மேலும் அறிய

T20 WC PAK vs SA : வாழ்வா? சாவா? போட்டியில் பாகிஸ்தான்..! வெற்றியை தொடருமா தென்னாப்பிரிக்கா..?

T20 World Cup : சூப்பர் 12 சுற்றில் முக்கியமான போட்டியில் பாகிஸ்தான் அணி இன்று தென்னாப்பிரிக்காவை நேருக்கு நேர் சந்திக்கின்றது.

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலககோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அரையிறுதிக்கு முன்னேறப்போவது யார்? என்பதை தீர்மானிக்கும் கடத்ததில் சூப்பர் 12 சுற்று இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இந்த நிலையில், சூப்பர் 12 ஆட்டத்தில் குரூப் 2 பிரிவில் இன்று முக்கியமான போட்டியில் பாகிஸ்தான் அணி தென்னாப்பிரிக்காவை சந்திக்கிறது. இந்த தொடரில் 2 தோல்வி, 1 தோல்வியுடன் உள்ள பாகிஸ்தான் அணிக்கு இந்த போட்டி வாழ்வா? சாவா? போட்டி ஆகும். சிட்னியில் இன்று மதியம் 1.30 மணிக்கு இந்த போட்டி நடைபெற உள்ளது.


T20 WC PAK vs SA : வாழ்வா? சாவா? போட்டியில் பாகிஸ்தான்..! வெற்றியை தொடருமா தென்னாப்பிரிக்கா..?

புள்ளிப்பட்டியலில் 2 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ள பாகிஸ்தான் அணி இன்றைய போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்று, சூப்பர் 12 சுற்றின் மற்ற ஆட்டங்கள் அவர்களுக்கு சாதகமாக அமைந்தால் மட்டுமே பாகிஸ்தான் அரையிறுதி வாய்ப்பு நனவாகும். அதேசமயம், 3 போட்டிகளில் ஆடி 2 வெற்றியுடன் எந்த தோல்வியையும் சந்திக்காமல் 5 புள்ளிகளுடன் உள்ள தென்னாப்பிரிக்கா அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் அவர்களின் அரையிறுதி உறுதி செய்யப்படும். பாகிஸ்தான் அணி தோற்றால் தொடரை விட்டு வெளியேறும்.

பாகிஸ்தான் அணிக்கு கேப்டன் பாபர் அசாமின் பார்ம் மிகவும் கவலையளிக்கும் விதமாக உள்ளது. பாபர் அசாம் இன்றைய போட்டியில் பார்முக்கு திரும்ப வேண்டியது அவசியம் ஆகும். அதேபோல, தொடக்க வீரர் முகமது ரிஸ்வானும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியம். மிடில் ஆர்டர் வீரர்களான ஷான் மசூத், ஷதாப்கான், முகமது நவாஸ், முகமது ஹாரீஸ், இப்திகார் அகமது ஆகியோரும் அதிரடியாக ஆடினால் மட்டுமே பாகிஸ்தான் மிகப்பெரிய ரன்களை குவிக்கும்.


T20 WC PAK vs SA : வாழ்வா? சாவா? போட்டியில் பாகிஸ்தான்..! வெற்றியை தொடருமா தென்னாப்பிரிக்கா..?

தென்னாப்பிரிக்கா அணியை பொறுத்தவரையில் பேட்டிங்கில் ரோசோவ் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவரது அதிரடி இன்றும் தொடர்ந்தால் தென்னாப்பிரிக்கா மிகப்பெரிய ஸ்கோர் எட்டும். டி காக், மார்க்ரம், மில்லரும் அதிரடி காட்ட வேண்டியது அவசியம் ஆகும். கேப்டன் பவுமா அதிரடியாக ஆட வேண்டியது கட்டாயம் ஆகும்.

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர்களான ஷாகின் அப்ரீடி, ஹரீஸ் ராஃப், நசீம்ஷா வேகத்தில் மிரட்ட வேண்டியது அவசியம் ஆகும். நவாஸ், ஷதாப் சுழலில் ஒத்துழைத்தால் அந்த அணிக்கு பக்கபலமாக அமையும். தென்னாப்பிரிக்கா அணியில் ரபடா, நோர்ட்ஜே, ஜான்சென் பந்துவீச்சிற்கு பக்கபலமாக இருக்கின்றனர். கிளாசெனும் வேகத்தில் மிரட்ட காத்திருக்கிறார்.

இந்த போட்டி இரு அணிக்கும் அரையிறுதி வாய்ப்பிற்கான போட்டி என்பதால் இரு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்பதால் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது. பாகிஸ்தான் – தென்னாப்பிரிக்கா அணிகள் இதுவரை 21 டி20 போட்டிகளில் ஆடியுள்ளனர். அதில் 11 முறை பாகிஸ்தானும், 10 முறை தென்னாப்பிரிக்க அணியும் வெற்றி பெற்றுள்ளன.

