மேலும் அறிய

India in WTC Final: பும்ரா, பண்ட் வரிசையில் ஷ்ரேயர் ஐயரும் காயம்.. WTC இறுதிப்போட்டியில் இந்தியாவின் நிலை என்ன?

பும்ரா, பண்ட் வரிசையில் ஷ்ரேயாஸ் ஐயரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

பும்ரா, பண்ட் வரிசையில் ஷ்ரேயாஸ் ஐயரும் இந்திய கிரிக்கெட் அணிக்காக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்ரேயாஸ் அய்யருக்கு அறுவை சிகிச்சை:

முதுகுப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக சிகிச்சை பெற்று வந்த இந்திய கிரிக்கெட் அணியின் நடுகள வீரரான ஷ்ரேயாஸ் ஐயர், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பினார். ஆனால், நான்காவது போட்டியின் போது மீண்டும் முதுகுப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக, போட்டியில் இருந்து பாதியிலேயே விலகினார். அதைதொடர்ந்து, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்தும் விலகுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், அவருக்கு முதுகுப்பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சுமார் 5 மாதங்களுக்கு ஓய்வு?

இதுதொடர்பாக வெளியாகியுள்ள தகவலின்படி, ஷ்ரேயாஸ் ஐயருக்கு முதுகுப்பகுதியில் அறுவை சிகிச்சை செய்ய இருப்பதாகவும், இதன் காரணமாக அடுத்த 4 முதல் 5 மாதங்களுக்கு அவரால் கிரிக்கெட்  விளையாட முடியாது எனவும் கூறப்படுகிறது. ஒருவேளை இந்த தகவல் உறுதியானால், ஏற்கனவே பும்ரா மற்றும் பண்ட் ஆகியோர் காயம் காரணமாக சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஷ்ரேயாஸ் ஐயரும் இல்லாதது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி:

இங்கிலந்தின் ஓவல் மைதானத்தில் வரும் ஜுன் மாதம் 7ம் தேதி நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில், ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோத உள்ளன. இந்நிலையில், டெஸ்ட் அணியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான பும்ரா, பண்ட் மற்றும் ஷ்ரேயாஸ் ஆகியோர் ஒரே நேரத்தில், காயமடைந்து இருப்பது இந்திய அணியை மேலும் வலுவடைய செய்துள்ளது. ஏற்கனவே, கடந்த முறை நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில், நியூசிலாந்திடம் இந்தியா தோல்வியடைந்தது. இந்நிலையில், பண்ட், பும்ரா மற்றும் ஷ்ரேயாஸ் அய்யர் இல்லாமல் இந்த முறை இறுதிப்போட்டியில் களமிறங்க உள்ளது, முதல்முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை கைப்பற்றும் கனவை கேள்விக்குறியாக்கியுள்ளது.

உலகக்கோப்பையில் ஸ்ரேயாஸ்?

அதேநேரம், 4 முதல் 5 மாத ஓய்விற்கு பிறகு, நடப்பாண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெற உள்ள உலககோப்பை தொடருக்கு, ஸ்ரேயாஸ் அய்யர் தயார் ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே அறுவை சிகிச்சை காரணமாக, இந்த மாத இறுதியில் தொடங்க உள்ள ஐபிஎல் தொடரிலும் ஷ்ரேயாஸ் அய்யர் பங்கேற்க மாட்டார் என கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் கேப்டனாக ஆண்ட்ரூ ரசல் தேர்வு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிற்து.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தினை  அமல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
"இந்தியாவில் முதலீடு செய்ய உலக நாடுகளே விரும்புகிறது" பெருமிதத்துடன் சொன்ன பிரதமர் மோடி!
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
Embed widget