மேலும் அறிய

T20 WC: முதல் டி20 உலகக்கோப்பையை முத்தமிட்ட இந்தியா! 2007ம் ஆண்டு இதே நாள்! வரலாறை திரும்பி பார்ப்போமா?

தோனி தலைமையிலான இந்திய அணி டி20 உலகக்கோப்பையை முதன்முறையாக 2007ம் ஆண்டு கைப்பற்றியது இதே நாளில் ஆகும். ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்திய கிரிக்கெட் ஒவ்வொரு குறிப்பிட்ட காலத்திலும் அடுத்தடுத்த வளர்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அந்த வளர்ச்சிக்கு முன்பு இந்திய அணி சிறு சறுக்கல்களையும் சந்தித்து பீனிக்ஸ் பறவை போல மீண்டெழுந்து வருகிறது. 2007ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி அதலபாதாளத்திற்குச் சென்று மீண்டு வந்து உச்சத்திற்கு சென்ற ஆண்டு ஆகும்.

2007 டி20 உலகக்கோப்பை:

அந்தாண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பையில் வங்கதேச அணியிடம் தகுதிச்சுற்றிலே தோல்வி அடைந்து இந்திய அணி வெளியேறிய நிலையில், சச்சின், டிராவிட், கங்குலி என மூத்த வீரர்கள் முற்றிலும் ஒதுங்கி கொண்ட நிலையில், முற்றிலும் புது இளம் ரத்தங்களுடன் முதன்முறையாக நடந்த டி20 உலகக்கோப்பைத் தொடரில் தோனி தலைமையில் இந்திய அணி களமிறங்கியது.

இன்றைய ஜாம்பவான் வீரர்கள் தோனி, கம்பீர், உத்தப்பா, யுவராஜ்சிங், ஹர்பஜன்சிங், ரோகித் சர்மா, ஸ்ரீசாந்த் என பலரும் இளம் ரத்தங்களாக களமிறங்கிய தொடர் அது. லீக் போட்டியில் ஸ்காட்லாந்து அணியுடனான போட்டி கைவிடப்பட்ட நிலையில், பாகிஸ்தான் அணியை பவுல் அவுட் முறையில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

இந்தியா - பாகிஸ்தான் மோதல்:

அடுத்த சுற்றில் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. அனைவரும் ஆஸ்திரேலிய எளிதில் வென்று இறுதிப்போட்டிக்குச் செல்லும் என்று கருதிய நிலையில், அன்று உலக கிரிக்கெட்டை ஆண்டுகொண்டிருந்த ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டது. 2007ம் ஆண்டு செப்டம்பர் 24ம் நாள் இதே நாளில் இந்தியா – பாகிஸ்தான் அணி மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணிக்கு யசுப் பதான் 15 ரன்களில் அவுட்டாக, உத்தப்பா 8 ரன்களில் அவு்டடடானார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட யுவராஜ்சிங் 14 ரன்களுக்கு அவுட்டாக, தனி ஆளாக கம்பீர் இந்திய அணியை தாங்கிப் பிடித்தார். அவர் 54 பந்துகளில் 8 பவுண்டரி 2 சிக்ஸருடன் 75 ரன்கள் எடுத்து அவுட்டாக கடைசி கட்டத்தில் ரோகித் சர்மா 30 ரன்கள் எடுப்பார். இதனால், இந்திய அணி 20 ஓவர்களில் 157 ரன்களை எடுத்தது.

பரபரப்பை ஏற்படுத்திய கடைசி ஓவர்:

158 ரன்கள் எடுத்தால் இந்தியாவை வீழ்த்தி முதல் டி20 உலகக்கோப்பையை கைப்பற்றலாம் என்று பாகிஸ்தான் களமிறங்கியது. ஹபீஸ் 1 ரன்னுக்கு அவுட்டாக, கம்ரான் அக்மல் டக் அவுட்டாக தொடக்க வீரர் இம்ரான் நசீர் அதிரடி காட்டினார். அவர் பவுண்டரி, சிக்ஸர் விளாச 14 பந்துகளில் 4 பவுண்டரி 2 சிக்ஸருடன் 33 ரன்கள் எடுத்திருநு்த அவரை உத்தப்பா ரன் அவுட்டாக்கினார். யூனிஸ்கான் 24 ரன்கள் எடுக்க சோயிப் மாலிக் 8 ரன்களுக்கும், அதிரடி மன்னன் அப்ரிடி டக் அவுட்டாக பாகிஸ்தான் அணி தடுமாறியது.

ஆனால், அந்த அணியின் ஃபினிஷர் மிஸ்பா உல் ஹக் தனி ஆளாக போராடினார். நிதானமாக ஆட்டத்தை தொடங்கிய அவர் கடைசியில் சிக்ஸராக விளாச கடைசி ஓவரில் 6 பந்துகளில் 13 ரன்கள் எடுத்தால் பாகிஸ்தானுக்கு கோப்பை, எஞ்சிய ஒரே ஒரு விக்கெட்டை வீழ்த்தினால் இந்தியாவிற்கு கோப்பை என்ற சூழல் வரும். இதனால், ஆட்டம் பரபரப்பான சூழலுக்கு செல்லும்.

