மேலும் அறிய

சீர்காழி சட்டைநாதர் கோயிலுக்கு மே 24 -ல் கும்பாபிஷேகம் - தருமபுரம் ஆதீனம்

சீர்காழி சட்டைநாதர் கோயிலுக்கு மே 24 -ல் கும்பாபிஷேகம் நடைபெறும் என தருமபுரம் ஆதீனம் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் திருநிலை நாயகி அம்பாள் சமேத பிரம்மபுரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.  இக்கோயிலில் சிவபெருமான் சுயம்புவாக எழுந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறது. தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 14 வது தலமான இக்கோயில் சோழர் கட்டிடக்கலை அமைப்பைக் கொண்டது. இங்கு பிரம்ம தீர்த்தம் உள்ளிட்ட 22 தீர்த்தங்கள் அமைந்துள்ளன. இக்கோயிலில் சுவாமி பிரம்மபுரீஸ்வரர், தோனியப்பர், சட்டைநாதர் என மூன்று நிலைகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் வழங்கி வருகிறார். 


சீர்காழி சட்டைநாதர் கோயிலுக்கு மே 24 -ல் கும்பாபிஷேகம் - தருமபுரம் ஆதீனம்

சீர்காழியில் சிவபாதகிருதயர், புனிதவதி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்து கோயிலில் அம்பாளிடம் ஞானப்பால் அருந்தியதால் ஞானம் பெற்று தனது மூன்றாவது வயதில் தோடுடைய செவியன் என்ற தேவாரத்தின் முதல் பதிகத்தை அருளிய  திருஞானசம்பந்தருக்கு இக்கோயில் தனி சன்னதி அமையப் பெற்றுள்ளது. பக்தர்கள்  மனதில் வேண்டுபவற்றை வேண்டிய மாத்திரத்திலேயே அருளும் சட்டை நாதர் கோயிலின் திருப்பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. 


சீர்காழி சட்டைநாதர் கோயிலுக்கு மே 24 -ல் கும்பாபிஷேகம் - தருமபுரம் ஆதீனம்

இந்நிலையில், இன்று கோயிலுக்கு  வருகை புரிந்த தருமபுரம் ஆதீனம் 27 வது குருமா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் சுவாமி தரிசனம் செய்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: சீர்காழியில் அமைந்துள்ள சட்டை நாதர் தேவஸ்தானம் பிரம்மபுரீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் வரும் மே மாதம்  24 -ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. 


சீர்காழி சட்டைநாதர் கோயிலுக்கு மே 24 -ல் கும்பாபிஷேகம் - தருமபுரம் ஆதீனம்

அதனை முன்னிட்டு மே மாதம் 20 -ம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டு 22 -ஆம் தேதி பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகமும் 24 -ஆம் தேதி காலை 9 மணி முதல் 10:30 மணிக்குள் பிரம்மபுரீஸ்வரர் கோயில்  மகா கும்பாபிஷேகமும்  நடைபெற உள்ளது.  கும்பாபிஷேகத்தின் போது 18 ஆயிரம் பக்கம் 16 தொகுப்புகளாக திருமுறையும், 14 சாஸ்திரங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளியிடப்பட உள்ளது. தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் தெரிவித்தார். இந்நிகழ்வில் தருமபுரம் ஆதீன கட்டளை சிவகுருநாத தம்பிரான் சுவாமிகள், மதிமுக மாவட்ட செயலாளர் மார்கோனி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். முன்னதாக தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ததுடன் கோயில் நந்தவனத்தில் நட்சத்திர நந்தவனத்திற்கான செடிகளை நட்டு வைத்தார்.


பஞ்ச தட்சிணாமூர்த்தி ஸ்தலங்களில் ஒன்றானதும், புகழ்பெற்ற குரு பரிகார ஆலயம் ஆன மயிலாடுதுறை வதான்யேஸ்வரர் ஆலயத்தில் தனூர்மாத வழிபாட்டில் தருமபுர ஆதீன மடாதிபதி உள்ளிட்ட திரளான பக்தர்கள் தரிசனம்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் புகழ்பெற்ற பழமையான வதான்யேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. மயிலாடுதுறையை சுற்றி நான்கு திசைகள் மற்றும் மயிலாடுதுறையை மையமாக வைத்து ஐந்து சிவாலயங்கள் அமைந்துள்ளன. அவற்றில் காவிரி வடகரையில் அமைந்துள்ள வதான்யேஸ்வரர் ஆலயத்தில் வழிகாட்டும் வள்ளலான மேதா தட்சிணாமூர்த்தி ஆலயம் புகழ்வாய்ந்தது. மேதா தக்ஷிணாமூர்த்தி பஞ்ச குரு ஸ்தலங்களில் ஒன்றாக விளங்குகிறார். பல்வேறு சிறப்புகளுடைய இவ்வாலயத்தில் தனூர்மாத சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.


