மேலும் அறிய

Hero Intercontinental Cup: ஒடிசாவில் தொடங்கிய ஹீரோ இன்டர்காண்டினென்டல் கோப்பை போட்டி - முதல்வர் நவீன் பட்நாயக் அளித்த உறுதி

Hero Intercontinental Cup: கால்பந்து போட்டி வளர்ச்சிக்கு நாங்கள் முழு ஆதரவு அளிப்போம் என இண்டர்காண்டினட்டல் கோப்பைக்கான தொடக்க போட்டியில் முதல்வர் உறுதி அளித்துள்ளார்.

Hero Intercontinental Cup: 2023 ஆம் ஆண்டுக்கான இண்டர்காண்டினல் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி நேற்று அதாவது ஜூன் 9ஆம் தேதி ஒடிசாவில் தொடங்கியது. இதில் இந்தியா, மங்கோலியா, லெபனான் மற்றும் வனுவாடு ஆகிய நாடுகள் களமிறங்கியுள்ளன. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் மோதிக்கொள்ளும்.  

ஹீரோ இன்டர்காண்டினென்டல் கோப்பைக்கான தொடக்க நிகழ்வில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் கலந்து கொண்டார். புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் ஹீரோ இன்டர்காண்டினென்டல் கோப்பை 2023 வெள்ளிக்கிழமை அதாவது நேற்று, தொடங்கியதால், புவனேஸ்வர் நகரம் உற்சாகத்தில் மூழ்கியது. காரணம் இந்தியாவில் மற்ற மாநிலங்களை விடவும் ஒடிசா மாநிலத்தில்தான் ஹாக்கி, கால்பந்து உள்ளிட்ட விளையாட்டுகள் அதிகப்படியான மக்களால் விளையாடப்படும் மற்றும் விரும்பப்படும் விளையாட்டுகளாக உள்ளது.  இந்திய தேசிய கால்பந்து அணி ஒடிசாவில் விளையாடுவது இதுவே முதல் முறை. இந்த முக்கியமான போட்டியில், முதல்வர் நவீன் பட்நாயக் கலந்து கொண்டு, இந்தியா மற்றும் மங்கோலியா அணிகளைச் சந்தித்து தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். மேலும், இந்த விழாவில், AIFF (அனைத்து இந்திய கால்பந்து சம்மேளம்) தலைவர் கல்யாண் சௌபே, மற்றும் பொதுச் செயலாளர் டாக்டர் ஷாஜி பிரபாகரன் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர்.


Hero Intercontinental Cup: ஒடிசாவில் தொடங்கிய ஹீரோ இன்டர்காண்டினென்டல் கோப்பை போட்டி - முதல்வர் நவீன் பட்நாயக் அளித்த உறுதி

இந்த போட்டிக்கு முன்னர் பேசிய ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், "ஒடிசாவில் உள்ள மைதானங்களில் மிகவும் முக்கியமான மைதனாமான கலிங்கா ஸ்டேடியத்தில் மீண்டும் ஒரு தடகள கால்பந்து நிகழ்வை ஏற்பாடு செய்ததில் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இது இந்தியாவில் ஒரு முக்கிய கால்பந்து மையமாக தன்னை நிலைநிறுத்துவதற்கான ஒடிசாவின் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது. இதில் பங்கேற்கும் சர்வதேச அணிகள் ஒரு சிறந்த அனுபவத்தைப் பெறும் என்று நான் நம்புகிறேன். இந்த மைதானத்தில், ஒடிசாவைச் சேர்ந்த கால்பந்து ஆர்வலர்கள் விளையாட்டினை நேரில் காணும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர். ஒடிசாவைச் சேர்ந்த இளம் கால்பந்து வீரர்கள் தங்களது சீனியர் வீரர்களைப் பார்த்து கற்றுக்கொள்ள இந்த போட்டியை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும்" என்றார்.

மேலும், கால்பந்தாட்டத்தின் வளர்ச்சிக்கு முழு ஆதரவு அளிப்பதாக தலைவர் AIFF கல்யாண் சௌபேக்கு முதல்வர் உறுதியளித்தார். அதேபோல், ஹூரோ இண்டர்காண்டினல் கால்பந்து சாம்பியன்ஷிப்பை நடத்தியற்காக முதலமைச்சருக்கு ஷ் சௌபே நன்றி தெரிவித்ததோடு, மாநிலத்தில் கால்பந்து வளர்ச்சியில் மாநில அரசின் பங்கைப் பாராட்டினார்.


Hero Intercontinental Cup: ஒடிசாவில் தொடங்கிய ஹீரோ இன்டர்காண்டினென்டல் கோப்பை போட்டி - முதல்வர் நவீன் பட்நாயக் அளித்த உறுதி

ஒடிசாவின் ஆர்வம்

ஒடிசா கடந்த சில ஆண்டுகளாக கால்பந்து வளர்ச்சியில் முதலீடு செய்து வருகிறது. FIFA 17 வயதுக்குட்பட்ட பெண்கள் உலகக் கோப்பை அக்டோபர் 2022 இல் வெற்றிகரமாக ஏற்பாடு செய்து நடத்தியது. குறிப்பாக கலிங்கா ஸ்டேடியத்தில் பல்வேறு தேசிய அளவிலான போட்டிகள் மற்றும் ISL  (இந்தியன் சூப்பர் லீக்), IWL (இந்தியன் மகளிர் லீக்), சூப்பர் கோப்பை போன்ற லீக்குகளுக்கு நடத்தும் இடமாக உள்ளது. தேசிய இளைஞர் அணிகள் (18 மற்றும் 16 வயதுக்குட்பட்டவர்கள்) ஒடிசா அரசின் ஆதரவுடன் மிகச்சிறபாக விளையாடி வருவதும் குறிபிடத்தக்கது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

