மேலும் அறிய

சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன், இந்த ஆண்டுக்கான வருவாய் இத்தனை கோடியா..?

தற்போது சபரிமலை வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் கூட்டத்தை கட்டுப்படுத்த தினசரி 70,000 பேருக்கு மட்டுமே அனுமதி என்ற கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டுள்ளது.

புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை திருவிழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. அதேபோல ஒவ்வொரு தமிழ் மாதத்தின் (மலையாள மாதத்தின்) முதல் 5 நாட்களிலும், விஷூ, ஓணம் பண்டிகை நாட்களிலும், பங்குனி உத்திரம் திருவிழா நாட்களிலும் சபரிமலை கோவில் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். பிற கோயில்கள் போல ஐயப்பன் கோயில் அனைத்து நாட்களும் திறக்கப்படாது. 


சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன், இந்த ஆண்டுக்கான வருவாய் இத்தனை கோடியா..?

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை நிறைவடைந்து தற்போது மகரவிளக்கு சீசன் நடைபெற்று வருகிறது. ஜனவரி 14ம் தேதி மகரஜோதி தரிசனம் நடைபெற உள்ளது. இதனால் சாமி ஐயப்பனை காண சபரிமலையில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இதுவரை எப்போதும் இல்லாத அளவில் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கோயிலுக்கு வரும் வருமானமும் வெகுவாக அதிகரித்துள்ளது.  வழக்கத்தை விட இந்த ஆண்டு பக்தர்கள் கூட்டம் மட்டுமின்றி கோயில் வருமானமும் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் கிட்டதட்ட ரூ.82 கோடி அளவிற்கு அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு சபரிமலை கோயிலுக்கு கிடைத்த வருமானம் குறித்த விபரத்தை திருவிதாங்கூர் தேவசம் போர்டு வெளியிட்டுள்ளது.

தேவசம் போர்டு தலைவர் பி.எஸ்.பிரசாந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, இந்த ஆண்டு மண்டல பூஜை நவம்பர் 15ம் தேதி துவங்கி, டிசம்பர் 26ம் தேதி வரை நடைபெற்றது. இந்த ஆண்டு ஐயப்ப சீசனின் முதல் பாதியான மண்டல பூஜை காலத்தில் சபரிமலைக்கு பக்தர்கள் அளித்த காணிக்கை மூலமாக ரூ.297 கோடி கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு மண்டல கால பூஜையின் போது ரூ.215 கோடி மட்டுமே வருவாயாக கிடைத்திருந்தது. பக்தர்களின் காணிக்கை மற்றும் அரவண பாயசம், அப்பம் போன்ற பிரசாத பொருட்கள் மூலமாக கோயிலின் வருமானம் அதிகரித்துள்ளது.

சபரிமலையில் இந்த ஆண்டு பிரசாத பொருட்களின் விற்பனை மூலமாக மட்டும் ரூ.22 கோடி கிடைத்துள்ளது. இதுவும் கடந்த ஆண்டை விட அதிகம். 41 நாட்கள் நடைபெற்ற மண்டல கால பூஜையின் போது 32 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். கடந்த ஆண்டு 28 லட்சம் பேர் மட்டுமே சாமி தரிசனம் செய்த நிலையில் இந்த ஆண்டு கூடுதலாக 4 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.


சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன், இந்த ஆண்டுக்கான வருவாய் இத்தனை கோடியா..?

தற்போது ஐயப்பன் கோயில் சீசனின் இரண்டாம் பாதி டிசம்பர் 30ம் தேதி துவங்கி உள்ளது. மிக முக்கியமான நிகழ்வான மகரவிளக்கு தரிசனம், வட இந்தியாவில் மகர சங்கராந்தி கொண்டாடப்படும் நாளான ஜனவரி 14ம் தேதி நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து ஜனவரி 20 ம் தேதியுடன் ஐயப்ப சீசன் நிறைவடையும். ஜனவரி 19ம் தேதி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். ஜனவரி 20ம் தேதி அதிகாலையில் நடைபெறும் பூஜையில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. பூஜைகளுக்கு பிறகு ஜனவரி 20ம் தேதி காலை 06.30 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் சபரிமலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் கூட்டத்தை கட்டுப்படுத்த தினசரி 70,000 பேருக்கு மட்டுமே அனுமதி என்ற கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டுள்ளது. இவர்களில் ஆன்லைன் புக்கிங் மூலம் வரும் 60,000 பேருக்கும், ஸ்பாட் புக்கிங் மூலம் வரும் 10,000 பேருக்கும் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. அதே போல் கோவில் நடை திறப்பு நேரமும் காலை 3மணி முதல் பகல் 1 மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 11 மணி வரை என அனுமதிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
1504
Active
26406
Recovered
146
Deaths
Last Updated: Wed 2 July, 2025 at 11:05 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

