மேலும் அறிய

MS Dhoni: கேப்டனா? மெண்ட்டரா? - தோல்விக்குப் பின் தோனி பேசிய பேச்சும்.. அடுத்த ஐபிஎல் ஐடியாவும்!

“என்னுடைய கடைசி ஐபிஎல் போட்டி சென்னையில், சென்னை ரசிகர்கள் முன்னிலையில்தான் நடக்கும். எனக்கு சென்னையில்தான் ஃபேர்வெல்” - தோனி

2021 ஐபிஎல் சீசனின் லீக் சுற்று இன்றுடன் முடிவடைகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கிட்டத்தட்ட நான்காவது இடத்தை பிடித்துவிட்டது. எனினும் கடைசி போட்டி வரையிலான பரபரப்பு இருக்கும் வகையில், கடைசி லீக் போட்டியை மும்பை அணி எப்படி நிறைவு செய்யப்போகிறது என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. 

இந்த லீக் சுற்று போட்டிகள் நடந்து முடிவதற்குள் எதிர்பாராத அறிவிப்புகள், வெற்றிகள், தோல்விகள் என இந்த ஐபிஎல் சீசனில் பல சம்பவங்கள் அரங்கேறின. அதில் குறிப்பிடும்படியாக இருந்தது முக்கிய அணிகளின் கேப்டன்சி பொறுப்புகளுக்கு ஏற்பட இருக்கும் மாற்றங்கள். 

பெங்களூரு அணி கேப்டன் கோலி, இந்த சீசனோடு தனது கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துவிட்டார். இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் சென்னை அணி கேப்டன் தோனி, தனது ஐபிஎல் கரியர் குறித்து, கேப்டன்சி பொறுப்பு குறித்தும் அவ்வப்போது சில ‘குழப்பமான’ கருத்துகளை வெளியிட்டு வருகிறார். 

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக சென்னை விளையாடிய கடைசி லீக் போட்டியின்போது பேசிய தோனி, “அடுத்த ஐபிஎல் சீசனிலும் என்னை ‘யெல்லவ்’ ஜெர்ஸியில் பார்க்கலாம். ஆனால், சிஎஸ்கே அணிக்காக விளையாடுவேனா என்பதை உறுதியாக சொல்ல முடியாது. எதிர்ப்பாராத சம்பவங்கள் நடக்க இருக்கின்றது. புதிதாக இரண்டு அணிகள் சேர்க்கப்பட உள்ளன. இதனால், ஐபிஎல் தொடரின் அணியின் ஒரு வீரரை தக்க வைத்து கொள்வது தொடர்பான விதிமுறைகளில் என்னென்ன மாற்றங்கள் இருக்கும் என நமக்கு தெரியாது” என தெரிவித்துள்ளார்.

சஸ்பென்ஸ் வைக்கும் தோனி:

முன்னதாக, இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 75-வது ஆண்டு நிறைவு விழாவில் பேசிய தோனி, “என்னுடைய கடைசி ஐபிஎல் போட்டி சென்னையில், சென்னை ரசிகர்கள் முன்னிலையில்தான் நடக்கும். எனக்கு சென்னையில்தான் ஃபேர்வெல்” என தெரிவித்திருந்தார். இதன் மூலம், அடுத்த ஐபிஎல் சீசனில் தோனி நிச்சயம் விளையாடுவார் என்பது உறுதியாகியுள்ளது. இந்த சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் நிலையில், அடுத்த ஆண்டு இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடைபெற்ற சென்னையில் போட்டிகள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது.

இவ்வாறு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அவர் தொடர்ந்து விளையாடு இருக்கிறார் என்பது போல அவ்வப்போது குறிப்பிடுகிறார் தோனி. ஆனால், அணி வீரராக தொடர்வாரா அல்லது ஆலோசகராக / பயிற்சியாளராக நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றதா என்பதை பற்றி சொல்லாமல் சொல்லி இருக்கிறார் தோனி. அவருடைய கருத்துகள் குழப்பத்தை ஏற்படுத்தினாலும், தோனி தொடர்ந்து கிரிக்கெட்டிங் வட்டாரத்தில் இருக்கப்போகிறார் என்ற செய்தி ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது. 

