மேலும் அறிய

அடுத்த இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரா..? எகிறும் எதிர்பார்ப்பு..

இந்தியாவில் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் அடுத்த இந்திய அணி ஆடவர் தேர்வுக்குழு தலைவராக தேர்தெடுக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக தனியார் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. 

இந்தியாவில் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் அடுத்த இந்திய அணி ஆடவர் தேர்வுக்குழு தலைவராக தேர்தெடுக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக தனியார் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. 

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை டி20 தொடரில் இந்திய அணி அபாரமாக ஆடினாலும், அரையிறுதியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோல்வி அடைந்தது. இந்திய அணி தோல்வி அடைந்ததை காட்டிலும் ஒரு விக்கெட்டை கூட கைப்பற்றாமல் தோற்றது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்திய அணியின் டி20 மறுகட்டமைக்கப்படுகிறது என்ற தகவல்கள் பரவி வந்த நிலையில், கிரிக்கெட் வீரர்கள் தேர்வுக்குழுவை பி.சி.சி.ஐ. நீக்கியது. முன்னாள் கிரிக்கெட் வீரர் சேத்தன் ஷர்மா தலைமையில் செயல்பட்ட தேர்வுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் நீக்கப்பட்டனர். உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஏற்பட்ட தோல்வியே இந்த அதிரடி முடிவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

மேலும், இந்திய அணியை தேர்வு செய்வதற்கான தேசிய தேர்வுக்குழு உறுப்பினர்களுக்கான பதவிகளுக்கான விண்ணப்பங்களும் வரவேற்கப்படுவதாக பி.சி.சி.ஐ. தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தது. இதையடுத்து, பல முன்னாள் இந்திய வீரர்கள் தங்களுக்கு விருப்பம் இருப்பதாக தெரிவித்து விண்ணப்பங்களை பதிவு செய்தனர். 

இந்தநிலையில், இந்தியாவில் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் அடுத்த இந்திய அணி ஆடவர் தேர்வுக்குழு தலைவராக தேர்தெடுக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக தனியார் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. 

வெங்கடேஷ் பிரசாத் 1990 களில் இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளராக இருந்தவர். அவர் 1996 முதல் 2001 வரை இந்திய அணிக்காக 33 டெஸ்ட் மற்றும் 161 ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்று 292 விக்கெட்டுகளை எடுத்தார்.

இதை தவிர 2007 டி 20 உலகக் கோப்பையில் இந்திய அணி கோப்பையை வென்றபோது பந்துவீச்சு பயிற்சியாளராகவும் இருந்தார். தொடர்ந்து, 2008-09 வரை சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சியாளராகவும், பஞ்சாப் கிங்ஸின் பந்துவீச்சு பயிற்சியாளராகவும் இருந்தார். மேலும் கர்நாடகா மற்றும் உத்தரபிரதேசத்தின் தலைமை பயிற்சியாளராகவும் இருந்தார்.

 2016 முதல் 2018 வரை 19 வயதுக்குட்பட்ட தேர்வாளராகவும் இருந்தார். இதில் இந்தியா ஒரு அண்டர்-19 உலக கோப்பை 2016ல் இறுதிப் போட்டி வரை சென்று 2018 ல் கோப்பையையும் வென்றது.

இந்திய அணி ஆடவர் தேர்வுக்குழு தலைவர் பதவிக்கு தென்மண்டல சேர்ந்த டி வாசு, கன்வால்ஜித் சிங் ஆகியோர் விண்ணப்பித்து இருந்தனர்.  இந்த பதவிக்கு தேர்வாளர்கள் 60 வயதுக்குள் இருக்க வேண்டும் என்பதால் 64 வயதான கன்வால்ஜித் சிங் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. அதேபோல், மேற்கு மண்டலத்திலிருந்து மும்பை தலைமை தேர்வாளர் சலில் அன்கோலா முன்னணியில் உள்ளார். அவரை தொடர்ந்து, நயன் மோங்கியா மற்றும் சமீர் டிகே ஆகியோரும், கிழக்கு மண்டலத்தில் இருந்து, சுப்ரோதோ பானர்ஜி மற்றும் எஸ்எஸ் தாஸ் ஆகியோர் வலுவான போட்டியாளர்களாக உள்ளனர். 

மீண்டும் விண்ணப்பித்த சேத்தன் சர்மா:

பிசிசிஐ தேர்வாளரின் முன்னாள் தலைவர் சேத்தன் ஷர்மா அகில இந்திய தேர்வாளர்கள் குழுவில் மீண்டும் பதவிக்கு விண்ணப்பித்துள்ளார். மேலும், மத்திய மண்டலத்திலிருந்து தேர்வுக் குழுவின் ஒரு பகுதியாக இருந்த ஹர்விந்தர் சிங்கும் பதவிக்கு மீண்டும் விண்ணப்பித்துள்ளார். 

