மேலும் அறிய

World Cup 2023: காலி ஸ்டேடியத்தில் நடைபெறும் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி.. டிக்கெட்டை திருப்பிதரும் பிசிசிஐ..!

பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து இடையேயான பயிற்சி போட்டியை பார்வையாளர்கள் இல்லாமல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஒருநாள் உலகக் கோப்பை போட்டியானது தொடங்க இன்னும் சரியாக 14 நாட்களே உள்ளது. இந்த போட்டிக்கு தயாராகும் வகையில் அனைத்து அணிகளும் பயிற்சி போட்டிகளில் விளையாட இருக்கிறது. 

இந்த பயிற்சி ஆட்டங்கள் வருகின்ற செப்டம்பர் 29 முதல் தொடங்குகிறது. இந்த நாளில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து இடையேயான போட்டி உட்பட மொத்தம் 3 போட்டிகள் நடைபெறுகின்றன. இருப்பினும்,  பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து இடையேயான பயிற்சி போட்டியை பார்வையாளர்கள் இல்லாமல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் இரு அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டத்தை காண ரசிகர்கள் மைதானத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என ஐசிசி சார்பில் கூறப்பட்டுள்ளது. ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டிக்கு போதிய பாதுகாப்பு வழங்க முடியாத காரணத்தால் இந்த முடிவு எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போட்டிக்கு டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு பணத்தை திருப்பி அளிக்கப்படும் என பிசிசிஐ உறுதி அளித்துள்ளது. 

அன்றைய நாளில் என்னென்ன பயிற்சி போட்டிகள்..?

செப்டம்பர்-29: மதியம் 2 மணி

  • வங்கதேசம் vs இலங்கை
  • ஆப்கானிஸ்தான் vs தென்னாப்பிரிக்கா
  • நியூசிலாந்து vs பாகிஸ்தான் 

பாதுகாப்பு வழங்க முடியாத காரணம் என்ன..? 

வருகின்ற செப்டம்பர் 29ம் தேதி பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து இடையேயான பயிற்சி ஆட்டத்தின் நாளில் ஹைதராபாத்தில் விநாயகர் வர்ஷா மற்றும் மிலன் -உன்-நபி ஊர்வலம் நடைபெற இருக்கிறது. எனவே, இந்த நிகழ்ச்சிகளுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக, இந்த போட்டிக்கு போதிய பாதுகாப்பை வழங்க முடியாததால், போட்டியை ஒத்திவைக்குமாறு ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்திற்கு (HCA) நகர காவல்துறை அறிவுறுத்தியது. ஆனால் ஏற்கனவே பலமுறை உலகக் கோப்பை அட்டவணையை மாற்றிவிட்டதால் ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் கோரிக்கையை ஏற்பாட்டாளர்கள் நிராகரித்தனர். தற்போது இந்த போட்டியை பார்வையாளர்கள் இல்லாமல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அக்டோபர் 9 மற்றும் அக்டோபர் 10 ஆகிய தேதிகளில் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் தொடர்ந்து இரண்டு உலகக் கோப்பை 2023 லீக் போட்டிகள் நடைபெறுவதற்கு பாதுகாப்பு முகமைகள் முன்னதாக ஆட்சேபனை தெரிவித்தன. அக்டோபர் 10 ஆம் தேதி பாகிஸ்தான் vs இலங்கை மற்றும் அக்டோபர் 9 ஆம் தேதி நியூசிலாந்து vs நெதர்லாந்து இடையிலான போட்டிகள் நடைபெறுகிறது. ஒரு போட்டிக்காக சுமார் 3,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், பாகிஸ்தான் அணியினர் தங்கியுள்ள ஹோட்டலிலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

ஏற்கனவே அட்டவணையில் பல மாற்றங்கள்:

2023 உலகக் கோப்பைக்கு முன்னதாக வெளியிடப்பட்ட அட்டவணையில் ஏற்கனவே பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி சுமார் ஒன்பது போட்டிகள் மாற்றம் செய்யப்பட்டது. இதில் இந்தியா, பாகிஸ்தான் இடையிலான போட்டியும் அடங்கும். முன்னதாக, இந்தியா - பாகிஸ்தான் இடையிலான உலகக் கோப்பை போட்டியை அக்டோபர் 15 ஆம் தேதி குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் அன்று, நவராத்திரி விழாவின் முதல் நாள் என்பதால் குஜராத் முழுவதும் உற்சாகமாக விழா கொண்டாடப்பட இருக்கிறது. எனவே, இரண்டிற்கும் உரிய பாதுகாப்பு வழங்கப்பட முடியாது என கருதி, போட்டியை ஒரு நாள் முன்னதாக (அதாவது, அக்டோபர் 15ம் தேதிக்கு பதிலாக அக்டோபர் 14ம் தேதி) நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
Ra Sambandhan: தமிழர்களுக்கு அதிர்ச்சி..! இலங்கை எம்.பி., இரா. சம்பந்தன் காலமானார்
Ra Sambandhan: தமிழர்களுக்கு அதிர்ச்சி..! இலங்கை எம்.பி., இரா. சம்பந்தன் காலமானார்
New Criminal Laws: நாடு முழுவதும் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - கடும் தண்டனைகள் என்ன?
New Criminal Laws: நாடு முழுவதும் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - கடும் தண்டனைகள் என்ன?
Breaking News LIVE: அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - குறைந்த வணிக சிலிண்டரின் விலை
Breaking News LIVE: அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - குறைந்த வணிக சிலிண்டரின் விலை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
Ra Sambandhan: தமிழர்களுக்கு அதிர்ச்சி..! இலங்கை எம்.பி., இரா. சம்பந்தன் காலமானார்
Ra Sambandhan: தமிழர்களுக்கு அதிர்ச்சி..! இலங்கை எம்.பி., இரா. சம்பந்தன் காலமானார்
New Criminal Laws: நாடு முழுவதும் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - கடும் தண்டனைகள் என்ன?
New Criminal Laws: நாடு முழுவதும் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - கடும் தண்டனைகள் என்ன?
Breaking News LIVE: அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - குறைந்த வணிக சிலிண்டரின் விலை
Breaking News LIVE: அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - குறைந்த வணிக சிலிண்டரின் விலை
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
Embed widget