மேலும் அறிய

Rohit Sharma: வந்தாச்சு குட்டி ஹிட்-மேன் - ரோகித் சர்மாவிற்கு ஆண் குழந்தை, குவியும் வாழ்த்து மழை

Rohit Sharma: இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோகித் சர்மாவிற்கு ஆண் குழந்து பிறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Rohit Sharma: இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோகித் சர்மாவிற்கு ஆண் குழந்து பிறந்துள்ளதை அடுத்து பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

ரோகித் சர்மாவிற்கு ஆண்-குழந்தை:

இதையடுத்து ரோகித் சர்மாவின் மனைவில் ரித்திகா முழு உடல் நலத்துடன் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் வெளியானதில் இருந்து ரோகித் சர்மா மற்றும் ரித்திகா ஜோடிக்கு பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். குட்டி ஹிட்மேன் வந்துவிட்டதாக, ரோகித் சர்மாவின் ரசிகர்களில் இணையத்தில் வாழ்த்துகளையும், மீம்ஸ்களையும் பகிர்ந்து வருகின்றனர். ரோகித் சர்மா மற்றும் ரித்திகா ஜோடிக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2018ம் ஆண்டு பிறந்த அந்த குழந்தையின் பெயர் சமைரா. மனைவியின் பிரசவ தேதி நெருங்கி வந்ததன் காரணமாகவே, ரோகித் சர்மா பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடருக்காக இந்திய அணியுடன் ஆஸ்திரேலியா செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரோகித்தின் திருமண வாழ்க்கை:

ரோகித்தும், ரித்திகாவும் டிசம்பர் 13, 2015 அன்று கிரிக்கெட், விளையாட்டு மற்றும் திரையுலகின் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில்  திருமணம் செய்து கொண்டனர். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, தம்பதியினர் 2018 இல் சமைராவை வரவேற்றனர். இந்நிலையில் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் மீண்டும் மகனை பெற்று பெற்றோராகியுள்ளனர். இந்த ஜோடி சமூக வலைதளங்களில் பிரபலமாக இருப்பதோடு, பல விளம்பர படங்களிலும் இணைந்து நடித்துள்ளனர்.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ரோகித் சர்மா மற்றும் ரித்திகா ஜோடி, கரருவுற்று இருந்தது பொதுவெளியில் அறிவிக்கப்படாமலேயே இருந்தது. இந்நிலையில், பெர்த்தில் நடைபெற உள்ள முதல் டெஸ்டில் ரோகித் பங்கேற்பது குறித்த நிச்சயமற்ற சூழலுக்கு மத்தியில் சமீபத்தில் தான் இந்த செய்தி பகிரங்கமானது. ரோகித்தும் ரித்திகாவும் தங்களின் புதிய குடும்ப உறுப்பினரின் வருகையை கொண்டாடும் நிலையில், தொடரின் தொடக்க ஆட்டத்தில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா அணியில் சேர்வாரா என்பதைப் பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். அவர் இல்லாதது இந்திய அணிக்கு சவாலாக இருக்கலாம். இந்த முக்கியமான தொடரின் போது ரோகித் தனது கிரிக்கெட் அர்ப்பணிப்புகளுடன் தனது குடும்பப் பொறுப்புகளையும் சமநிலைப்படுத்த முடியுமா என்பதைப் பார்க்க ரசிகர்கள் மற்றும் அணியினர் ஆர்வமாக உள்ளனர். இரு அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி, வரும் 22ம் தேதி தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

தயார் நிலையில் ரோகித் சர்மா:

இதனிடையே, அணியில் இருந்து விலகியிருந்தாலும், மும்பையில் ரோகித் சர்மா தொடர்ந்து வலை பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்.  அதன்படி, ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முக்கியமான டெஸ்ட் தொடருக்குத் தன்னைத் தயாராக வைத்திருப்பதை உறுதிசெய்துள்ளார்.  வீட்டில் திட்டமிட்டபடி விஷயங்கள் நடந்தால், ரோகித் சர்மா பெர்த்தில் முதல் டெஸ்டில் விளையாடலாம் என்று கூறப்படுகிறது. கடைசி நேரத்திலும் கூட இந்திய கேப்டன அணியில் இணைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பிசிசிஐ உறுதி செய்து வருகிறது.