சீர்காழி சட்டைநாதர் கோயிலுக்கு மே 24 -ல் கும்பாபிஷேகம் - தருமபுரம் ஆதீனம்

இங்கு மார்கழி மாதத்தை முன்னிட்டு மேதா தெட்சிணாமூர்த்தி  தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தனூர் மாத வழிபாடு மேற்கொண்டு வரும் தருமபுரம்  ஆதீனம் 27 -வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கலந்து கொண்டு கோபூஜை, அசுவ பூஜை, ஒட்டக பூஜை செய்து சிறப்பு தரிசனம் செய்தார். கோயில் நிர்வாகத்தின் சார்பில் ஆதீனகர்த்தருக்கு பூரணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Gold Rate Jan.5th: பாத்தியா உன் வேலைய காட்டிட்டியே.! இன்று ஒரே நாளில் ரூ.1,280 உயர்ந்த தங்கம்; வெள்ளியும் அதிரடி உயர்வு
பாத்தியா உன் வேலைய காட்டிட்டியே.! இன்று ஒரே நாளில் ரூ.1,280 உயர்ந்த தங்கம்; வெள்ளியும் அதிரடி உயர்வு
ஓய்வூதிய திட்டம்: ஜாக்டோ ஜியோவின் அடுத்த அதிரடி! 2026-ல் புதிய அரசாணை, 10% பங்களிப்பு ரத்து!
ஓய்வூதிய திட்டம்: ஜாக்டோ ஜியோவின் அடுத்த அதிரடி! 2026-ல் புதிய அரசாணை, 10% பங்களிப்பு ரத்து!
பள்ளி பயிற்சி ஆசிரியர் அசத்தல்! ஆங்கிலம் கற்க QR கோடுடன் கூடிய புதிய கையேடு- மாணவர்கள் உற்சாகம்!
பள்ளி பயிற்சி ஆசிரியர் அசத்தல்! ஆங்கிலம் கற்க QR கோடுடன் கூடிய புதிய கையேடு- மாணவர்கள் உற்சாகம்!
இந்திய மாணவர்கள் உயர்கல்வி பயில விரும்பும் நாடுகள்: நிதி ஆயோக் வெளியிட்ட முக்கியத் தகவல்கள்!
இந்திய மாணவர்கள் உயர்கல்வி பயில விரும்பும் நாடுகள்: நிதி ஆயோக் வெளியிட்ட முக்கியத் தகவல்கள்!
ABP Premium

வீடியோ

DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு
Viluppuram News | தலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold Rate Jan.5th: பாத்தியா உன் வேலைய காட்டிட்டியே.! இன்று ஒரே நாளில் ரூ.1,280 உயர்ந்த தங்கம்; வெள்ளியும் அதிரடி உயர்வு
பாத்தியா உன் வேலைய காட்டிட்டியே.! இன்று ஒரே நாளில் ரூ.1,280 உயர்ந்த தங்கம்; வெள்ளியும் அதிரடி உயர்வு
ஓய்வூதிய திட்டம்: ஜாக்டோ ஜியோவின் அடுத்த அதிரடி! 2026-ல் புதிய அரசாணை, 10% பங்களிப்பு ரத்து!
ஓய்வூதிய திட்டம்: ஜாக்டோ ஜியோவின் அடுத்த அதிரடி! 2026-ல் புதிய அரசாணை, 10% பங்களிப்பு ரத்து!
பள்ளி பயிற்சி ஆசிரியர் அசத்தல்! ஆங்கிலம் கற்க QR கோடுடன் கூடிய புதிய கையேடு- மாணவர்கள் உற்சாகம்!
பள்ளி பயிற்சி ஆசிரியர் அசத்தல்! ஆங்கிலம் கற்க QR கோடுடன் கூடிய புதிய கையேடு- மாணவர்கள் உற்சாகம்!
இந்திய மாணவர்கள் உயர்கல்வி பயில விரும்பும் நாடுகள்: நிதி ஆயோக் வெளியிட்ட முக்கியத் தகவல்கள்!
இந்திய மாணவர்கள் உயர்கல்வி பயில விரும்பும் நாடுகள்: நிதி ஆயோக் வெளியிட்ட முக்கியத் தகவல்கள்!
திமுகவா.? அதிமுகவா.? யாருடன் கூட்டணி.? ஓட்டெடுப்பு நடத்திய பிரேமலதா- மா.செ கொடுத்த திடீர் ட்விஸ்ட்
திமுகவா.? அதிமுகவா.? யாருடன் கூட்டணி.? ஓட்டெடுப்பு நடத்திய பிரேமலதா- மா.செயலாளர்கள் கொடுத்த திடீர் ட்விஸ்ட்
North Korea tests missile: டிரம்ப்புக்கு பயத்தை ஏற்படுத்திய கிம் ஜாங் உன்.! கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ரெடி- வட கொரியா அதிரடி
டிரம்ப்புக்கு பயத்தை ஏற்படுத்திய கிம் ஜாங் உன்.! கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ரெடி- வட கொரியா அதிரடி
Toyota Innova Hycross: அடேயப்பா.! டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரோட மைலேஜ் இவ்வளவா.? அம்சங்களுக்கும் குறைச்சல் இல்ல.!
அடேயப்பா.! டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரோட மைலேஜ் இவ்வளவா.? அம்சங்களுக்கும் குறைச்சல் இல்ல.!
E-Scooter subsidy : புதிய E-Scooter வாங்க ரூ.20,000 மானியம்.! அள்ளிக்கொடுக்கும் அரசு - யாருக்கெல்லாம் கிடைக்கும்.?
புதிய E-Scooter வாங்க ரூ.20,000.! பணத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு - யாருக்கெல்லாம் கிடைக்கும்.?
Embed widget