மேலும் அறிய

Vaikunda Ekadasi: வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு பரமபத வாசல் வழியாக பக்தர்களுக்கு காட்சியளித்த பண்டரிநாதர்

கரூர் நகரப் பகுதியான பண்டரிநாதன் பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ ரகுமாய் தாயார் உடனுறை பண்டரிநாதன் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு நாள்தோறும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

கரூர் பண்டரிநாதன் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பரமபத வாசல் வழியாக பக்தர்களுக்கு காட்சியளித்த பண்டரிநாதர்.

 


Vaikunda Ekadasi: வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு பரமபத வாசல் வழியாக பக்தர்களுக்கு காட்சியளித்த பண்டரிநாதர்

கரூர் நகரப் பகுதியான பண்டரிநாதன் பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ ரகுமாய் தாயார் உடனுறை பண்டரிநாதன் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு நாள்தோறும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் நிகழ்ச்சியை முன்னிட்டு அதிகாலை நடை திறக்கப்பட்டு பல்வேறு சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக முத்தங்கி அலங்காரத்தில் காட்சியளித்த பண்டரி நாதனுக்கு மகா தீபாராதனை கட்டப்பட்டது. பின்னர் மேளதாளங்கள் முழங்க முத்தங்கி அலங்காரத்தில் காட்சியளித்த பண்டரிநாதர் பரமபத வாசல் வழியாக பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதன் தொடர்ச்சியாக ஆலயம் மண்டபத்தில் சுவாமியை கொழுவிருக்க செய்தனர். பின்னர் அனைத்து ஆன்மீக பக்தர்களும் பரமபத வாசல் வழியாக வலம் வந்த பிறகு சுவாமி தரிசனம் செய்தனர். கரூர் பண்டரிநாதன் ஆலயத்தில் நடைபெற்ற சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.

குளித்தலை நீலமேகப் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு. திரளான பக்தர்கள் சொர்க்கவாசலை கடந்து வந்து சுவாமி தரிசனம் செய்து வழிபாடு.

 


Vaikunda Ekadasi: வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு பரமபத வாசல் வழியாக பக்தர்களுக்கு காட்சியளித்த பண்டரிநாதர்

 

கரூர் மாவட்டம் குளித்தலையில் சுமார் 1200 ஆண்டுகளுக்கு மேலாக பராந்தக சோழன்,  வீரபாண்டியன் மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட நீலமேகப் பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த இக்கோவிலில் ஆண்டு தோறும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெருமாள் உற்சவருக்கு  சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டன.

 

 


Vaikunda Ekadasi: வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு பரமபத வாசல் வழியாக பக்தர்களுக்கு காட்சியளித்த பண்டரிநாதர்

சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய நீலமேகப் பெருமாள் உற்சவர், நம்மாழ்வார் திருமங்கையாழ்வார் ராமானுஜர் ஆகிய உற்சவர்களுடன்  சொர்க்க வாசலை கடந்த பின்னர் திரளான பக்தர்கள் "கோவிந்தா கோவிந்தா" என்ற நாமம் முழங்க சொர்க்க வாசலை கடந்து வந்தனர். பின்னர் மண்டபத்தில் எழுந்தருளிய நீலமேகப் பெருமாள் உற்சவருக்கு பக்தர்கள் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு அதிகாலையே  ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் சொர்க்க வாசலை கடந்து வந்து சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். அதேபோல் குளித்தலை  வைகநல்லூர் அக்ரஹாரம் லட்சுமி நாராயண பெருமாள் கோவில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நடைபெற்ற சொர்க்கவாசல் திறப்பிலும் தயாராக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

 

 

 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தினை  அமல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
"இந்தியாவில் முதலீடு செய்ய உலக நாடுகளே விரும்புகிறது" பெருமிதத்துடன் சொன்ன பிரதமர் மோடி!
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
Embed widget