மேலும் அறிய

Timed-out controversy: போர்ல ஜெயிக்கணும்னா..! மேத்யூஸ் விக்கெட் குறித்து வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன் விளக்கம்

Timed-out controversy: உலகக் கோப்பையில் இலங்கை வீரர் மேத்யூஸை சர்ச்சைக்குரிய வகையில், ஆட்டமிழக்கச் செய்தது தொடர்பாக, வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன் விளக்கமளித்துள்ளார்.

Timed-out controversy: மேத்யூஸ் கூடுதல் நேரம் எடுத்துக்கொள்வதாக சக வீரர் கூறிய ஆலோசனையின்படி தான், நடுவரிடம் விக்கெட் கோரி முறையிட்டதாக வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார்.

சர்ச்சையை ஏற்படுத்திய வங்கதேசம்:

உலகக் கோப்பையில் நேற்று நடைபெற்ற லிக் போட்டியில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் மோதின. இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில், 5வது விக்கெட்டிற்கு களமிறங்கிய மேத்யூஸ் களத்திற்கு வந்து பந்தை எதிர்கொள்ள கூடுதல் நேரம் எடுத்துகொண்டதால் அவர் ஆட்டமிழந்ததாக அறிவிக்கக்கோரி, வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன் நடுவர்களிடம் முறையிட்டார். இதனை பரிசீலித்த நடுவர்கள், மேத்யூஸ் டைம்ட் - அவுட் முறையில் ஆட்டமிழந்ததாக அறிவித்தனர். இது கிரிக்கெட் உலகில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக வங்கதேச அணிக்கு எதிராக பலரும் கண்டனங்களையும், விமர்சனங்களையும் பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், சர்ச்சைக்குரிய விக்கெட் தொடர்பாக மேத்யூஸ் மற்றும் ஷகிப் அல் ஹசன் ஆகியோர் , போட்டி முடிந்த பிறகு தங்களது கருத்துகளை பதிவு செய்துள்ளனர்.

மேத்யூஸ் ஆவேசம்:

இந்த விக்கெட் தொடர்பாக பேசிய மேத்யூஸ், “ இந்த நிகழ்வு முற்றிலும் அவமானகரமானது. அனைவரும் வெற்றிக்காக விளையாடுகிறோம், ஆனால் ஒரு அணியோ அல்லது வீரரோ ஒரு விக்கெட்டைப் பெறுவதற்கு இந்த அளவிற்கு மோசமான நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. நான் எந்த தவறும் செய்யவில்லை. சரியான நேரத்தில் கிரீஸை அடைந்தேன். ஆனால் எனது ஹெல்மெட்டில் பிரச்னை இருந்தது. நான் நேரத்தை வீணாக்கவில்லை. அதன் மூலம் எந்த நன்மையையும் பெற நினைக்கவில்லை.  இதனை புரிந்துகொள்ள பொது அறிவு மேலோங்கியிருக்க வேண்டும்

இரண்டு நிமிட கால அவகாசத்தில் இன்னும் ஐந்து வினாடிகள் இருக்கும் நிலையில் நான் பேட்டிங் செய்யத் தயாராக இருந்தேன் என்பதற்கான வீடியோ ஆதாரம் எங்களிடம் உள்ளது. முடிவை எடுப்பதற்கு முன் நடுவர்கள் நேரத்தை சரிபார்த்திருக்கலாம். நாம் அனைவரும் விளையாட்டின் தூதர்களாக உள்ளோம். இன்று வரை ஷாகிப் மீது எனக்கு மிகுந்த மரியாதை இருந்தது. முறையீட்டை திரும்பப் பெற அவருக்கு வாய்ப்பு இருந்தது. ஆனால் அவ்வாறு அவர் செய்யவில்லை. வங்கதேசம் செய்ததை வேறு எந்த அணியும் செய்திருக்கும் என்று நான் நினைக்கவில்லை” என மேத்யூஸ் தெரிவித்தார்.

ஷகிப் அல் ஹசன் விளக்கம்:

சர்ச்சை தொடர்பாக பேசிய வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன், “அந்த விக்கெட்டிற்காக முறையிட்டது குறித்து எனக்கு எந்த வருத்தமும் இல்லை. மேத்யூஸிற்கு நடந்தது துரதிர்ஷ்டவசமானது.  ஆனால் விதிகளை பின்பற்றி தான் நாங்கள் நடந்துகொண்டோம்.  ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்பிற்கு உட்பட்டதாக கருத முடியுமா என்ற கேள்விக்கு, அப்படியானால் ஐசிசி விதிகளை தான் மாற்ற வேண்டும். கிரிக்கெட் போட்டி என்பது ஒரு விளையாட்டை விட மேலானது. இது ஒரு போர் மற்றும் அதில் எல்லாம் நியாயமானது. மேத்யூஸ் ஆட வரும்போது எங்கள் அணியின் வீரர் ஒருவர்  இப்போது முறையீடு செய்தால் அவர் அவுட் ஆவார் என கூறினார். அதனடிப்படையில் நான் நடுவரிடம் முறையிட்டேன்.  இது சரியா, தவறா என எனக்கு தெரியவில்லை. ஆனால், அணியின் கேப்டனாக  வெற்றிக்கு என்ன செய்ய வேண்டுமோ  அந்த முடிவை எடுத்தேன், எடுப்பேன்” என ஷகிப் அல் ஹசன் கூறினார்.

என்ன பிரச்னை:

ஒரு விக்கெட் விழுந்த பிறகு புதியதாக களமிறங்கும் அல்லது ஏற்கனவே களத்தில் உள்ள வீரர், அடுத்த 2 நிமிடத்திற்குள் களத்திற்குள் பந்தை எதிர்கொள்ள வேண்டும். தவறினால் அவர் ஆட்டமிழந்ததாக அறிவிக்கப்படுவது உலகக் கோப்பையில் பின்பற்றப்படும் விதி. அந்த வகையில் சமரவிக்ரமா ஆட்டமிழந்த பிறகு, மேத்யூஸ் களமிறங்கினார்.  அவர் அணிந்து வந்த ஹெல்மெட் சரியில்லாததால், மேத்யூஸ் தனது ஹெல்மெட்டை மாற்ற முயன்றார். ஆனால், கிரீஸிற்கு வர மேத்யூஸ் கூடுதல் நேரத்தை எடுத்துக் கொண்டதாக வங்கதேச வீரர்கள் முறையிட, அவர் ஆட்டமிழந்ததாக நடுவர்கள் அறிவித்தனர்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு பாடமாகும் ஆபரேஷன் சிந்தூர்; எந்தெந்த வகுப்புகளுக்கு தெரியுமா?
பள்ளி மாணவர்களுக்கு பாடமாகும் ஆபரேஷன் சிந்தூர்; எந்தெந்த வகுப்புகளுக்கு தெரியுமா?
Engineering: காத்து வாங்கும் இன்ஜினியரிங் கல்லூரிகள்.. 142 காலேஜ்ல ஒருத்தர் கூட சேரல..!
Engineering: காத்து வாங்கும் இன்ஜினியரிங் கல்லூரிகள்.. 142 காலேஜ்ல ஒருத்தர் கூட சேரல..!
அண்டா முதல் ஆறு வரை: திமுக ஆட்சியில் நீர்நிலைகள் காணாமல் போனதா? - ஆர்.பி.உதயகுமார் கேள்வி
அண்டா முதல் ஆறு வரை: திமுக ஆட்சியில் நீர்நிலைகள் காணாமல் போனதா? - ஆர்.பி.உதயகுமார் கேள்வி
வெளிநாடு சென்று படிக்க ஆசையா? முக்கிய ஆவணங்கள் முதல் தங்குமிடம் வரை: முழு வழிகாட்டி!
வெளிநாடு சென்று படிக்க ஆசையா? முக்கிய ஆவணங்கள் முதல் தங்குமிடம் வரை: முழு வழிகாட்டி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

தூத்துக்குடி வரும் மோடி! நேரில் அழைத்த ஸ்டாலின்! Files உடன் கனிமொழி!
கழட்டிவிட்ட பிரதமர் மோடி? கலக்கத்தில் ஓபிஎஸ்! கதறவிட்ட எடப்பாடி
Vikravandi |“எங்களுக்கே வழிவிட மாட்டியா” TOLGATE-யை நொறுக்கிய விசிகவினர் விக்கிரவாண்டியில் பரபரப்பு
Kundrathur Abirami Audio | குழந்தைகளை கொன்ற அபிராமி “பயமே இல்லையா உனக்கு” வெளியான பகீர் ஆடியோ
Instagram Ilakiya | இலக்கியா தற்கொலை முயற்சி ஸ்டண்ட் மாஸ்டர் காரணமா உண்மையில் நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பள்ளி மாணவர்களுக்கு பாடமாகும் ஆபரேஷன் சிந்தூர்; எந்தெந்த வகுப்புகளுக்கு தெரியுமா?
பள்ளி மாணவர்களுக்கு பாடமாகும் ஆபரேஷன் சிந்தூர்; எந்தெந்த வகுப்புகளுக்கு தெரியுமா?
Engineering: காத்து வாங்கும் இன்ஜினியரிங் கல்லூரிகள்.. 142 காலேஜ்ல ஒருத்தர் கூட சேரல..!
Engineering: காத்து வாங்கும் இன்ஜினியரிங் கல்லூரிகள்.. 142 காலேஜ்ல ஒருத்தர் கூட சேரல..!
அண்டா முதல் ஆறு வரை: திமுக ஆட்சியில் நீர்நிலைகள் காணாமல் போனதா? - ஆர்.பி.உதயகுமார் கேள்வி
அண்டா முதல் ஆறு வரை: திமுக ஆட்சியில் நீர்நிலைகள் காணாமல் போனதா? - ஆர்.பி.உதயகுமார் கேள்வி
வெளிநாடு சென்று படிக்க ஆசையா? முக்கிய ஆவணங்கள் முதல் தங்குமிடம் வரை: முழு வழிகாட்டி!
வெளிநாடு சென்று படிக்க ஆசையா? முக்கிய ஆவணங்கள் முதல் தங்குமிடம் வரை: முழு வழிகாட்டி!
Diwali Car Launch: இந்த தீபாவளி செம்ம கலெக்‌ஷன் மா..! காம்பேக்ட் தொடங்கி மிட்சைஸ் வரை, பட்டாசாய் புதிய SUV-க்கள்
Diwali Car Launch: இந்த தீபாவளி செம்ம கலெக்‌ஷன் மா..! காம்பேக்ட் தொடங்கி மிட்சைஸ் வரை, பட்டாசாய் புதிய SUV-க்கள்
அன்புமணி ராமதாஸ் நடை பயணத்திற்கு தடையில்லை , அடுத்து என்ன ? - வழக்கறிஞர் பாலு சொன்ன தகவல்
அன்புமணி ராமதாஸ் நடை பயணத்திற்கு தடையில்லை , அடுத்து என்ன ? - வழக்கறிஞர் பாலு சொன்ன தகவல்
Seeman TVK Vijay: ”சண்டைக்கு வாப்பா விஜய், பாவமே பார்க்க மாட்டேன்” -  திமுக கொடுத்த டாஸ்கில் சீமான்?
Seeman TVK Vijay: ”சண்டைக்கு வாப்பா விஜய், பாவமே பார்க்க மாட்டேன்” - திமுக கொடுத்த டாஸ்கில் சீமான்?
Madhambatti Rangaraj : வயிற்றில் 6 மாத கரு, மாதம்பட்டி ரங்கராஜிற்கு 2வது திருமணம்.. கரம்பிடித்த பெண் யார் தெரியுமா?
Madhambatti Rangaraj : வயிற்றில் 6 மாத கரு, மாதம்பட்டி ரங்கராஜிற்கு 2வது திருமணம்.. கரம்பிடித்த பெண் யார் தெரியுமா?
Embed widget