மேலும் அறிய

Rishabh Pant : எப்போவுமே பாசிட்டிவாக இருக்கிறார்.. ரிஷப் பந்த், யுவராஜ் சிங் எமோஷ்னல் மீட்டிங்

"நல்ல சந்திப்பு, அவ்வளவு சிரித்தோம்… என்ன ஒரு மனிதர், எல்லா நேரத்திலுமே பாசிட்டிவாகவும், ஃபன்னாகவும் இருக்கிறார்! மேலும் ஆற்றலுடன் எழுந்து வாருங்கள்", என்று பதிவிட்டிருந்தார்

கடந்த டிசம்பரில் தீவிர விபத்துக்குள்ளான ரிஷப் பந்த் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக தேறி வரும் நிலையில், அவரை இந்திய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங் சந்தித்து, அதன்பின் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

ரிஷப் பந்த் விபத்து

கடந்த வருடம் டிசம்பர் 30-ம் தேதி டெல்லி - டேராடூன் தேசிய நெடுஞ்சாலையில் ரிஷப் பந்த் காரில் அவரே ஓட்டிக்கொண்டு தனியாக பயணித்த போது சாலையின் இடையே இருந்த தடுப்பு கட்டையில் மோதி விபத்துக்குள்ளானார். ரூர்கி அருகே நடந்த இந்த விபத்தில், கார் தீப்பற்றிய நிலையில், அதில் சிக்கி இருந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் உடனடியாக மீட்டனர். தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு நெற்றியில் இரண்டு இடங்களில் வெட்டுக் காயம் ஏற்பட்டதாகவும், வலது முழங்காலில் தசைநார் கிழிந்ததாகவும், வலது மணிக்கட்டு, கணுக்கால், கால் விரலிலும் காயம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. முதுகில் சில சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டன.

Rishabh Pant : எப்போவுமே பாசிட்டிவாக இருக்கிறார்.. ரிஷப் பந்த், யுவராஜ் சிங் எமோஷ்னல் மீட்டிங்

வெற்றிடத்தை உணரும் இந்திய அணி

மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனை மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் அவருக்கு முழங்காலில் அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. இந்த சம்பவம் கிரிக்கெட் ரசிகர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது, கிரிக்கெட் உலகையே உலுக்கியது. பல வீரர்கள் இந்த செய்தியை கேட்டு அதிர்ந்தனர். இன்றுவரை எல்லா போட்டிகளிலும் அவருக்கான இடம் நிரப்படாமல் உள்ளது. நிரப்ப முடியாமல் திணறி வருகிறது இந்திய அணி, குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில். இடையில் வந்து இறங்கி மளமளவென பவுண்டரிகளை, சிக்ஸர்களை விளாசும் அவரது டெஸ்ட் அதிரடியை எல்லோருமே மிஸ் செய்கிறோம்.

தொடர்புடைய செய்திகள்: PM Modi Factcheck : பிரதமர் மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசா? நோபல் பரிசு பரிந்துரை குழுவின் துணைத் தலைவர் பேசியது இதுதான்..!

உடல்நல அப்டேட்டுகள்

சிகிச்சைகள் முடிந்து வீட்டுக்கு திரும்பிய அவர், தற்போது காயத்தில் இருந்து மெதுவாக மீண்டு வருகிறார். அவர் களம் திரும்ப ஓராண்டு காலம் ஆகும் என கூறப்படும் நிலையில் அவரின் வருகையை எதிர்பார்க்காத கிரிக்கெட் ரசிகர்களே இல்லை. அவரும் தன்னை எதிர்பார்க்கும் ரசிகர்களுக்காக அவ்வப்போது புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு அவரது உடல்நிலை அப்டேட்டை தெரிவிப்பார். இம்முறை இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் யுவராஜ் சிங் அந்த வேலையை செய்துள்ளார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Yuvraj Singh (@yuvisofficial)