எனினும், இந்த சீசனின் லீக் சுற்றின் கடைசி 3 போட்டிகளிலும் சென்னை அணி தோல்வியை தழுவியுள்ளது. தோல்வியுடன் ப்ளே ஆஃப் சுற்றில் விளையாட இருக்கும் சென்னை அணியின் மிகப்பெரிய மைனஸ், மிடில் ஆர்டர்தான். தொடர் தோல்விகள் குறித்து தோனியிடன் கேட்டதற்கு, “ ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முக்கிய போட்டிகளில் சிறப்பாக விளையாடியுள்ளோம். ஒரு சில போட்டிகளில் சோப்பிக்காமல் அடுத்து வரும் போட்டிகளில் கம்-பேக் கொடுப்பதை தவிர்க்க முடியாது.” என தெரிவித்துள்ளார். நான்காவது முறையாக கோப்பையை கைப்பற்ற ப்ளே ஆஃப் சுற்றில் சொதப்பாமல் விளையாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
New Year and Christmas special train: 12 நாள் தொடர் விடுமுறை.! நாகர்கோவில், ஈரோடு, வேளாங்கண்ணி, பெங்களூருக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
12 நாள் தொடர் விடுமுறை.! நாகர்கோவில், ஈரோடு, வேளாங்கண்ணி, பெங்களூருக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
Bahubali Rocket: இந்தியாவின் பாகுபலி ராக்கெட் தெரியுமா? ப்ளூபேர்ட் என்றால் என்ன? டவரே இல்லாமல் சிக்னல்...
Bahubali Rocket: இந்தியாவின் பாகுபலி ராக்கெட் தெரியுமா? ப்ளூபேர்ட் என்றால் என்ன? டவரே இல்லாமல் சிக்னல்...
ABP Premium

வீடியோ

”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
New Year and Christmas special train: 12 நாள் தொடர் விடுமுறை.! நாகர்கோவில், ஈரோடு, வேளாங்கண்ணி, பெங்களூருக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
12 நாள் தொடர் விடுமுறை.! நாகர்கோவில், ஈரோடு, வேளாங்கண்ணி, பெங்களூருக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
Bahubali Rocket: இந்தியாவின் பாகுபலி ராக்கெட் தெரியுமா? ப்ளூபேர்ட் என்றால் என்ன? டவரே இல்லாமல் சிக்னல்...
Bahubali Rocket: இந்தியாவின் பாகுபலி ராக்கெட் தெரியுமா? ப்ளூபேர்ட் என்றால் என்ன? டவரே இல்லாமல் சிக்னல்...
உயிரை துச்சமாய் மதித்து பணியாற்றியோர்; ஒப்பந்த செவிலியர்களை உடனே பணி நிரந்தரம் செய்ய எழும் கோரிக்கை!
உயிரை துச்சமாய் மதித்து பணியாற்றியோர்; ஒப்பந்த செவிலியர்களை உடனே பணி நிரந்தரம் செய்ய எழும் கோரிக்கை!
TN WEATHER ALERT: மீனவர்களே அலர்ட்... 65 கி.மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று- வானிலை மையம் லேட்டஸ்ட் அப்டேட்
மீனவர்களே அலர்ட்... 65 கி.மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று- வானிலை மையம் லேட்டஸ்ட் அப்டேட்
New Car Launch: ஜனவரியில் களைகட்டப்போகும் கார் சந்தை.. 7 மாடல்கள், வரிசை கட்டும் ப்ராண்ட்கள் - விலை, தேதி?
New Car Launch: ஜனவரியில் களைகட்டப்போகும் கார் சந்தை.. 7 மாடல்கள், வரிசை கட்டும் ப்ராண்ட்கள் - விலை, தேதி?
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Embed widget