மேலும் அறிய

Navratri 2024: பிறந்தது நவராத்திரி! எதை உணர்த்துகிறது நவராத்திரி? ஏன் கொண்டாடப்படுகிறது?

Navratri 2024: நவராத்திரி இன்று பிறந்துள்ள நிலையில், நவராத்திரி ஏன் கொண்டாடப்படுகிறது என்பதை கீழே விரிவாக காணலாம்.

இந்தியாவில் இந்துக்களால் கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாக நவராத்திரி உள்ளது. நவராத்திரி பண்டிகையாக வட இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கோலாகலமாக கொண்டாடப்பட்டாலும் தமிழ்நாட்டில் நவராத்திரியின் கடைசி நாள் ஆயுத பூஜையாகவும், அதற்கு அடுத்த நாள் விஜயதசமியாகவும் தமிழ்நாட்டில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

பிறந்தது நவராத்திரி:

நடப்பாண்டிற்கான நவராத்திரி பண்டிகை இன்று தொடங்குகிறது. இதையடுத்து, காலை முதல் பல்வேறு கோயில்களில் சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் கொண்டாடப்படுகிறது. 9 நாட்கள் கொண்டாடப்படும் இந்த நவராத்திரி பண்டிகை பெண் சக்தியைப் போற்றும் விதமாகவே கொண்டாடப்படுகிறது. பெண் சக்தியை போற்றும் நவராத்திரி எப்படி உருவானது என்பதை கீழே விரிவாக காணலாம்.

ஏன் கொண்டாடப்படுகிறது?

படைக்கும் கடவுளாக போற்றப்படும் பிரம்மாவை நோக்கி மகிஷாசுரன் தவம் செய்தான். அவனது தவத்தை கண்டு வியந்த பிரம்மா அவனுக்கு வரம் கேட்டபோது அவன் சாகா வரம் கேட்டான். அப்போது, சாகா வரத்தை ஒரு நிபந்தனையுடன் பிரம்மன் அவனுக்கு அருளினார். உன்னை ஒரு பெண் மட்டுமே வீழ்த்த முடியும் என்று வரம் அளித்தார்.

பிரம்மனிடம் வரம் பெற்ற மகிஷாசுரன் எந்த பெண்ணால் தன்னை வீழ்த்த முடியும் என்ற ஆணவத்தில் தன் படைகளை வைத்து மக்களை கொடுமைப்படுத்தினான். மக்களை கொடுமைப்படுத்தி, அடிமைப்படுத்தி அவர்களை தொடர்ந்து துன்புறுத்தி வந்தான்.

துர்கா தேவி:

அவனது கொடுமைகளில் இருந்து மக்களை காக்க மும்மூர்த்திகளான சிவன், விஷ்ணு மற்றும் பிரம்மா முடிவு செய்தனர். பின்னர், பெரும் சக்திகளின் சொரூபமாக துர்கா தேவியை உருவாக்கினர். சகல சக்திகளின் சொரூபமாக மகா காளியாக அவதாரம் எடுத்த துர்காதேவியிடம் மகிஷாசூரன் போர் செய்தான்.

மகா வலிமை கொண்ட மகிஷாசூரன் ஒவ்வொரு ரூபத்தில் துர்கா தேவியிடம் போர் செய்தான். அவனிடம் முழு சக்தியையும் கொண்டு துர்காதேவியும் போர் புரிந்தார். 9 நாட்கள் தொடர்ந்து நடந்த இந்த யுத்தத்தில் துர்கா தேவி தனது பேராற்றலை கொண்டு போர் புரிந்தார். போரின் 10வது நாளில் மகிஷாசூரன் எருமை ரூபம் கொண்டு போர் புரிந்தான். எருமை ரூபத்தில் வந்தபோது மகிஷாசூரனை துர்காதேவி வீழ்த்தி அதர்மத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

பெண் சக்தி:

அநீதிகளையும், அதர்மத்தையும் எதிர்த்து பெண் சக்தி போராடியதையே நவராத்திரியாக கொண்டாடப்படுவதாக புராணங்கள் கூறுகிறது. இந்த நவராத்திரியின் புராணக் கதைகள் உணர்த்தும் உண்மை பெண்கள் தங்கள் சக்தியை உணர்ந்து போராடி வெல்ல வேண்டும் என்பதே ஆகும். இதன் காரணமாகவே, அம்பிகை வெற்றி பெற்ற 10வது நாளை விஜயதசமியாக கொண்டாடுகிறோம்.

இன்று நவராத்திரி பிறந்துள்ள நிலையில் வரும் 11ம் தேதி ஆயுத பூஜையும், 12ம் தேதி விஜயதசமியும் கொண்டாடப்படுகிறது.  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
Tidal Park : கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
ABP Premium

வீடியோ

Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
Tidal Park : கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
DMK alliance seat allocation : கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
MTC-யின் புதிய 'கோல்ட் பிரீமியம்' பேருந்து! சொகுசு பயணம், குறைந்த கட்டணம்! முன்பதிவு செய்வது எப்படி?
MTC-யின் புதிய 'கோல்ட் பிரீமியம்' பேருந்து! சொகுசு பயணம், குறைந்த கட்டணம்! முன்பதிவு செய்வது எப்படி?
Embed widget