மேலும் அறிய

Sabarimala: கார்த்திகையில் சபரிமலை செல்ல காத்திருக்கும் பக்தரா நீங்கள்? உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் அறிவிப்பு..

சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக சென்னை - பம்பை இடையே நவம்பர் 17ம் தேதி முதல் விரைவு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் கார்த்திகை மாதத்தில் மண்டல பூஜை விழா தொடங்கி நடக்கவுள்ளது. இதனால் சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக சென்னை - பம்பை இடையே நவம்பர் 17ம் தேதி முதல் விரைவு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 

இதுதொடர்பாக அவர்கள் கூறியதாவது, சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு தரிசனத்தை காண தமிழ்நாட்டில் இருந்து ஏராளமானோர் சபரிமலைக்கு வருவது வழக்கம். பக்தர்களின் வசதிக்காக சென்னையில் இருந்து பம்பைக்கு வருகின்ற நவம்பர் 17 ம் தேதி முதல் விரைவு பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது. அதன்படி, சென்னையில் இருந்து பம்பைக்கு பிற்பகல் 3.30 மணிக்கும், 4 மணிக்கும் என 2 பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது. இதில் பெரியவர்களுக்கு ரூ.1,090, சிறியவர்களுக்கு ரூ.545 கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது.

இந்த அதிநவீன மிதவை சொகுசு பேருந்து சேவையை வரும் ஜனவரி 18ம் தேதி வரை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பேருந்துகளின் இருக்கைகளை, www.tnstc.in என்ற இணைய தளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இதேபோல, சென்னையில் இருந்து குமுளிக்கு மாலை 5.30 மணிக்கு வழக்கமாக இயக்கப் படும் பேருந்தையும் பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் பெரியவர்களுக்கு ரூ.575, சிறியவர்களுக்கு ரூ.288 கட்டணம் வசூலிக்கப்படும்” என தெரிவித்தனர். 

சிறப்பு ரயில்கள் :

முக்கிய நகரங்களில் இருந்து கேரளாவிற்கு சபரிமலை சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் அறிவித்து வருகிறது. இந்தவகையில் சென்னை எழும்பூரில் இருந்து சேலம் வழியே கொல்லத்திற்கு 3 சபரிமலை சிறப்பு ரயில்களை ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன்படி, சென்னை எழும்பூர்-கொல்லம் வாராந்திர சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (06061) வரும் 16, 23, 30, டிசம்பர் 7, 14, 21, 28, ஜனவரி 4, 11, 18, 25 ஆம் தேதிகளில் (புதன் கிழமை தோறும்) இயக்கப்படுகிறது. சென்னை எழும்பூரில் பிற்பகல் 3.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியே சேலத்திற்கு இரவு 8.33 க்கு வந்து சேர்கிறது.

பின்னர், 2 நிமிடத்தில் புறப்பட்டு ஈரோட்டிற்கு இரவு 9.30க்கும், திருப்பூருக்கு இரவு 10.10க்கும், போத்தனூருக்கு இரவு 11.28க்கும் சென்று பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம், காயங்குளம் வழியே கொல்லத்திற்கு அடுத்த நாள் காலை 6.15 மணிக்கு சென்றடைகிறது. மறுமார்க்கத்தில், கொல்லம்-சென்னை எழும்பூர் வாராந்திர சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (06062) வரும் 17, 24, டிசம் பர் 1, 8, 15, 22, 29, ஜனவரி 5, 12, 19, 26ம் தேதிகளில் (வியாழக்கிழமை தோறும்) இயக்கப்படுகிறது.

கொல்லத்தில் காலை 8.45 மணிக்கு புறப்படும் இந்த ரயில், சேலத்திற்கு இரவு 8.20 மணிக்கு வந்து, பின்னர் சென்னை எழும்பூருக்கு அடுத்தநாள் அதிகாலை 3.50 மணிக்கு சென்றடைகிறது. இதேபோல், சென்னை எழும்பூர்- கொல்லம் வாராந்திர சிறப்பு கட் டண சிறப்பு ரயில் (06063) வரும் 18, 25 டிசம்பர் 2, 9, 16, 23, 30, ஜனவரி 6, 13, 20, 27ம் தேதிகளில் (வெள்ளிக்கிழமை தோறும்) இயக்கப்படுகிறது. 

சென்னை எழும்பூரில் பிற்பகல் 2.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில், சேலத்திற்கு இரவு 7.33 க்கு வந்து, 2 நிமிடத்தில் புறப்படுகிறது. ஈரோடு, திருப்பூர், பாலக்காடு வழியே கொல்லத்திற்கு அடுத்தநாள் காலை 6.15 மணிக்கு சென்றடைகிறது. மறுமார்க்கத்தில், கொல்லம்-சென்னை எழும்பூர் வாராந்திர சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (06064) வரும் 20, 27, டிசம்பர் 4, 11, 18, 25, ஜனவரி 1, 8,15, 22, 29 ஆம் தேதிகளில் (ஞாயிறுதோறும்) இயக்கப்படுகிறது. கொல்லத்தில் காலை 8.45 மணிக்கு புறப்படும் இந்த ரயில், சேலத்திற்கு இரவு 8.20 மணிக்கு வந்து, பின்னர் சென்னை எழும்பூருக்கு அடுத்தநாள் அதிகாலை 3.50 மணிக்கு சென்றடைகிறது.

சென்னை எழும்பூர்-கொல்லம் வாராந்திர சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (06065) வரும் 21, 28 டிசம்பர் 5, 12, 19, 26, ஜனவரி 2, 9, 16, 23ம் தேதிகளில் (திங்கட்கிழமைதோறும்) இயக்கப்படுகிறது. சென்னை எழும்பூரில் பிற்பகல் 3.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில், சேலத்திற்கு இரவு 7.33 க்கு வந்து செல்கிறது. கொல்லத்திற்கு அடுத்த நாள் காலை 6.15 மணிக்கு சென்றடைகிறது. மறுமார்க்கத்தில், கொல்லம்-சென்னை எழும்பூர் வாராந்திர சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (06066) வரும் 22, 29, டிசம்பர் 6, 13, 20, 27, ஜனவரி 3, 10, 17, 24ம் தேதிகளில் (செவ்வாய்தோறும்) இயக்கப்படுகிறது.

கொல்லத்தில் காலை 8.45 மணிக்கு புறப்படும் இந்த ரயில், சேலத்திற்கு இரவு 8.20 மணிக்கு வந்து, பின்னர்சென்னை எழும்பூருக்கு அடுத்தநாள் அதிகாலை 3.50 மணிக்கு சென்றடைகிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
6G Network: இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
6G Network: இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
Breaking News LIVE 27th Sep 2024:டெல்லியில் சோனியா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!
Breaking News LIVE 27th Sep 2024:டெல்லியில் சோனியா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!
Job Fair: கள்ளக்குறிச்சியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்... விவரம் உள்ளே
கள்ளக்குறிச்சியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்... விவரம் உள்ளே
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
Embed widget