EPS Vs Stalin: நான் உண்மையான விவசாயியா.? நீங்க உண்மையான விவசாயியா.? ஸ்டாலினுக்கு இபிஎஸ் சரமாரி கேள்வி
நான் உண்மையான விவசாயியா.? நீங்க உண்மையான விவசாயியா.? ஸ்டாலினுக்கு இபிஎஸ் சரமாரி கேள்வி
Netanyahu Spoke to Modi: போருக்கு நடுவே இந்திய பிரதமருடன் பேசிய நெதன்யாகு; மோடி வலியுறுத்தியது என்ன தெரியுமா.?
போருக்கு நடுவே இந்திய பிரதமருடன் பேசிய நெதன்யாகு; மோடி வலியுறுத்தியது என்ன தெரியுமா.?
Trump Warns Iran: மாறி மாறி தாக்கிக்கொண்ட இஸ்ரேல்-ஈரான்; ட்ரம்ப் கொடுத்த வார்னிங் - மத்திய கிழக்கில் பதற்றம்
மாறி மாறி தாக்கிக்கொண்ட இஸ்ரேல்-ஈரான்; ட்ரம்ப் கொடுத்த வார்னிங் - மத்திய கிழக்கில் பதற்றம்
Air India Black Box: சீக்கிரமே உண்மை தெரிஞ்சுடும் - விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்பு
சீக்கிரமே உண்மை தெரிஞ்சுடும் - விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”நமக்கு எதுக்கு அதிக சீட்” வார்னிங் கொடுத்த அமித்ஷா! EPS-ஐ வைத்து மோடியின் ப்ளான்பூட்டியிருந்த வீட்டில் தீ விபத்து சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு பகீர் கிளப்பும் காட்சி Coimbatore Cylinder Blastசாப்பிட்டபடி பஸ் ஒட்டிய DRIVER பீதியில் உறைந்த பயணிகள்! ஆம்னி நிறுவனம் அதிரடி! | Careless Driving

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Vs Stalin: நான் உண்மையான விவசாயியா.? நீங்க உண்மையான விவசாயியா.? ஸ்டாலினுக்கு இபிஎஸ் சரமாரி கேள்வி
நான் உண்மையான விவசாயியா.? நீங்க உண்மையான விவசாயியா.? ஸ்டாலினுக்கு இபிஎஸ் சரமாரி கேள்வி
Netanyahu Spoke to Modi: போருக்கு நடுவே இந்திய பிரதமருடன் பேசிய நெதன்யாகு; மோடி வலியுறுத்தியது என்ன தெரியுமா.?
போருக்கு நடுவே இந்திய பிரதமருடன் பேசிய நெதன்யாகு; மோடி வலியுறுத்தியது என்ன தெரியுமா.?
Trump Warns Iran: மாறி மாறி தாக்கிக்கொண்ட இஸ்ரேல்-ஈரான்; ட்ரம்ப் கொடுத்த வார்னிங் - மத்திய கிழக்கில் பதற்றம்
மாறி மாறி தாக்கிக்கொண்ட இஸ்ரேல்-ஈரான்; ட்ரம்ப் கொடுத்த வார்னிங் - மத்திய கிழக்கில் பதற்றம்
Air India Black Box: சீக்கிரமே உண்மை தெரிஞ்சுடும் - விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்பு
சீக்கிரமே உண்மை தெரிஞ்சுடும் - விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்பு
Annamalai's Plan: கூட்டணிக்குள் குண்டு வைத்த அண்ணாமலை.!! அதிமுக-வை சீண்டும் வகையில் பேச்சு - உடைக்க திட்டமா.?
கூட்டணிக்குள் குண்டு வைத்த அண்ணாமலை.!! அதிமுக-வை சீண்டும் வகையில் பேச்சு - உடைக்க திட்டமா.?
வெளியானது 10ஆம் வகுப்பு விடைத்தாள் நகல்; எங்கே, எப்படி பெறலாம்?- வழிமுறைகள் இதோ!
வெளியானது 10ஆம் வகுப்பு விடைத்தாள் நகல்; எங்கே, எப்படி பெறலாம்?- வழிமுறைகள் இதோ!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. இதோ கடைசி வாய்ப்பு- டிஎன்பிஎஸ்சி அழைப்பு
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. இதோ கடைசி வாய்ப்பு- டிஎன்பிஎஸ்சி அழைப்பு
NEET Cut Off Marks 2025: நாளை வெளியாகும் நீட் தேர்வு முடிவுகள்; யார் யாருக்கு எவ்வளவு கட் ஆஃப் மதிப்பெண் தேவை?
NEET Cut Off Marks 2025: நாளை வெளியாகும் நீட் தேர்வு முடிவுகள்; யார் யாருக்கு எவ்வளவு கட் ஆஃப் மதிப்பெண் தேவை?
Embed widget