மேலும் அறிய

Navratri 2024: பிறந்தது நவராத்திரி! எதை உணர்த்துகிறது நவராத்திரி? ஏன் கொண்டாடப்படுகிறது?

Navratri 2024: நவராத்திரி இன்று பிறந்துள்ள நிலையில், நவராத்திரி ஏன் கொண்டாடப்படுகிறது என்பதை கீழே விரிவாக காணலாம்.

இந்தியாவில் இந்துக்களால் கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாக நவராத்திரி உள்ளது. நவராத்திரி பண்டிகையாக வட இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கோலாகலமாக கொண்டாடப்பட்டாலும் தமிழ்நாட்டில் நவராத்திரியின் கடைசி நாள் ஆயுத பூஜையாகவும், அதற்கு அடுத்த நாள் விஜயதசமியாகவும் தமிழ்நாட்டில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

பிறந்தது நவராத்திரி:

நடப்பாண்டிற்கான நவராத்திரி பண்டிகை இன்று தொடங்குகிறது. இதையடுத்து, காலை முதல் பல்வேறு கோயில்களில் சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் கொண்டாடப்படுகிறது. 9 நாட்கள் கொண்டாடப்படும் இந்த நவராத்திரி பண்டிகை பெண் சக்தியைப் போற்றும் விதமாகவே கொண்டாடப்படுகிறது. பெண் சக்தியை போற்றும் நவராத்திரி எப்படி உருவானது என்பதை கீழே விரிவாக காணலாம்.

ஏன் கொண்டாடப்படுகிறது?

படைக்கும் கடவுளாக போற்றப்படும் பிரம்மாவை நோக்கி மகிஷாசுரன் தவம் செய்தான். அவனது தவத்தை கண்டு வியந்த பிரம்மா அவனுக்கு வரம் கேட்டபோது அவன் சாகா வரம் கேட்டான். அப்போது, சாகா வரத்தை ஒரு நிபந்தனையுடன் பிரம்மன் அவனுக்கு அருளினார். உன்னை ஒரு பெண் மட்டுமே வீழ்த்த முடியும் என்று வரம் அளித்தார்.

பிரம்மனிடம் வரம் பெற்ற மகிஷாசுரன் எந்த பெண்ணால் தன்னை வீழ்த்த முடியும் என்ற ஆணவத்தில் தன் படைகளை வைத்து மக்களை கொடுமைப்படுத்தினான். மக்களை கொடுமைப்படுத்தி, அடிமைப்படுத்தி அவர்களை தொடர்ந்து துன்புறுத்தி வந்தான்.

துர்கா தேவி:

அவனது கொடுமைகளில் இருந்து மக்களை காக்க மும்மூர்த்திகளான சிவன், விஷ்ணு மற்றும் பிரம்மா முடிவு செய்தனர். பின்னர், பெரும் சக்திகளின் சொரூபமாக துர்கா தேவியை உருவாக்கினர். சகல சக்திகளின் சொரூபமாக மகா காளியாக அவதாரம் எடுத்த துர்காதேவியிடம் மகிஷாசூரன் போர் செய்தான்.

மகா வலிமை கொண்ட மகிஷாசூரன் ஒவ்வொரு ரூபத்தில் துர்கா தேவியிடம் போர் செய்தான். அவனிடம் முழு சக்தியையும் கொண்டு துர்காதேவியும் போர் புரிந்தார். 9 நாட்கள் தொடர்ந்து நடந்த இந்த யுத்தத்தில் துர்கா தேவி தனது பேராற்றலை கொண்டு போர் புரிந்தார். போரின் 10வது நாளில் மகிஷாசூரன் எருமை ரூபம் கொண்டு போர் புரிந்தான். எருமை ரூபத்தில் வந்தபோது மகிஷாசூரனை துர்காதேவி வீழ்த்தி அதர்மத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

பெண் சக்தி:

அநீதிகளையும், அதர்மத்தையும் எதிர்த்து பெண் சக்தி போராடியதையே நவராத்திரியாக கொண்டாடப்படுவதாக புராணங்கள் கூறுகிறது. இந்த நவராத்திரியின் புராணக் கதைகள் உணர்த்தும் உண்மை பெண்கள் தங்கள் சக்தியை உணர்ந்து போராடி வெல்ல வேண்டும் என்பதே ஆகும். இதன் காரணமாகவே, அம்பிகை வெற்றி பெற்ற 10வது நாளை விஜயதசமியாக கொண்டாடுகிறோம்.

இன்று நவராத்திரி பிறந்துள்ள நிலையில் வரும் 11ம் தேதி ஆயுத பூஜையும், 12ம் தேதி விஜயதசமியும் கொண்டாடப்படுகிறது.  

