மேலும் அறிய

IND Vs Aus Final: இந்திய அணி உலகக் கோப்பை ஃபைனலில் தோற்றது எப்படி? முக்கிய காரணங்கள் இது தானாம்..!

IND Vs Aus Final: உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்திய அணி தோல்வியுற்றதற்கான முக்கிய காரணங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

IND Vs Aus Final: உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணியின் முக்கிய காரணங்களில் பேட்டிங் முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்தியாவை வீழ்த்திய ஆஸ்திரேலியா:

45 நாட்களாக இந்தியாவில் நடைபெற்று வந்த கிரிக்கெட் திருவிழா, கோடிக்கணக்கான இந்தியர்களின் ஏமாற்றத்துடன் முடிவுக்கு வந்துள்ளது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 240 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 43 ஓவர்களிலேயே, இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 6வது முறையாக உலகக் கோப்பையை வென்றது. இதனால், இந்திய அணி கோப்பையை வெல்லும் என எதிர்நோக்கி இருந்த கோடிக்கணக்கான உள்ளூர் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில், இந்திய அணியின் தோல்விக்கான காரணங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. 

ஏமாற்றமளித்த டாப் - ஆர்டர்:

ரோகித் சர்மா வழக்கம்போல் அதிரடியாக ஆடி ரன் சேர்த்தார். கோலி மற்றும் கே.எல். ராகுல் பொறுப்பாக ஆடி அரைசதம் கடந்தனர். ஆனால், டாப் ஆர்டரில் முக்கிய வீரர்களான சுப்மன் கில் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் ஒற்றை இலக்கங்களில் விக்கெட்டை பறிகொடுத்தது தான், இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு பெரிய இலக்கை நிர்ணயிக்க முடியாததற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. அவர்கள் இருவரும் தங்களது பங்கிற்கு தலா 30+ ரன்கள் அடித்து இருந்தாலே, இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு நெருக்கடி தந்திருக்க முடியும். 

பவுண்டரிகளுக்கு வந்த பஞ்சம்:

நடப்பு உலகக் கோப்பையில் இந்திய அணி அடித்த ரன்களில் சுமார் 50% பவுண்டரிகளில் தான் வந்தது. அந்த அளவிற்கு அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். ஆனால், நேற்றைய போட்டியில் ஸ்லோவர் பந்துகளை கொண்டு இந்திய பேட்ஸ்மேன்களை ஆஸ்திரேலிய வீரர்கள் துல்லியமாக திணறடித்தனர். ஒரு கட்டத்தில் சுமார் 27 ஓவர்களுக்கு இந்திய அணியால் ஒரு பவுண்டரியை கூட அடிக்க முடியாமல் போனது. மொத்தமாகவே இந்திய அணி சார்பில் 13 பவுண்டரிகள் மட்டுமே அடிக்கப்பட்டது. ரோகித் சர்மாவை தவிர எந்த ஒரு வீரரும், ஒரு சிக்சரை கூட அடிக்கவில்லை.

மிடில் ஆர்டரின் மந்தமான ரன் சேர்ப்பு:

ரோகித் சர்மா கேப்டனாக பொறுப்பேற்ற போது, ஸ்கோர் போர்ட் 5-3 என வந்தாலும் மிடில் ஆர்டர் நிலைத்து நின்று ஆடி அணியை காப்பாற்ற வேண்டும் என கூறியிருந்தார். நேற்றைய போட்டியில் 81-3 என்ற நிலை வந்த போது, 4வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த கோலி - கே.எல். ராகுல் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆனால், அவர்களின் முக்கிய குறிக்கோள் விக்கெட் இழப்பதை தவிர்ப்பதாக இருந்ததே தவிர, ரன் சேர்ப்பது என்பது இல்லாமல் போனது. குறைந்தபட்சம் ஓவருக்கு ஒரு பவுண்டரி வந்திருந்தாலும் இந்திய அணி ஒரு வலுவான இலக்கை ஆஸ்திரேலியாவிற்கு நிர்ணயித்து இருக்கக் கூடும். ஆனால், அவர்கள் அதை நிகழ்த்த தவறிவிட்டனர்.

