![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
South Africa T20 League: இந்தியாவில் இருந்து தென்னாப்பிரிக்காவிற்கு தாவிய ஐபிஎல் உரிமையாளர்கள்.. புதிய அணிகளை வாங்கி அசத்தல்!
தென்னாப்பிரிக்காவின் புதிய உள்நாட்டு டி20 லீக்கில் களமிறங்கும் ஆறு அணிகளையும் இந்தியன் பிரீமியர் லீக் அணி உரிமையாளர்கள் வாங்கியுள்ளனர் என்று தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
![South Africa T20 League: இந்தியாவில் இருந்து தென்னாப்பிரிக்காவிற்கு தாவிய ஐபிஎல் உரிமையாளர்கள்.. புதிய அணிகளை வாங்கி அசத்தல்! IPL franchise owners buy all six teams in Cricket South Africa's upcoming new T20 league South Africa T20 League: இந்தியாவில் இருந்து தென்னாப்பிரிக்காவிற்கு தாவிய ஐபிஎல் உரிமையாளர்கள்.. புதிய அணிகளை வாங்கி அசத்தல்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/20/ec23661b58aad522823673dc127314a71658314553_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) அணியின் உரிமையாளர்களான மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸின் உரிமையாளர்கள் தென்னாப்பிரிக்கா நாட்டில் நடைபெறவுள்ள புதிய உள்நாட்டு டி20 லீக் தொடரில் புதியதாக ஆறு அணிகளை வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த லீக் கிரிக்கெட் தொடரை தென்னாப்பிரிக்கா தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுவனமான சூப்பர்ஸ்போர்ட் உடன் இணைந்து நடத்துகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் உரிமையாளரான இந்தியன் சிமெண்ட்ஸ், ஜோகன்னஸ்பர்க் உரிமையை கைப்பற்றியுள்ளதாகவும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸுக்குச் சொந்தமான மும்பை இந்தியன்ஸ் கேப் டவுன் உரிமையை கைப்பற்றியதாகவும் கூறப்படுகிறது. அதேபோல், சன்ரைசர்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான சன் டிவி குழுமம், க்கெபெர்ஹா (முன்னர் போர்ட் எலிசபெத்) உரிமையை கைப்பற்றியுள்ளது.
CSA have announced the owners for the SA T20 League starting in 2023
— Tim Dale Lace (@Tim32_cricket) July 20, 2022
With the teams based in Newlands, Durban, Gqeberha, Wanderers, Paarl & Pretoria pic.twitter.com/2GgDOSeib4
கடந்த ஆண்டு இறுதியில் லக்னோ ஐபிஎல் உரிமையை வாங்க 7090 கோடி ரூபாய் செலுத்திய ஆர்பி சஞ்சீவ் கோயங்கா குழு டர்பன் அணியையும், அதே நேரத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் பார்ல் அணியை வாங்கியது. மேலும், டெல்லி கேப்பிடல்ஸின் இணை உரிமையாளரான பார்த் ஜிண்டால் தலைமையிலான ஜிண்டால் சவுத் வெஸ்ட் ஸ்போர்ட்ஸ் கைப்பற்றியுள்ளது.
கிரிக்கெட் தென்னாப்பிரிக்கா (CSA) புதிய உரிமையாளர்கள் மற்றும் அவர்கள் கைப்பற்றிய நகரங்களின் பெயர்களை கொண்ட அணிகல் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த டி20 லீக்கின் ஒட்டுமொத்த தலைவராக தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் செயல்படுவார் என வாரியம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து கிரேம் ஸ்மித் தெரிவிக்கையில், “ இது உண்மையிலேயே தென்னாப்பிரிக்க கிரிக்கெட்டுக்கு ஒரு உற்சாகமான நேரம். உலகளாவிய கிரிக்கெட் சுற்றுச்சூழலில் நாடு மதிப்புமிக்கதாக இருப்பதை அபரிமிதமான ஆர்வம் காட்டுகிறது. அந்தந்த உரிமையாளர்களின் வலுவான விளையாட்டுப் பின்னணியையும் அவர்கள் நிர்வகிக்கும் உலகளாவிய பிராண்டுகள் மூலம் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் நிச்சயம் பயனடையும்.
நாங்கள் ஏற்கனவே பல முன்னணி சர்வதேச வீரர்களை ஒப்பந்தம் செய்துள்ளோம், அவர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள்." என தெரிவித்தார்.
கொல்கத்தா, ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணிகள் கரீபியன் பிரீமியர் லீக்கில் சொந்த அணிகளை வாங்கி விளையாடி வருகிறது. மேலும், கொல்கத்தா அணி அமெரிக்காவில் உரிமையை அடிப்படையாகக் கொண்ட மேஜர் லீக் கிரிக்கெட்டிலும் களமிறக்கியது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)