தலைப்பு செய்திகள்

ஆடி மாத பிறப்பு 2026 எப்போது? அம்மனின் அருள் பெற இந்த மாதத்தில் என்ன செய்ய வேண்டும்? முழு விவரம்!
ஆடி மாத பிறப்பு 2026 எப்போது? அம்மனின் அருள் பெற இந்த மாதத்தில் என்ன செய்ய வேண்டும்? முழு விவரம்!
அதிசய அலங்காரத்தில் வல்லக்கோட்டை முருகன்: குவியும் 10,000+ பக்தர்கள்! பின்னணி என்ன?
அதிசய அலங்காரத்தில் வல்லக்கோட்டை முருகன்: குவியும் 10,000+ பக்தர்கள்! பின்னணி என்ன?
அமாவாசை அன்று முன்னோர்களுக்கு படையல் போட முடியாத நிலையா? தீமைகள் ஏற்படுமா? முழுமையான ஆன்மீக விளக்கம்
அமாவாசை அன்று முன்னோர்களுக்கு படையல் போட முடியாத நிலையா? தீமைகள் ஏற்படுமா? முழுமையான ஆன்மீக விளக்கம்
பாவங்களை போக்கி தோஷங்களை தீர்க்கும் சிவஸ்தலம் எங்கு இருக்கிறது தெரியுங்களா?
பாவங்களை போக்கி தோஷங்களை தீர்க்கும் சிவஸ்தலம் எங்கு இருக்கிறது தெரியுங்களா?

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதிர்ச்சி! நாடு முழுவதும் 1 லட்சம் ஓராசிரியர் பள்ளிகள்; கல்வித்தரம்? இடைநிற்றல்? UDISE அறிக்கை
அதிர்ச்சி! நாடு முழுவதும் 1 லட்சம் ஓராசிரியர் பள்ளிகள்; கல்வித்தரம்? இடைநிற்றல்? UDISE அறிக்கை
TN Fact Check: தமிழ்நாடு அரசு இலவச பயிற்சிக்கு 8 ஆயிரம் கட்டணம் வசூல்? நடந்தது என்ன?
TN Fact Check: தமிழ்நாடு அரசு இலவச பயிற்சிக்கு 8 ஆயிரம் கட்டணம் வசூல்? நடந்தது என்ன?
துணைவேந்தர் தேடல்குழுவில் 5 உறுப்பினர்கள்? அரசின் அதிகாரத்தை அடகு வைப்பதா? அன்புமணி கேள்வி
துணைவேந்தர் தேடல்குழுவில் 5 உறுப்பினர்கள்? அரசின் அதிகாரத்தை அடகு வைப்பதா? அன்புமணி கேள்வி
வேடிக்கை பார்த்த திமுக.. பறிபோன மருத்துவக்கல்லூரி இடங்கள்.. நீதிமன்றம் செல்லும் தவெக அரசு!
வேடிக்கை பார்த்த திமுக.. பறிபோன மருத்துவக்கல்லூரி இடங்கள்.. நீதிமன்றம் செல்லும் தவெக அரசு!
Upcoming Kia SUV: கியாவின் அடுத்த நான்கு எஸ்யுவிகள் என்ன? EV, ஹைப்ரிட், 7 சீட்டர் - விலை, அம்சங்கள் எப்படி?
கியாவின் அடுத்த நான்கு எஸ்யுவிகள் என்ன? EV, ஹைப்ரிட், 7 சீட்டர் - விலை, அம்சங்கள் எப்படி?
கொஞ்சம் கூட கூச்சம் இல்லையா?.. நயினார் நாகேந்திரனை சாடிய மாணிக்கம் தாகூர்.. என்ன நடந்தது?
கொஞ்சம் கூட கூச்சம் இல்லையா?.. நயினார் நாகேந்திரனை சாடிய மாணிக்கம் தாகூர்.. என்ன நடந்தது?
ரூ.20 கோடி தங்க மோசடி ; சென்னை பெண் இன்ஸ்பெக்டர் ஷீலா மேரி கைது !! பின்னணி என்ன ?
ரூ.20 கோடி தங்க மோசடி ; சென்னை பெண் இன்ஸ்பெக்டர் ஷீலா மேரி கைது !! பின்னணி என்ன ?
மருத்துவக் கல்விக்கு ஆபத்து! 700 எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோகும் அபாயம்- புது கல்லூரிகளை அமைக்க கோரிக்கை!
மருத்துவக் கல்விக்கு ஆபத்து! 700 எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோகும் அபாயம்- புது கல்லூரிகளை அமைக்க கோரிக்கை!
Embed widget