திமுக கூட்டணி கட்சிகள் இணையுமா? ”அவங்க வருவாங்க” ஷாக் கொடுத்த  நயினார்
திமுக கூட்டணி கட்சிகள் இணையுமா? ”அவங்க வருவாங்க” ஷாக் கொடுத்த நயினார்
AC Update: இனி லட்சங்களை கொட்டினாலும் ஏசியில் 16 டிகிரி செல்சியஸ் கிடையாது - சிரிக்கும் சூரியன், மக்கள் ஷாக்
AC Update: இனி லட்சங்களை கொட்டினாலும் ஏசியில் 16 டிகிரி செல்சியஸ் கிடையாது - சிரிக்கும் சூரியன், மக்கள் ஷாக்
TANCET Counselling: எம்பிஏ, எம்சிஏ படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்; எப்படி? கடைசி தேதி, கலந்தாய்வு.. முழு விவரம்!
TANCET Counselling: எம்பிஏ, எம்சிஏ படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்; எப்படி? கடைசி தேதி, கலந்தாய்வு.. முழு விவரம்!
தீரப்போகும் டிராபிக் தலைவலி! 5000 கோடி மதிப்பீடு... 20 கி.மீ வரப்போகும் பாலம்... எங்கு தெரியுமா?
தீரப்போகும் டிராபிக் தலைவலி! 5000 கோடி மதிப்பீடு... 20 கி.மீ வரப்போகும் பாலம்... எங்கு தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சாப்பிட்டபடி பஸ் ஒட்டிய DRIVER பீதியில் உறைந்த பயணிகள்! ஆம்னி நிறுவனம் அதிரடி! | Careless Drivingகைதாகும் வேல்முருகன்?பாய்ந்தது POCSO வழக்கு சம்பவம் செய்த விஜய்! | Velmurugan TVK Vijay Controversy”என்ன தான் இருந்தாலும் நண்பன்”மஸ்க் குறித்து ட்ரம்ப் உருக்கம் முடிவுக்கு வரும் மோதல்? Donald Trump vs Elon Muskவிஜய் பற்றவைத்த நெருப்பு! குடைச்சல் கொடுக்கும் கூட்டணியினர்! தலைவலியில் திமுக, அதிமுக

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திமுக கூட்டணி கட்சிகள் இணையுமா? ”அவங்க வருவாங்க” ஷாக் கொடுத்த  நயினார்
திமுக கூட்டணி கட்சிகள் இணையுமா? ”அவங்க வருவாங்க” ஷாக் கொடுத்த நயினார்
AC Update: இனி லட்சங்களை கொட்டினாலும் ஏசியில் 16 டிகிரி செல்சியஸ் கிடையாது - சிரிக்கும் சூரியன், மக்கள் ஷாக்
AC Update: இனி லட்சங்களை கொட்டினாலும் ஏசியில் 16 டிகிரி செல்சியஸ் கிடையாது - சிரிக்கும் சூரியன், மக்கள் ஷாக்
TANCET Counselling: எம்பிஏ, எம்சிஏ படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்; எப்படி? கடைசி தேதி, கலந்தாய்வு.. முழு விவரம்!
TANCET Counselling: எம்பிஏ, எம்சிஏ படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்; எப்படி? கடைசி தேதி, கலந்தாய்வு.. முழு விவரம்!
தீரப்போகும் டிராபிக் தலைவலி! 5000 கோடி மதிப்பீடு... 20 கி.மீ வரப்போகும் பாலம்... எங்கு தெரியுமா?
தீரப்போகும் டிராபிக் தலைவலி! 5000 கோடி மதிப்பீடு... 20 கி.மீ வரப்போகும் பாலம்... எங்கு தெரியுமா?
AK64 : மீண்டும் இணையும் குட் பேட் அக்லி கூட்டணி...சிரிக்கவா அழவா என்று குழப்பத்தில் ரசிகர்கள்...
AK64 : மீண்டும் இணையும் குட் பேட் அக்லி கூட்டணி...சிரிக்கவா அழவா என்று குழப்பத்தில் ரசிகர்கள்...
Suriya 46 : தொடங்கியது சூர்யா 46 படத்தின் படப்பிடிப்பு...போஸ்டர் வெளியிட்ட படக்குழு
Suriya 46 : தொடங்கியது சூர்யா 46 படத்தின் படப்பிடிப்பு...போஸ்டர் வெளியிட்ட படக்குழு
Crime: காமத்தால் குவியும் பிணங்கள், திருமணங்களை சிதைக்கும் அஃபயர் - துண்டுகளாகும் உடல்கள், தற்கொலை
Crime: காமத்தால் குவியும் பிணங்கள், திருமணங்களை சிதைக்கும் அஃபயர் - துண்டுகளாகும் உடல்கள், தற்கொலை
UP Govt: ”செத்து நாலு மாசம் ஆச்சு, கண்டு கொள்ளாத யோகி” 82 பேர் பலி, 37 என பொய் சொல்லும் உ.பி., அரசு?
UP Govt: ”செத்து நாலு மாசம் ஆச்சு, கண்டு கொள்ளாத யோகி” 82 பேர் பலி, 37 என பொய் சொல்லும் உ.பி., அரசு?
Embed widget