மேலும் படிக்க : Virat Kohli Record: ஒரே போட்டியில் சச்சினின் இரண்டு ரெக்காரட்டுகளை எட்டி பிடித்த விராட் கோலி.. என்ன சாதனை தெரியுமா.. ?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ.9 ஆயிரம் கோடியில் டாடா கார் ஆலை; 5 ஆயிரம் பேருக்கு வேலை: அடிக்கல் நாட்டிய முதல்வர்
ரூ.9 ஆயிரம் கோடியில் டாடா கார் ஆலை; 5 ஆயிரம் பேருக்கு வேலை: அடிக்கல் நாட்டிய முதல்வர்
Breaking News LIVE 28th Sep 2024: கூகுள் மேப்பை பயன்படுத்தி ஏடிஎம் தேர்வு செய்த மேவாட் கொள்ளையர்கள்: வெளியான தகவல்
Breaking News LIVE 28th Sep 2024: கூகுள் மேப்பை பயன்படுத்தி ஏடிஎம் தேர்வு செய்த மேவாட் கொள்ளையர்கள்: வெளியான தகவல்
Hosur Fire Accident: ஓசூரில் டாடா செல்போன் உற்பத்தி ஆலையில் பயங்கர தீ விபத்து - பதறி ஓடிய தொழிலாளர்கள்
Hosur Fire Accident: ஓசூரில் டாடா செல்போன் உற்பத்தி ஆலையில் பயங்கர தீ விபத்து - பதறி ஓடிய தொழிலாளர்கள்
Exclusive: “திமுக ஆட்சியில் பங்கு?” மனம் திறந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை..!
“திமுக ஆட்சியில் பங்கு?” மனம் திறந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi | கேள்வி கேட்டா அசிங்க படுத்துவீங்களா? நான்வருவேன் அப்போ தெரியும்! நாள் குறித்த ராகுல்!Thrissur ATM Robbery | GUNSHOT.. CHASING.. ஹரியானா கொள்ளையர்கள் சிக்கியது எப்படி? Namakkal ContainerThiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ.9 ஆயிரம் கோடியில் டாடா கார் ஆலை; 5 ஆயிரம் பேருக்கு வேலை: அடிக்கல் நாட்டிய முதல்வர்
ரூ.9 ஆயிரம் கோடியில் டாடா கார் ஆலை; 5 ஆயிரம் பேருக்கு வேலை: அடிக்கல் நாட்டிய முதல்வர்
Breaking News LIVE 28th Sep 2024: கூகுள் மேப்பை பயன்படுத்தி ஏடிஎம் தேர்வு செய்த மேவாட் கொள்ளையர்கள்: வெளியான தகவல்
Breaking News LIVE 28th Sep 2024: கூகுள் மேப்பை பயன்படுத்தி ஏடிஎம் தேர்வு செய்த மேவாட் கொள்ளையர்கள்: வெளியான தகவல்
Hosur Fire Accident: ஓசூரில் டாடா செல்போன் உற்பத்தி ஆலையில் பயங்கர தீ விபத்து - பதறி ஓடிய தொழிலாளர்கள்
Hosur Fire Accident: ஓசூரில் டாடா செல்போன் உற்பத்தி ஆலையில் பயங்கர தீ விபத்து - பதறி ஓடிய தொழிலாளர்கள்
Exclusive: “திமுக ஆட்சியில் பங்கு?” மனம் திறந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை..!
“திமுக ஆட்சியில் பங்கு?” மனம் திறந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை..!
”திமுக அரசை கண்டித்து அக்டோபர் 9ல் உண்ணாவிரதம்” போராட்டத்தை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி..!
“திமுக அரசுக்கு எதிர்ப்பு - அக்டோபர் 9ல் உண்ணாவிரதம்” அறிவித்தார் EPS..!
திருடுபோன வாகனத்தை மீட்ட காவல்துறை: அதிர்ச்சி அடைந்த உரிமையாளர் - சினிமாவை மிஞ்சிய சம்பவம்
திருடுபோன வாகனத்தை மீட்ட காவல்துறை: அதிர்ச்சி அடைந்த உரிமையாளர் - சினிமாவை மிஞ்சிய சம்பவம்
முதல்வர் வருகை.. 2 வருட போராட்டம்.. அனுமதியை மீறி பேரணி.. பரபரப்பில் காஞ்சிபுரம்
முதல்வர் வருகை.. 2 வருட போராட்டம்.. அனுமதியை மீறி பேரணி.. பரபரப்பில் காஞ்சிபுரம்
108 வயதில் காலமானார் பாப்பம்மாள் பாட்டி - முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்!
108 வயதில் காலமானார் பாப்பம்மாள் பாட்டி - முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்!
Embed widget