 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Anbumani Ramadoss: ‘செல்லாது செல்லாது“, தீர்மானத்திற்கே தீர்மானம் போட்ட அன்புமணி ராமதாஸ் - நடந்தது என்ன.?
‘செல்லாது செல்லாது“, தீர்மானத்திற்கே தீர்மானம் போட்ட அன்புமணி ராமதாஸ் - நடந்தது என்ன.?
EPS on DMK: “நீங்க கூட்டணியை நம்புறீங்க… நான் மக்களை நம்புறேன்…’’ திமுக குறித்து இபிஎஸ் நெத்தியடி விமர்சனம்
“நீங்க கூட்டணியை நம்புறீங்க… நான் மக்களை நம்புறேன்…’’ திமுக குறித்து இபிஎஸ் நெத்தியடி விமர்சனம்
“அண்ணே, அவன தூக்குங்கண்ணே“, அமைச்சருக்கே கேட் போட்ட திமுகவினர் - திணறிய கே.என். நேரு
“அண்ணே, அவன தூக்குங்கண்ணே“, அமைச்சருக்கே கேட் போட்ட திமுகவினர் - திணறிய கே.என். நேரு
Fact Check: ஹெகுரு பயிற்சி சர்ச்சை; ரோபோ சங்கர் மகள் இந்தரஜா, கணவர் கூறிய விளக்கம் சரியா - உண்மை என்ன.?
ஹெகுரு பயிற்சி சர்ச்சை; ரோபோ சங்கர் மகள் இந்தரஜா, கணவர் கூறிய விளக்கம் சரியா - உண்மை என்ன.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP தேசிய தலைவராகும் தமிழ்பெண்! வானதி OR நிர்மலாவுக்கு ஜாக்பார்ட்!மோடியின் கணக்கு என்ன?
கொத்தாக விலகிய தொண்டர்கள் அதிமுகவில் இணைந்த பாமகவினர்! அதிர்ச்சியில் அன்புமணி ராமதாஸ்
Hari Nadar | சிறைக்கு சென்றவருடன் அமைச்சர்.. ஹரிநாடார் திருப்புவனம் விசிட்! வெளியான பரபரப்பு பின்னணி
Annamalai vs Nainar | அமித்ஷாவுக்கு PHONE CALL நயினாருக்கு முட்டுக்கட்டை அ.மலை கட்டுப்பாட்டில் பாஜக?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anbumani Ramadoss: ‘செல்லாது செல்லாது“, தீர்மானத்திற்கே தீர்மானம் போட்ட அன்புமணி ராமதாஸ் - நடந்தது என்ன.?
‘செல்லாது செல்லாது“, தீர்மானத்திற்கே தீர்மானம் போட்ட அன்புமணி ராமதாஸ் - நடந்தது என்ன.?
EPS on DMK: “நீங்க கூட்டணியை நம்புறீங்க… நான் மக்களை நம்புறேன்…’’ திமுக குறித்து இபிஎஸ் நெத்தியடி விமர்சனம்
“நீங்க கூட்டணியை நம்புறீங்க… நான் மக்களை நம்புறேன்…’’ திமுக குறித்து இபிஎஸ் நெத்தியடி விமர்சனம்
“அண்ணே, அவன தூக்குங்கண்ணே“, அமைச்சருக்கே கேட் போட்ட திமுகவினர் - திணறிய கே.என். நேரு
“அண்ணே, அவன தூக்குங்கண்ணே“, அமைச்சருக்கே கேட் போட்ட திமுகவினர் - திணறிய கே.என். நேரு
Fact Check: ஹெகுரு பயிற்சி சர்ச்சை; ரோபோ சங்கர் மகள் இந்தரஜா, கணவர் கூறிய விளக்கம் சரியா - உண்மை என்ன.?
ஹெகுரு பயிற்சி சர்ச்சை; ரோபோ சங்கர் மகள் இந்தரஜா, கணவர் கூறிய விளக்கம் சரியா - உண்மை என்ன.?
பிசிஓடி பெண்களுக்கு குழந்தைப்பேறில் தாமதம் ஏன்? தடுப்பது எப்படி? மருத்துவர் வழிகாட்டல்!
பிசிஓடி பெண்களுக்கு குழந்தைப்பேறில் தாமதம் ஏன்? தடுப்பது எப்படி? மருத்துவர் வழிகாட்டல்!
Chennai Power Shutdown(09.07.25): சென்னை மக்களே.! நாளைக்கு எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? விவரம் இதோ
சென்னை மக்களே.! நாளைக்கு எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? விவரம் இதோ
பகுதிநேர ஆசிரியர்கள் கைது; துண்டு சீட்டு தொலைஞ்சிருச்சா? முதல்வரை கிழித்தெடுத்த ஈபிஎஸ்
பகுதிநேர ஆசிரியர்கள் கைது; துண்டு சீட்டு தொலைஞ்சிருச்சா? முதல்வரை கிழித்தெடுத்த ஈபிஎஸ்
Duraimurugan : ‘உயிர் இருக்கும் வரை நானே திமுகவின் பொதுச்செயலாளர்’ ஆவேசமான  துரைமுருகன்..!
‘உயிர் இருக்கும் வரை நானே பொதுச்செயலாளர்’ ஆவேசமான துரைமுருகன்..!
Embed widget