யுவராஜ் சிங் இன்ஸ்டாகிராம் பதிவு

அவரை சென்று சந்தித்த அவர், அவரோடு இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டு, அதனை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் யுவராஜ் சிங், "குழந்தை போல் நடக்க துவங்குகிறார் !!! இந்த சாம்பியன் விரைவில் மீண்டும் எழப் போகிறார். நல்ல சந்திப்பு, அவ்வளவு சிரித்தோம்… என்ன ஒரு மனிதர், எல்லா நேரத்திலுமே பாசிட்டிவாகவும், மகிழ்வுடனும் இருக்கிறார்! மேலும் ஆற்றலுடன் எழுந்து வாருங்கள்", என்று எழுதி இருந்தார். அந்த பதிவில் இருந்து புகைப்படத்தில் ரிஷப் பந்தின் முகம், கைகள் காயங்கள் இன்றி முன்பைப்போல் மாறிவிட்டன. காலை தூக்கி டேபிள் மேல் வைத்துள்ளார். அதில் மட்டும் கட்டு கட்டியிருக்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். நேற்றிரவு வெளிவிடப்பட்ட இந்த பதிவை இதுவரை மட்டுமே ஆறு லட்சம் பேர் லைக் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பலர் யுவராஜ் சிங்கின் இந்த செயல்பாடு குறித்து புகழ்ந்து வருகின்றனர், பலர் ரிஷப் பந்த் விரைவில் அணிக்கு திரும்ப வேண்டும் என்றும் உடல் நிலை சரியாக வேண்டும் என்றும் விருப்பம் தெரிவிக்கின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பாஜகவில் சாதி லாபியா? தமிழிசை, அண்ணாமலை, எஸ்.வி.சேகர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?- திருச்சி சூர்யா கேள்வி
பாஜகவில் சாதி லாபியா? தமிழிசை, அண்ணாமலை, எஸ்.வி.சேகர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?- திருச்சி சூர்யா கேள்வி
NEET UG row: விஸ்வரூபம் எடுக்கும் நீட் தேர்வு விவகாரம்: சிபிஐ வசம் விசாரணை ஒப்படைப்பு- வழக்குப் பதிவு
NEET UG row: விஸ்வரூபம் எடுக்கும் நீட் தேர்வு விவகாரம்: சிபிஐ வசம் விசாரணை ஒப்படைப்பு- வழக்குப் பதிவு
அப்பளம் போல நொறுங்கிய கார்! ஆந்திராவைச் சேர்ந்த 2 பக்தர்கள் மரணம் - பெரும் சோகம்
அப்பளம் போல நொறுங்கிய கார்! ஆந்திராவைச் சேர்ந்த 2 பக்தர்கள் மரணம் - பெரும் சோகம்
Breaking News LIVE: தமிழக பா.ஜ.க.வில் சாதிய அடிப்படையில் நடவடிக்கையா? திருச்சி சூர்யா கேள்வி
Breaking News LIVE: தமிழக பா.ஜ.க.வில் சாதிய அடிப்படையில் நடவடிக்கையா? திருச்சி சூர்யா கேள்வி
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Mamata banerjee campaign for Priyanka | பிரியங்காவுக்காக வரும் மம்தா! I.N.D.I.A கூட்டணியின் ப்ளான்Salem leopard | இறந்து கிடக்கும் ஆடுகள்! சிறுத்தை பீதியில் மக்கள்! வனத்துறைக்கு கோரிக்கைChennai's Amirtha  : சென்னைஸ் அமிர்தாவின் 8வது பட்டமளிப்பு விழா 250 மாணவர்கள் தேர்ச்சி!Chandrababu naidu assembly :மந்திரங்கள் முழங்க ENTRY! விழுந்து வணங்கிய சந்திரபாபு! கட்டியணைத்த பவன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவில் சாதி லாபியா? தமிழிசை, அண்ணாமலை, எஸ்.வி.சேகர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?- திருச்சி சூர்யா கேள்வி
பாஜகவில் சாதி லாபியா? தமிழிசை, அண்ணாமலை, எஸ்.வி.சேகர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?- திருச்சி சூர்யா கேள்வி
NEET UG row: விஸ்வரூபம் எடுக்கும் நீட் தேர்வு விவகாரம்: சிபிஐ வசம் விசாரணை ஒப்படைப்பு- வழக்குப் பதிவு
NEET UG row: விஸ்வரூபம் எடுக்கும் நீட் தேர்வு விவகாரம்: சிபிஐ வசம் விசாரணை ஒப்படைப்பு- வழக்குப் பதிவு
அப்பளம் போல நொறுங்கிய கார்! ஆந்திராவைச் சேர்ந்த 2 பக்தர்கள் மரணம் - பெரும் சோகம்
அப்பளம் போல நொறுங்கிய கார்! ஆந்திராவைச் சேர்ந்த 2 பக்தர்கள் மரணம் - பெரும் சோகம்
Breaking News LIVE: தமிழக பா.ஜ.க.வில் சாதிய அடிப்படையில் நடவடிக்கையா? திருச்சி சூர்யா கேள்வி
Breaking News LIVE: தமிழக பா.ஜ.க.வில் சாதிய அடிப்படையில் நடவடிக்கையா? திருச்சி சூர்யா கேள்வி
NEET PG 2024: நீட் தேர்வை கடைசி நேரத்தில் ஒத்திவைப்பதா? திருமண தேதியையே மாற்றினேன்- மன உளைச்சலில் மாணவர்கள்!
NEET PG 2024: நீட் தேர்வை கடைசி நேரத்தில் ஒத்திவைப்பதா? திருமண தேதியையே மாற்றினேன்- மன உளைச்சலில் மாணவர்கள்!
Tenkasi: அச்சச்சோ! 8 வயது சிறுமியை கடித்து குதறிய 10 நாய்கள் - தென்காசியில் சோகம்
Tenkasi: அச்சச்சோ! 8 வயது சிறுமியை கடித்து குதறிய 10 நாய்கள் - தென்காசியில் சோகம்
Vijay 50th Birthday: நடிகர் விஜய்க்கு போட்டி போட்டு வாழ்த்து தெரிவித்த அரசியல் தலைவர்கள் - பின்னணி இதுதான்!
Vijay 50th Birthday: நடிகர் விஜய்க்கு போட்டி போட்டு வாழ்த்து தெரிவித்த அரசியல் தலைவர்கள் - பின்னணி இதுதான்!
சென்னையில் பயங்கரம் :  தாய், தம்பி கொலை.. தியேட்டரில் படம் பார்த்துவிட்டு பஸ் ஸ்டாண்டில் தூங்கிய இளைஞர்!
தாய், தம்பி கொலை.. தியேட்டரில் படம் பார்த்துவிட்டு பஸ் ஸ்டாண்டில் தூங்கிய இளைஞர்!
Embed widget