 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பாஜகவில் சாதி லாபியா? தமிழிசை, அண்ணாமலை, எஸ்.வி.சேகர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?- திருச்சி சூர்யா கேள்வி
பாஜகவில் சாதி லாபியா? தமிழிசை, அண்ணாமலை, எஸ்.வி.சேகர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?- திருச்சி சூர்யா கேள்வி
NEET UG row: விஸ்வரூபம் எடுக்கும் நீட் தேர்வு விவகாரம்: சிபிஐ வசம் விசாரணை ஒப்படைப்பு- வழக்குப் பதிவு
NEET UG row: விஸ்வரூபம் எடுக்கும் நீட் தேர்வு விவகாரம்: சிபிஐ வசம் விசாரணை ஒப்படைப்பு- வழக்குப் பதிவு
அப்பளம் போல நொறுங்கிய கார்! ஆந்திராவைச் சேர்ந்த 2 பக்தர்கள் மரணம் - பெரும் சோகம்
அப்பளம் போல நொறுங்கிய கார்! ஆந்திராவைச் சேர்ந்த 2 பக்தர்கள் மரணம் - பெரும் சோகம்
Breaking News LIVE: தமிழக பா.ஜ.க.வில் சாதிய அடிப்படையில் நடவடிக்கையா? திருச்சி சூர்யா கேள்வி
Breaking News LIVE: தமிழக பா.ஜ.க.வில் சாதிய அடிப்படையில் நடவடிக்கையா? திருச்சி சூர்யா கேள்வி
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Mamata banerjee campaign for Priyanka | பிரியங்காவுக்காக வரும் மம்தா! I.N.D.I.A கூட்டணியின் ப்ளான்Salem leopard | இறந்து கிடக்கும் ஆடுகள்! சிறுத்தை பீதியில் மக்கள்! வனத்துறைக்கு கோரிக்கைChennai's Amirtha  : சென்னைஸ் அமிர்தாவின் 8வது பட்டமளிப்பு விழா 250 மாணவர்கள் தேர்ச்சி!Chandrababu naidu assembly :மந்திரங்கள் முழங்க ENTRY! விழுந்து வணங்கிய சந்திரபாபு! கட்டியணைத்த பவன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவில் சாதி லாபியா? தமிழிசை, அண்ணாமலை, எஸ்.வி.சேகர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?- திருச்சி சூர்யா கேள்வி
பாஜகவில் சாதி லாபியா? தமிழிசை, அண்ணாமலை, எஸ்.வி.சேகர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?- திருச்சி சூர்யா கேள்வி
NEET UG row: விஸ்வரூபம் எடுக்கும் நீட் தேர்வு விவகாரம்: சிபிஐ வசம் விசாரணை ஒப்படைப்பு- வழக்குப் பதிவு
NEET UG row: விஸ்வரூபம் எடுக்கும் நீட் தேர்வு விவகாரம்: சிபிஐ வசம் விசாரணை ஒப்படைப்பு- வழக்குப் பதிவு
அப்பளம் போல நொறுங்கிய கார்! ஆந்திராவைச் சேர்ந்த 2 பக்தர்கள் மரணம் - பெரும் சோகம்
அப்பளம் போல நொறுங்கிய கார்! ஆந்திராவைச் சேர்ந்த 2 பக்தர்கள் மரணம் - பெரும் சோகம்
Breaking News LIVE: தமிழக பா.ஜ.க.வில் சாதிய அடிப்படையில் நடவடிக்கையா? திருச்சி சூர்யா கேள்வி
Breaking News LIVE: தமிழக பா.ஜ.க.வில் சாதிய அடிப்படையில் நடவடிக்கையா? திருச்சி சூர்யா கேள்வி
NEET PG 2024: நீட் தேர்வை கடைசி நேரத்தில் ஒத்திவைப்பதா? திருமண தேதியையே மாற்றினேன்- மன உளைச்சலில் மாணவர்கள்!
NEET PG 2024: நீட் தேர்வை கடைசி நேரத்தில் ஒத்திவைப்பதா? திருமண தேதியையே மாற்றினேன்- மன உளைச்சலில் மாணவர்கள்!
Tenkasi: அச்சச்சோ! 8 வயது சிறுமியை கடித்து குதறிய 10 நாய்கள் - தென்காசியில் சோகம்
Tenkasi: அச்சச்சோ! 8 வயது சிறுமியை கடித்து குதறிய 10 நாய்கள் - தென்காசியில் சோகம்
Vijay 50th Birthday: நடிகர் விஜய்க்கு போட்டி போட்டு வாழ்த்து தெரிவித்த அரசியல் தலைவர்கள் - பின்னணி இதுதான்!
Vijay 50th Birthday: நடிகர் விஜய்க்கு போட்டி போட்டு வாழ்த்து தெரிவித்த அரசியல் தலைவர்கள் - பின்னணி இதுதான்!
சென்னையில் பயங்கரம் :  தாய், தம்பி கொலை.. தியேட்டரில் படம் பார்த்துவிட்டு பஸ் ஸ்டாண்டில் தூங்கிய இளைஞர்!
தாய், தம்பி கொலை.. தியேட்டரில் படம் பார்த்துவிட்டு பஸ் ஸ்டாண்டில் தூங்கிய இளைஞர்!
Embed widget