உலகக்கோப்பையை கையில் ஏந்திய இந்தியா:

யாரும் எதிர்பாராத வகையில் தோனி பந்தை ஜோகிந்தர்சர்மா கையில் தருவார். முதல் பந்தை ஒயிடாக அடுத்த பந்தில் ரன் ஏதும் மிஸ்பா உல் ஹக் எடுக்க மாட்டார். அடுத்த பந்தை மிஸ்பா உல் ஹக் சிக்ஸராக விளாச 4 பந்தில் 6 ரன்கள் தேவை என்ற சூழல் ஏற்படும். அப்போது, அவர் வீசிய 3வது பந்தை மீண்டும் வானை நோக்கி மிஸ்பா உல் ஹக் அடிக்க அனைவரும் சிக்ஸர் என்று நினைத்த பந்தை இந்திய வீரர் மிஸ்பா உல் ஹக் கேட்ச் பிடித்து அசத்தியிருப்பார்.

ஒட்டுமொத்த பாகிஸ்தானும் அதிர்ச்சியில் உறைய முதன்முறையாக நடந்த டி20 உலகக்கோப்பையை முற்றிலும் இளம் ரத்தமான இந்திய அணி கைப்பற்றி அசத்தியது. ஒரு கேப்டனாக தோனியின் வெற்றிப்பயணம் தொடங்கிய வரலாறும் இதே நாளில் என்றும் குறிப்பிடலாம். மறக்கவே முடியாத ஜாம்பவான்களின் புதிய பயணம் தொடங்கிய 2007 டி20 உலகக்கோப்பை வென்ற இந்த நாளில் வீரர்களுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நாடே பார்த்து வியக்கும் கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை.. கிடைத்தது புதிய அங்கீகாரம்.. அடடே!
நாடே பார்த்து வியக்கும் கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை.. கிடைத்தது புதிய அங்கீகாரம்!
Jayam Ravi Aarti : மனைவி ஆர்த்தி மீது ஜெயம் ரவி போலீஸில் புகார்.. பரபரப்பு தகவல்..
மனைவி ஆர்த்தி மீது ஜெயம் ரவி போலீஸில் புகார்.. பரபரப்பு தகவல்..
Kenishaa Francis : தன்மானத்தை இழக்கமாட்டேன்..கோவாவில் நடந்தது என்ன? விளக்கமளித்த கெனீஷா பிரான்சிஸ்
தன்மானத்தை இழக்கமாட்டேன்..கோவாவில் நடந்தது என்ன? விளக்கமளித்த கெனீஷா பிரான்சிஸ்
குடையுடன் வெளியே போங்க.. வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம் உருவானது: வெளுக்கும் மழை
குடையுடன் வெளியே போங்க.. வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம் உருவானது: வெளுக்கும் மழை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Durai Dayanidhi Discharge : '’துரையை PHOTO எடுக்காத’’கொந்தளித்த அழகிரி! செய்தியாளர்கள் மீது தாக்குதல்Ravikumar vs Aadhav arjuna : ”இப்படி பேசலாமா ஆதவ்” விசிகவில் வெடித்த கலகம்! ரவிக்குமார் போர்க்கொடிMohan G Arrest : வாயை விட்ட மோகன் ஜி.. ACTION-ல் இறங்கிய போலீஸ்Tobacco in Tirupati Laddu | ”திருப்பதி லட்டுவில் குட்கா பாக்கெட், சிக்ரெட்” மீண்டும் வெடித்த சர்ச்சை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நாடே பார்த்து வியக்கும் கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை.. கிடைத்தது புதிய அங்கீகாரம்.. அடடே!
நாடே பார்த்து வியக்கும் கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை.. கிடைத்தது புதிய அங்கீகாரம்!
Jayam Ravi Aarti : மனைவி ஆர்த்தி மீது ஜெயம் ரவி போலீஸில் புகார்.. பரபரப்பு தகவல்..
மனைவி ஆர்த்தி மீது ஜெயம் ரவி போலீஸில் புகார்.. பரபரப்பு தகவல்..
Kenishaa Francis : தன்மானத்தை இழக்கமாட்டேன்..கோவாவில் நடந்தது என்ன? விளக்கமளித்த கெனீஷா பிரான்சிஸ்
தன்மானத்தை இழக்கமாட்டேன்..கோவாவில் நடந்தது என்ன? விளக்கமளித்த கெனீஷா பிரான்சிஸ்
குடையுடன் வெளியே போங்க.. வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம் உருவானது: வெளுக்கும் மழை
குடையுடன் வெளியே போங்க.. வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம் உருவானது: வெளுக்கும் மழை
சுகாதாரத்துறையில் புரட்சி.. உலகின் மிகப்பெரிய மருத்துவ திட்டமாக உருவெடுத்த ஆயுஷ்மான் பாரத் திட்டம்!
சுகாதாரத்துறையில் புரட்சி.. உலகின் மிகப்பெரிய மருத்துவ திட்டமாக உருவெடுத்த ஆயுஷ்மான் பாரத் திட்டம்!
கொலை செய்து பள்ளி வளாகத்தில் புதைக்கப்பட்ட சிறுமி.. தலைமை ஆசிரியர் வெறிச் செயல்.. குஜராத்தில் பகீர்!
கொலை செய்து பள்ளி வளாகத்தில் புதைக்கப்பட்ட சிறுமி.. தலைமை ஆசிரியர் வெறிச் செயல்.. குஜராத்தில் பகீர்!
Breaking News LIVE, Sep 24:  லட்டு கலப்பட விவகாரம் : சிறப்பு விசாரணை குழு அமைந்தது
Breaking News LIVE, Sep 24: லட்டு கலப்பட விவகாரம் : சிறப்பு விசாரணை குழு அமைந்தது
Sri Lanka PM: இலங்கையின் பிரதமராக ஹரிணி அமரசூரிய நியமனம்.! யார் இவர்.?
Sri Lanka PM: இலங்கையின் பிரதமராக ஹரிணி அமரசூரிய நியமனம்.! யார் இவர்.?
Embed widget