மேலும் அறிய

Team India New Coach: இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் பதவிக்கு மோடி, அமித்ஷா விண்ணப்பம் - என்ன நடக்கிறது?

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு 3000 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர் யார் என்ற கேள்விக்கு இதுவரை பதில் இல்லை. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தலைமை பயிற்சியாளருக்கான விண்ணப்பங்களை கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டது. ஆனால் அதன் காலக்கெடு (நேற்றுடன்) மே 27ம் தேதியுடன் முடிவடைந்தது. இருப்பினும், இன்று வரை அடுத்த இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் யார் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், ஒரு சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பிசிசிஐ சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், தலைமை பயிற்சியாளர் பதவிக்கு இதுவரை 3000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளன. இவற்றில் பெரும்பாலான விண்ணப்பங்கள் போலியானவை என்றும் தெரிவித்துள்ளது. 

மோடி, அமித்ஷா பெயரில் விண்ணப்பம்:

இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியின்படி, இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு 3000 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளன. அதில், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு பிரதமர் நரேந்திர மோடி , மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா , சிறந்த கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், முன்னாள் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி, வீரேந்திர சேவாக் உள்பட ஏராளமானோரது போலி விண்ணப்பங்கள் வந்துள்ளது. ஆனால் இந்த விண்ணப்பங்கள் அனைத்தும் போலியானவை. விண்ணப்பத்திற்கான கூகுள் படிவத்தை பி.சி.சி.ஐ. பகிர்ந்த நிலையில், சிறிது நேரத்திலேயே இந்தப் படிவம் அகற்றப்பட்டது.

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் யார்? 

இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் உள்ளார். தற்போது அவர் இரண்டாவது முறையாக பதவி வகித்து வருகிறார். மீண்டும் தலைமை பயிற்சியாளராக டிராவிட்டை தொடர, பிசிசிஐ வலியுறுத்தினாலும், குடும்பத்துடன் நேரம் செலவழிக்க வேண்டும் என்று தெரிவித்து டிராவிட் மறுத்துள்ளார்.

முன்னதாக, 2023ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பையுடன் டிராவிட்டின் பதவிக்காலம் முடிவடைந்தது. ஆனால், பிசிசிஐயின் வேண்டுகோளுக்கு இணங்க நீட்டித்துகொண்ட டிராவிட், வருகின்ற ஜூன் மாதம் நடைபெறும் 2024 டி20 உலகக் கோப்பையுடன் தனது பதவிக்காலத்தை முடித்து கொள்கிறார். எனவே, இதற்குப் பிறகு யார் அந்த பொறுப்பை வகிப்பார்கள் என்பது இன்னும் தெரியவில்லை. ராகுல் டிராவிட் பதவி காலத்தின் கீழ் இந்திய அணி கடந்த சில ஆண்டுகளாகவே சிறப்பாக செயல்பட்டது.

2023 ஒருநாள் உலகக் கோப்பையில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இருப்பினும், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இறுதிப்போட்டியில் தோல்வியடைந்து இரண்டாம் இடத்தை மட்டுமே பிடித்தது. இந்த ஒருநாள் உலகக் கோப்பை போட்டிக்கு முன்னதாக, தலைமை பயிற்சியாளர் டிராவிட் - கேப்டன் ரோஹித் கூட்டணியில் இந்திய அணி ஆசியக் கோப்பையில் சாம்பியன் பட்டத்தை வென்றது. 

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு பல முன்னாள் வீரர்களின் பெயர்கள் அதிகளவில் சமூக வலைதளங்களில் அடிப்பட்டது. அதில், ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங், ஜஸ்டின் லாங்கர், கௌதம் கம்பீர், மஹாலே ஜெயவர்த்தனே, ஆஷிஷ் நெஹ்ரா உள்ளிட்டவர்கள் பெயர்கள் அதிகம் பேசப்பட்டது. ஆனால் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு ஆஸ்திரேலிய வீரர்கள் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று பிசிசிஐ தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தானும் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்தார். இந்த சூழலில், கம்பீர் தலைமைப் பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Ration Card: 55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
Embed widget