மேலும் அறிய

Kohli Press Conference: ‛பதவி விலகலை தெரிவித்த போது பிசிசிஐ தடுக்கவில்லை’ -போட்டு உடைத்த கோலி!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது ரோஹித் ஷர்மாவின் திறமைகளை அதிகம் இழக்க நேரிடும் என இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது ரோஹித் ஷர்மாவின் திறமைகளை அதிகம் இழக்க நேரிடும் என இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், “எனக்கும் ரோகித் சர்மாவுக்கும் இடையே எந்த விரிசலும் இல்லை. இரண்டு வருடமாக சொல்லிக்கொண்டு இருக்கிறேன். இப்போது சோர்ந்து போய் விட்டேன். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது ரோஹித் ஷர்மாவின் திறமைகளை அதிகம் இழக்க நேரிடும். 


Kohli Press Conference: ‛பதவி விலகலை தெரிவித்த போது பிசிசிஐ தடுக்கவில்லை’ -போட்டு உடைத்த கோலி!

நான் ஒருநாள் போட்டியில் விளையாட தயாராக இருக்கிறேன். தயாராக இருந்தேன். என்னைப் பொறுத்த வரையில், நான் எப்போதும் தேர்வுக்கு தயாராக இருக்கிறேன். எப்போதும் விளையாட ஆர்வமாக இருந்தேன்.

டி20 கேப்டன் பதவியை விட்டுக்கொடுக்கும் முன் பிசிசிஐயிடம் என் கருத்தை சொன்னேன். அதை பிசிசிஐ வெகுவாக ஏற்றுக்கொண்டது. அதில் எந்த தவறும் இல்லை. இது ஒரு முற்போக்கான நடவடிக்கை என்று கூறி நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கேப்டனாக தொடர்வேன் என்றும் அவர்களிடம் கூறினேன். அவர்கள் ஆலோசனைக்கு பிறகு நான் ஒருநாள் போட்டி கேப்டனாக நான் இருக்கமாட்டேன் எனக் கூறினார்கள். ஓகே ஃபைன் என்று கூறிவிட்டேன். டி20 கேப்டன் பதவியில் இருந்து வெளியேறுகிறேன் எனக்கூறும்போது வேண்டாம் என யாரும் தடுக்கவில்லை” எனத் தெரிவித்தார். 

 

தென்னாப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் இந்திய அணி, 3 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர்களிலும் டி20 தொடரிலும் விளையாட உள்ளது.  டி20 தொடர் விளையாடுவது பற்றி பின்னர் அறிவிக்கப்படும் என பிசிசிஐ தெரிவித்திருக்கிறது.

ரோஹித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டதால் தென்னாப்ரிகாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து அவர் விலகுவதாக அறிவித்திருக்கும் நேரத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் போட்டிகளில் இருந்து விராட் கோலி விலகுவதாக தகவல் வெளியானது. பிசிசிஐ இதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும் தனிப்பட்ட காரணங்களுக்காக கோலி விலகுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது கிரிக்கெட் வட்டாரத்தில் பேசு பொருளானது. 

இதனிடையே இதுகுறித்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், "விளையாட்டுதான் மிக உயர்ந்தது. விளையாட்டைவிட யாரும் உயர்ந்தவர்கள் அல்ல. எந்த வீரர்களிடையே என்ன நடக்கிறது என்பதை என்னால் கூற முடியாது. அது சம்பந்தப்பட்ட கூட்டமைப்புகள் / சங்கங்களின் வேலை. அவர்கள் இதுகுறித்து பேசினால் நன்றாக இருக்கும்" எனக் கூறியிருந்தார். 

முன்னதாக, கோலி கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டது குறித்து விளக்கமளித்த பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி  “நான் தனிப்பட்ட முறையில் கோலியிடம் டி20 கேப்டன்சியை விட வேண்டாம் என கூறினேன். அவருக்கு பணிச்சுமை அதிகமாக இருந்தது என்பது எனக்கும் தெரியும். அவர் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர். இந்திய அணியை நீண்டகாலமாக வழிநடத்துகிறார். நீண்டகாலம் அணியை வழிநடத்தும்போது இதெல்லாம் நடக்கும். நானும் கேப்டனாக இருந்திருக்கிறேன் என்பதால் எனக்கு தெரியும். 

அதேவேளையில், தேர்வாளர்கள் டி20 மற்றும் ஒருநாள் அணிகளை வெவ்வேறு கேப்டன்கள் வழிநடத்துவதை விரும்பவில்லை. அதனால் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஒரு சிறந்த அணியில் நிறைய லீடர்கள் இருக்க முடியாது” என்று தெரிவித்திருந்தார். 

கங்குலி இவ்வாறு தெரிவித்திருந்த நிலையில் கோலி தன்னிடம் டி20 கேப்டன்சியில் இருந்து விலகியதாக கூறியபோது யாரும் தடுக்கவில்லை என கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் யார் பொய் சொல்கிறார்கள் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. 

தலைப்பு செய்திகள்

Watch Video: ஃபயர் மோடில் டிஎஸ்பி சிராஜ் பேட்டிங்.. ஹாட்ரிக் சிக்ஸர்.. கொண்டாடும் ரசிகர்கள்!
Watch Video: ஃபயர் மோடில் டிஎஸ்பி சிராஜ் பேட்டிங்.. ஹாட்ரிக் சிக்ஸர்.. கொண்டாடும் ரசிகர்கள்!
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Asia Cup 2027: ஆசிய கோப்பை அட்டவணை - வங்கதேசத்தில் பவுன்சர் பிட்ச்கள் -இந்தியா பயணிக்குமா?
ஆசிய கோப்பை 2027 அட்டவணை - வங்கதேசத்தில் பவுன்சர் பிட்ச்கள் -இந்தியா பயணிக்குமா?
உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிரடி மாற்றம்: புதுச்சேரி அணியில் களம் இறங்கும் பஞ்சாப் கிங்ஸ் துணை கேப்டன்!
உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிரடி மாற்றம்: புதுச்சேரி அணியில் களம் இறங்கும் பஞ்சாப் கிங்ஸ் துணை கேப்டன்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Slams CM Vijay : ‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
EPS vs Cv Shanmugam :சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
Donald Trump: கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
CM Vijay: பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
திரிஷா அக்காவை யார் தவறா பேசினாலும் விட மாட்டோம்.! ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக கொந்தளித்த ரசிகர் மன்றம்
திரிஷா அக்காவை யார் தவறா பேசினாலும் விட மாட்டோம்.! ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக கொந்தளித்த ரசிகர் மன்றம்
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
RBI Loan Recovery: லோன் வசூல் நடவடிக்கைகள் - கடும் கட்டுப்பாடுகளை விதித்த ஆர்பிஐ - புதிய விதிகள் என்ன?
லோன் வசூல் நடவடிக்கைகள் - கடும் கட்டுப்பாடுகளை விதித்த ஆர்பிஐ - புதிய விதிகள் என்ன?
Embed widget