சூர்யகுமார் யாதவ் / ஜடேஜா செய்தது தவறு?

கோலி ஆட்டமிழந்த பிறகு 5வது விக்கெட்டிற்கு சூர்யகுமார் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜடேஜா களத்திற்கு வந்தார். ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஜடேஜா நல்ல பேட்டிங்கை வெளிப்படுத்தி இருப்பதால், அவர் ரன் சேர்ப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 22 பந்துகளை எதிர்கொண்டு வெறும் 9 ரன்கள மட்டுமே அவர் சேர்த்தார். டெத் ஓவர்களில் அதிரடி காட்டுவார் என எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவ், 18 ரன்கள் மட்டுமே சேர்த்து ஏமாற்றமளித்தார்.

ஆஸ்திரேலியாவின் அபாரமான பீல்டிங்:

உண்மையில் பார்த்தால் இந்திய அணி எளிதாகவே 270 ரன்களை இந்த போட்டியில் கடந்து இருக்கும். ஆனால், ஆஸ்திரேலிய வீரர்கள் பவுண்டரி எல்லையில் தங்களது உடலையே தடுப்பாக பயன்படுத்தி, 30 ரன்களுக்கும் மேலாக அணிக்கான சேமித்தனர். அவர்களது அபாரமான பீல்டிங் தான் இந்திய அணி பேட்ஸ்மேன்களை சில மோசமான ஷாட்களை ஆடும் நிலைக்கு தள்ளி, பந்துவீச்சாளர்களுக்கு விக்கெட்டுகளை எடுத்துக் கொடுத்தது.

சோபிக்க முடியாமல் போன சுழற்பந்து வீச்சு:

இறுதிப்போட்டிக்கு முன்பு வரையிலான 10 போட்டிகளிலும், இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர்கள் விக்கெட் எடுக்க தவறியதே இல்லை. ஆனால், நேற்றைய போட்டியில் ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 10 ஓவர்கள் வீசியும் ஒரு விக்கெட் கூட எடுக்க முடியாமல் போனது பெரும் பின்னடைவாக கருத முடிகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Health Dept. Advice: கர்ப்பிணிகளே உஷார்; மீண்டும் படையெடுக்கும் கொரோனா - சுகாதாரத்துறை கூறியது என்ன தெரியுமா.?
கர்ப்பிணிகளே உஷார்; மீண்டும் படையெடுக்கும் கொரோனா - சுகாதாரத்துறை கூறியது என்ன தெரியுமா.?
Starlink License: அடி தூள்.! விரைவில் வருது ஸ்டார்லிங்க்; உரிமம் வழங்கிய இந்திய அரசு - இனி கலக்கல் தான்
அடி தூள்.! விரைவில் வருது ஸ்டார்லிங்க்; உரிமம் வழங்கிய இந்திய அரசு - இனி கலக்கல் தான்
Bakrid 2025 Wishes: எல்லா புகழும் இறைவனுக்கே.. பக்ரீத் வாழ்த்துகளுக்கு இந்த போட்டோவை ஷேர் பண்ணுங்க..
Bakrid 2025 Wishes: எல்லா புகழும் இறைவனுக்கே.. பக்ரீத் வாழ்த்துகளுக்கு இந்த போட்டோவை ஷேர் பண்ணுங்க..
சென்னைக்கு டாட்டா.. சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்.. கொள்ளையடிக்கும் தனியார் பேருந்துகள்
சென்னைக்கு டாட்டா.. சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்.. கொள்ளையடிக்கும் தனியார் பேருந்துகள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vaniyambadi | ”வேலைக்கு கூப்டா வரமாட்டியா ***” வார்டு உறுப்பினரின் கணவர் ஆபாச பேச்சுVelmurugan Controversy |Annamalai | நயினார் vs அண்ணாமலை ஒரே ஒரு வீடியோ ஆட்டத்தை முடித்த அண்ணாமலை!MK Alagiri vs Moorthy : ’’தம்பி எனக்காக இதை செய் !’’ஸ்டாலினிடம் கேட்ட அழகிரி கலக்கத்தில் மூர்த்தி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Health Dept. Advice: கர்ப்பிணிகளே உஷார்; மீண்டும் படையெடுக்கும் கொரோனா - சுகாதாரத்துறை கூறியது என்ன தெரியுமா.?
கர்ப்பிணிகளே உஷார்; மீண்டும் படையெடுக்கும் கொரோனா - சுகாதாரத்துறை கூறியது என்ன தெரியுமா.?
Starlink License: அடி தூள்.! விரைவில் வருது ஸ்டார்லிங்க்; உரிமம் வழங்கிய இந்திய அரசு - இனி கலக்கல் தான்
அடி தூள்.! விரைவில் வருது ஸ்டார்லிங்க்; உரிமம் வழங்கிய இந்திய அரசு - இனி கலக்கல் தான்
Bakrid 2025 Wishes: எல்லா புகழும் இறைவனுக்கே.. பக்ரீத் வாழ்த்துகளுக்கு இந்த போட்டோவை ஷேர் பண்ணுங்க..
Bakrid 2025 Wishes: எல்லா புகழும் இறைவனுக்கே.. பக்ரீத் வாழ்த்துகளுக்கு இந்த போட்டோவை ஷேர் பண்ணுங்க..
சென்னைக்கு டாட்டா.. சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்.. கொள்ளையடிக்கும் தனியார் பேருந்துகள்
சென்னைக்கு டாட்டா.. சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்.. கொள்ளையடிக்கும் தனியார் பேருந்துகள்
கூட்ட நெரிசலுக்கு RCBதான் காரணம்.. பழி போட்ட கர்நாடக கிரிக்கெட் சங்கம்.. சிக்கியது சித்தராமையா அரசு
கூட்ட நெரிசலுக்கு RCBதான் காரணம்.. பழி போட்ட கர்நாடக கிரிக்கெட் சங்கம்.. சிக்கியது சித்தராமையா அரசு
Actor Rajesh: உண்மை இதுதான்.. நடிகர் ராஜேஷ் பற்றி பரவிய வதந்திகளுக்கு கண்ணீரோடு கோரிக்கை வைத்த மகள் திவ்யா!
Actor Rajesh: உண்மை இதுதான்.. நடிகர் ராஜேஷ் பற்றி பரவிய வதந்திகளுக்கு கண்ணீரோடு கோரிக்கை வைத்த மகள் திவ்யா!
Krishna Marriage: ஒரே வருடத்தில் விவாகரத்து... 47 வயதில் நடிகர் கிருஷ்ணாவுக்கு நடந்த 2-ஆவது கல்யாணம்! வைரலாகும் திருமண புகைப்படம்!
Krishna Marriage: ஒரே வருடத்தில் விவாகரத்து... 47 வயதில் நடிகர் கிருஷ்ணாவுக்கு நடந்த 2-ஆவது கல்யாணம்! வைரலாகும் திருமண புகைப்படம்!
SpaceX in Trouble: மஸ்க் வாய மூடிட்டு சும்மா இருந்துருக்கலாம்; பறிபோகும் அரசு ஒப்பந்தங்கள், சிக்கலில் ஸ்பேஸ் எக்ஸ்.!
மஸ்க் வாய மூடிட்டு சும்மா இருந்துருக்கலாம்; பறிபோகும் அரசு ஒப்பந்தங்கள், சிக்கலில் ஸ்பேஸ் எக்ஸ்.!
Embed widget