மேலும் அறிய

T20 World Cup: டி20 உலகக்கோப்பை.. இந்திய அணிக்கு ரவி சாஸ்திரி சொன்ன அட்வைஸ்!

டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியைப் பற்றி இப்போது சிந்திக்கத் தேவையில்லை என்று ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

டி20 உலகக் கோப்பை 2024:

ஐசிசி டி20 உலகக் கோப்பை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஜூன் 22) நடைபெறும் சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி வங்கதேசம் அணியை எதிர்கொண்டு விளையாட உள்ளது. முன்னதாக கடந்த ஜூன் 20 ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை 47 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது இந்திய அணி. அந்தவகையில் இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் எளிமையாக அரையிறுதி வாய்ப்பை பெறும்.

அதன் பின் ஆஸ்திரேலிய அணியுடன் தோல்வி அடைந்தால் கூட ரன் ரேட் அடிப்படையில் இந்திய அணியால் அரையிறுதி சுற்றில் விளையாட முடியும். ஏற்கனவே ஒருநாள் உலகக் கோப்பை போட்டியின் போது இந்திய அணி தோல்வியே அடையாமல் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தது. இது போல் இந்த முறை நடைபெறாமல் இருப்பதற்கு இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி சில ஆலோசனைகளை இந்திய அணிக்கு வழங்கியுள்ளார்.

ரவி சாஸ்திரி அட்வைஸ்:

இது தொடர்பாகா அவர் பேசுகையில், “இந்திய அணியை பொறுத்தவரை போட்டியில்  மட்டும் தான் கவனத்தை செலுத்த வேண்டும் என்று நினைக்கிறேன். டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியைப் பற்றி இப்போது சிந்திக்கத் தேவையில்லை. மற்றொரு போட்டியாக எண்ணி விளையாடும் போது வெற்றி எளிதாக கிடைக்கும். இந்திய வீரர்களின் ஆட்டம் தற்போது அப்படிதான் இருக்கிறது. இதனை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். இந்திய அணியின் முக்கியமான வீரர் ஜஸ்பிரித் பும்ரா தான்.

அவருக்கு பிட்ச் எப்படி இருக்கிறது என்பதே தேவையில்லை. எந்த பிட்சிலும் சூழலுக்கு ஏற்ப பவுலிங் செய்து விக்கெட்டை வீழ்த்த கூடியவர். அவரிடம் அவ்வளவு வெரைட்டியான பந்துகள் உள்ளது. ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் நீண்ட நாட்களுக்கு பின் புதிய பந்தில் பவுலிங் செய்தார். சிராஜ் இல்லாத போது, குர்பாஸின் விக்கெட்டை 2வது பந்திலேயே வீழ்த்தி அசத்தினார். அவரால் எந்த பிட்சிலும், சூழலிலும் வேகமாக மாறிக் கொள்ள முடிகிறது.

