மேலும் அறிய

Pathirana in IPL: இலங்கையின் பெரிய சொத்தா இருப்பாரு - பத்திரனா குறித்து மனம் திறந்த தோனி..!

Pathirana in IPL: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் பந்து வீச்சாளர் பத்திரனா இலங்கை அணியின் பெரிய சொத்தாக இருப்பார் என தோனி கூறியுள்ளார்.

Pathirana in IPL: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் பந்து வீச்சாளர் பத்திரனா இலங்கை அணியின் பெரிய சொத்தாக இருப்பார் என தோனி கூறியுள்ளார். 

ஐபிஎல் போட்டியில் பணப்புழக்கம் என்னதான் அதிகமாக இருந்தாலும் இளம் வீரர்களை அடையாளப்படுத்தி அவர்களை சர்வதேச போட்டிகளில் களமிறங்குவதற்கான மிகப்பெரிய பாலமாக உள்ளது. ஐபிஎல் போட்டியினால் சர்வதேச போட்டிகளில் விளையாடியவர்கள் பலர் உள்ளனர். அவ்வகையில் சென்னை அணியின் இளம் நட்சத்திரமாக உள்ள பத்திரனா தனது சிறந்த பந்து வீச்சினால் எதிரணியினரை திணறவைப்பதுடன் விக்கெட்டுகளையும் அள்ளுகிறார். 

இவரது பந்து வீச்சு இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான மலிங்காவின் பந்து வீச்சினைப்போல் உள்ளது என பலரும் கூறிவருகின்றனர். இதற்கு ஏற்றது போல் மலிங்கா ஐபிஎல் போட்டிகளில் பந்து வீசியதையும் பத்திரனா பந்து வீசுவதையும் தொலைக்காட்சிகளில் ஒப்பிட்டு விவாதங்கள் நடத்தி வருகின்றனர். யார்க்கர்களை துல்லியமாக வீசும் இவரது பந்து வீச்சில் ரன்கள் எடுக்க பேட்ஸ்மேன்கள் திணறுகின்றனர் என்றே கூறவேண்டும். கடந்த ஆண்டே சென்னை அணிக்காக விளையாடிய பத்திரனா, இந்த ஆண்டு தான் மிகவும் கவனிக்கப்படும் வீரராக உள்ளார். இதுவரைப் 7 போட்டிகளில் விளையாடியுள்ள பத்திரனா 10 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். அதேபோல் 27.2 ஓவர்கள் பந்து வீசி 208 ரன்கள் மட்டும் தான் விட்டுக்கொடுத்துள்ளார். மிகச்சிறப்பாக பந்து வீசும் பத்திரனா குறித்து பலர் தங்களது கருத்துகளை கூறி வந்த நிலையில், மும்பை அணிக்கு எதிரான போட்டியை வென்ற பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி மனம் திறந்துள்ளார். 

அவர் கூறியதாவது, ”என்னுடைய தனிப்பட்ட அறிவுரை என்றால், பத்திரனா சிறப்பாக பந்து வீசுகிறார். அவர் டெஸ்ட் கிரிக்கெட் பக்கம் போகவே கூடாது. அவர் டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடினாலே போதும். அவரை இன்னும் சிறப்பாக தயார் செய்ய வேண்டும். வரும் காலத்தில் இலங்கை கிரிக்கெட் அணியின் மிகப்பெரிய சொத்தாக இருப்பார்” எனக் கூறியுள்ளார். 

அதேபோல் பத்திரனா, “ சென்னை அணி நிர்வாகம் எனக்கு நிறைய அனுபவத்தை கொடுக்கிறது. அதற்கு மிகவும் நன்றி. சென்னை அணியில் இருப்பது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது” என கூறியுள்ளார். 

இதற்கு முன்னர் இந்திய அணியில் நீண்டகாலமாக இடம் கிடைக்காமல் இருந்த ராஹானே சென்னை அணியில் விளையாட தொடங்கிய பின்னர் உலக் டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். இதற்கு தோனியின் மிகச்சரியான தேர்வு மற்றும் அவர்களுக்கான வாய்ப்பை ஏற்படுத்தி தந்ததால் தான் என பலரும் கூறிவருகினறனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
ABP Premium

வீடியோ

PC Sreeram supports Vijay|‘’அதிகார துஷ்பிரயோகம்!இது டிரம்ப் மண் கிடையாதுவிஜய்க்கு PC ஸ்ரீராம்SUPPORT
Vijay CBI Enquiry | CBI விசாரணையில் TWIST தேர்தலுக்கு முன் குற்றப்பத்திரிகை? அடுத்த சிக்கலில் விஜய்?
Villupuram News|முளைப்பாரி..கும்மியாட்டம்!களைகட்டிய பேரங்கியூர் தென்பெண்ணை ஆற்று திருவிழா
Woman Police with Baby|Traffic-ல் சிக்கிய ஆம்புலன்ஸ்!கைக்குழந்தையுடன் கடமை! மாஸ் காட்டிய பெண் காவலர்
”முடிவு என்கிட்ட தான்” ராகுல் போட்ட ORDER! டெல்லி MEETING-ல் நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
HC Judge Vs Savukku Shankar: “நீதிமன்றத்தையும் நீங்கள் மிரட்ட முடியாது“; சவுக்கு சங்கரை விளாசிய நீதிபதி; கடும் எச்சரிக்கை
“நீதிமன்றத்தையும் நீங்கள் மிரட்ட முடியாது“; சவுக்கு சங்கரை விளாசிய நீதிபதி; கடும் எச்சரிக்கை
Tata Punch vs Nexon: டாடா பஞ்ச் டாப் எண்ட்-ஆ.? மிட்-ஸ்பெக் நெக்ஸான்-ஆ.? உங்கள் பணத்திற்கு சிறந்த SUV எது.?
டாடா பஞ்ச் டாப் எண்ட்-ஆ.? மிட்-ஸ்பெக் நெக்ஸான்-ஆ.? உங்கள் பணத்திற்கு சிறந்த SUV எது.?
தைலாபுரத்தில் திடீர் நிலநடுக்கம்! - மூத்த நிர்வாகிகள் கொடுத்த தவறான தகவல்? ராமதாஸ் குழப்பம்!
தைலாபுரத்தில் திடீர் நிலநடுக்கம்! - மூத்த நிர்வாகிகள் கொடுத்த தவறான தகவல்? ராமதாஸ் குழப்பம்!
திருமணம் ஆகாதவர்களுக்கு அவசர கால சேமிப்பு ஏன் அவசியம்?
திருமணம் ஆகாதவர்களுக்கு அவசர கால சேமிப்பு ஏன் அவசியம்?
Embed widget