத்தில் இலங்கை கிரிக்கெட் அணியின் மிகப்பெரிய சொத்தாக இருப்பார்” எனக் கூறியுள்ளார். 

அதேபோல் பத்திரனா, “ சென்னை அணி நிர்வாகம் எனக்கு நிறைய அனுபவத்தை கொடுக்கிறது. அதற்கு மிகவும் நன்றி. சென்னை அணியில் இருப்பது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது” என கூறியுள்ளார். 

இதற்கு முன்னர் இந்திய அணியில் நீண்டகாலமாக இடம் கிடைக்காமல் இருந்த ராஹானே சென்னை அணியில் விளையாட தொடங்கிய பின்னர் உலக் டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். இதற்கு தோனியின் மிகச்சரியான தேர்வு மற்றும் அவர்களுக்கான வாய்ப்பை ஏற்படுத்தி தந்ததால் தான் என பலரும் கூறிவருகினறனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget