மேலும் அறிய

Sandeep Lamichhane: 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு.. கிரிக்கெட் வீரர் லாமிச்சானேவுக்கு 8 ஆண்டுகள் சிறை!

17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக நேபாள கிரிக்கெட் வீரர் லாமிச்சானே மீது காத்மாண்டு மாவட்ட வழக்கறிஞர் அலுவலகம் ஆகஸ்ட் 21 ம் தேதி வழக்குப்பதிவு செய்தது.

நேபாள கிரிக்கெட் வீரர் சந்தீப் லாமிச்சானே மீண்டும் சிறைக்கு செல்கிறார். 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து, சந்தீப் லாமிச்சானேவுக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

சந்தீப் லாமிச்சானே மீதான குற்றச்சாட்டு என்ன?

நேற்று இந்த வழக்கை விசாரித்த நேபாள நீதிமன்றம் சந்தீப் லாமிச்சானேவுக்கு 8 ஆண்டுகள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. செய்தி நிறுவனமான ANI இன் படி, ஷிஷார் ராஜ் தாகலின் பெஞ்ச் சந்தீப் லாமிச்சானே குற்றவாளி என்று தீர்ப்பளித்து, அவருக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. நேபாள கிரிக்கெட் அணியின் கேப்டனாக சந்தீப் லாமிச்சானே இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு டிசம்பரில், சந்தீப் லமிச்சானே தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக மைனர் பெண் ஒருவர் குற்றம் சாட்டினார்.

வழக்கு விவரம்: 

17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக நேபாள கிரிக்கெட் வீரர் லாமிச்சானே மீது காத்மாண்டு மாவட்ட வழக்கறிஞர் அலுவலகம் ஆகஸ்ட் 21 ம் தேதி வழக்குப்பதிவு செய்தது. அப்போது, சந்தீப் லாமிச்சானே கரீபியன் பிரிமீயர் லீக்கில் விளையாடுவதற்காக டிரினிடாட் மற்றும் டொபாகோ சென்றிந்தார். பின்னர், சந்தீப் லாமிச்சானே கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் 6ம் தேதி திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட பின்னர், சந்தீப் லாமிச்சானே வங்கிக் கணக்கு சீல் வைக்கப்பட்டு, அவரது சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. 

தொடர்ந்து, கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் 4ம் தேதி 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் காத்மாண்டு மாவட்ட நீதிமன்றம் குற்றத்தின் அடிப்படையில் லாமிச்சானேவை சுந்தராவில் உள்ள மத்திய சிறைக்கு அனுப்பியது. இதனை தொடர்ந்து, கடந்த ஜனவரி 2023ம் தேதி சந்தீப் லாமிச்சானே நிபந்தனை அடிப்படையில் ஜாமீனில் வெளிவந்தார். அப்போது, நீதிபதி துருவ்ராஜ் நந்தா மற்றும் நீதிபதி ரமேஷ் தஹல் ஆகியோர் அடங்கிய பதான் உயர்நீதிமன்றத்தின் கூட்டு பெஞ்ச் கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி 12ம் தேதி சில நிபந்தனைகளுடன் 20 லட்சம் நேபாள ரூயாய் பத்திரத்தில் சந்தீப்பை விடுவிக்க உத்தரவிட்டநிலையில், அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார். 

சந்தீப் லாமிச்சானேவின் கிரிக்கெட் வாழ்க்கை:

நேபாளத்தின் மிகவும் பிரபலமான கிரிக்கெட் வீரர்களில் சந்தீப் லமிச்சனேவும் ஒருவர். சந்தீப் லாமிச்சானே நேபாளத்திற்காக 51 ஒருநாள் மற்றும் 51 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் அவர் ஒருநாள் போட்டியில் 112 விக்கெட்டுகளையும் டி20 இல் 98 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 

இது தவிர ஐபிஎல்லில் விளையாடிய முதல் நேபாள கிரிக்கெட் வீரர் சந்தீப் லமிச்சனே ஆவார். சந்தீப் லமிச்சனே ஐபிஎல் 2018 சீசனில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார். 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் விளையாடிய ஐபிஎல் சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணியில் இடம்பிடித்திருந்தார். அதில் அவர் 9 போட்டிகளில் விளையாடும் வாய்ப்பைப் பெற்று 13 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Embed widget