அர்ஷ்தீப் சிங் வீசிய ஓவரில் பேட்ஸ்மேன் ஆக்ரோஷமாக விளையாடுவதை கண்ட பின், உடனடியாக வேகத்தில் மாற்றம் செய்ய வேண்டும் என்று புத்திசாலித்தனமாக சிந்திக்கிறார். இந்திய அணி அச்சமின்றி விளையாட வேண்டும்” என்று ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs BAN LIVE Score: பேட்டிங்கை தொடங்கிய இந்தியா.. ரோஹித் - கோலி அதிரடி!
IND vs BAN LIVE Score: பேட்டிங்கை தொடங்கிய இந்தியா.. ரோஹித் - கோலி அதிரடி!
GST Rate Change: பால் கேன்களுக்கு 12% ஜி.எஸ்.டி, ரயில் ப்ளாட்பார்ம், மாணவர் விடுதிகளுக்கு வரி விலக்கு- நிதியமைச்சர்
GST Rate Change: பால் கேன்களுக்கு 12% ஜி.எஸ்.டி, ரயில் ப்ளாட்பார்ம், மாணவர் விடுதிகளுக்கு வரி விலக்கு- நிதியமைச்சர்
Hinduja Family : ஊழியர்களுக்கு கொடுமை.. சிறை செல்லும் ஹிந்துஜா குடும்பத்தினர்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Hinduja Family : ஊழியர்களுக்கு கொடுமை.. சிறை செல்லும் ஹிந்துஜா குடும்பத்தினர்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
கோயில் நில ஆக்கிரமிப்பு: ரூ.5, 812 கோடி சொத்துக்கள் மீட்பு; 17, 450 பேர் மீது நடவடிக்கை - அறநிலையத்துறை
கோயில் நில ஆக்கிரமிப்பு: ரூ.5, 812 கோடி சொத்துக்கள் மீட்பு; 17, 450 பேர் மீது நடவடிக்கை - அறநிலையத்துறை
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Chandrababu naidu assembly :மந்திரங்கள் முழங்க ENTRY! விழுந்து வணங்கிய சந்திரபாபு! கட்டியணைத்த பவன்Saattai Duraimurugan Kallakurichi : சாட்டை மீது தாக்குதல்! கள்ளக்குறிச்சியில் பரபரப்பு!நடந்தது என்ன?Kallakurichi kalla sarayam  : Suriya on Kallakurichi Kallasarayam: ”தமிழக அரசுக்கு கண்டனம்! 20 ஆண்டுகளாக அவலம்” கொந்தளித்த சூர்யா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs BAN LIVE Score: பேட்டிங்கை தொடங்கிய இந்தியா.. ரோஹித் - கோலி அதிரடி!
IND vs BAN LIVE Score: பேட்டிங்கை தொடங்கிய இந்தியா.. ரோஹித் - கோலி அதிரடி!
GST Rate Change: பால் கேன்களுக்கு 12% ஜி.எஸ்.டி, ரயில் ப்ளாட்பார்ம், மாணவர் விடுதிகளுக்கு வரி விலக்கு- நிதியமைச்சர்
GST Rate Change: பால் கேன்களுக்கு 12% ஜி.எஸ்.டி, ரயில் ப்ளாட்பார்ம், மாணவர் விடுதிகளுக்கு வரி விலக்கு- நிதியமைச்சர்
Hinduja Family : ஊழியர்களுக்கு கொடுமை.. சிறை செல்லும் ஹிந்துஜா குடும்பத்தினர்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Hinduja Family : ஊழியர்களுக்கு கொடுமை.. சிறை செல்லும் ஹிந்துஜா குடும்பத்தினர்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
கோயில் நில ஆக்கிரமிப்பு: ரூ.5, 812 கோடி சொத்துக்கள் மீட்பு; 17, 450 பேர் மீது நடவடிக்கை - அறநிலையத்துறை
கோயில் நில ஆக்கிரமிப்பு: ரூ.5, 812 கோடி சொத்துக்கள் மீட்பு; 17, 450 பேர் மீது நடவடிக்கை - அறநிலையத்துறை
Vijay Birthday: வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த த.வெ.க.வினர் ; விஜய் பிறந்தநாளில் மதுரையில் நெகிழ்ச்சி
வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த த.வெ.க.வினர் ; விஜய் பிறந்தநாளில் மதுரையில் நெகிழ்ச்சி
Madurai: கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம்; நீதி கேட்டு  ஆர்ப்பாட்டம்; கைதான எச்.ராஜா
கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம்; நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்; கைதான எச்.ராஜா
விழுப்புரத்தில் பரபரப்பு... விஷச்சாராயம் குடித்த இருவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
விழுப்புரத்தில் பரபரப்பு... விஷச்சாராயம் குடித்த இருவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
காப்பாற்ற முயற்சி செய்த கணவர்.. மாடியில் இருந்து விழுந்த பெண்.. கர்நாடகாவில் சோகம்!
காப்பாற்ற முயற்சி செய்த கணவர்.. மாடியில் இருந்து விழுந்த பெண்.. கர்நாடகாவில் சோகம்!
Embed widget