மேலும் அறிய

காசி, ராமேஸ்வரத்திற்கு அடுத்தபடியாக தர்ப்பணம் செய்ய ஏன் திருப்புவனத்தில் கூட்டம் கூடுகிறது தெரியுமா?

திருப்புவனம் அருள்மிகு ஸ்ரீ புஷ்பவனேஸ்வரர் திருக்கோயிலில் புரட்டாசி மகாளாய அமாவாசை முன்னிட்டு அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு.

ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசை நாட்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாளாக அமைகிறது. அமாவாசை நாட்களிலே மகாளாய அமாவாசை மிக மிகச் சிறப்பு வாய்ந்த நாள் ஆகும். இந்த மகாளாய அமாவாசை மகாளய பட்ச காலத்தில் செய்யப்படும் நாள் ஆகும். இந்நிலையில் திருப்புவனம் அருள்மிகு ஸ்ரீ புஷ்பவனேஸ்வரர் திருக்கோயிலில் புரட்டாசி மகாளாய அமாவாசை முன்னிட்டு அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்யப்பட்டது.
 
 

மகாளாய அமாவாசை

 
மகாளய பட்ச காலம்: மகாளயம் என்றால் ஒன்று கூடுதல் என்று அர்த்தம். பட்சம் என்றால் 15 நாட்கள் கொண்ட கால அளவு ஆகும். நம் முன்னோர்களை வழிபட்டு, அவர்களின் ஆசிர்வாதத்தை பெறுவதற்கான காலமே மகாளயபட்சம் ஆகும். நம் முன்னோர்கள் அனைவரின் ஆசிர்வாதத்தையும் பெறுவதற்கான 15 நாட்கள் மகாளய பட்சம் என்று அழைக்கப்படுகிறது. இந்த காலத்தில் மறைந்த நமது முன்னோர்கள் அனைவரும் பூமிக்கு வந்து 15 நாட்கள் தங்கியிருப்பதாகவும். இந்த காலகட்டத்தில் நாம் அவர்களுக்கு செய்யும் வழிபாடுகள், பிறருக்கு செய்யும் தானங்களை அவர்கள் ஏற்றுக்கொள்வதாக நம்பப்படுகிறது. இதன் மூலம் முன்னோர்கள் ஆசிர்வாதத்துடன் நமது வாழ்க்கை முன்னேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
 

பித்ரு தோஷம், பித்ரு சாபம் நீங்கும்

 
ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாத பவுர்ணமிக்கு பிறகு வரும் பிரதமை தொடங்கி, அமாவாசை வரையிலான 15 நாட்கள் மகாளய பட்ச காலம் ஆகும். நடப்பாண்டிற்கான மகாளய பட்ச காலம் செப்டம்பர் 18ம் தேதி தொடங்கிவிட்டது. மகாளய பட்சம் இன்று அக்டோபர் 2ம் தேதி வரை வருகிறது.  இந்த காலகட்டத்தில் முன்னோர்களை  வணங்குவதால் பித்ரு தோஷம், பித்ரு சாபம் ஆகியவை நீங்குவதாக பக்தர்களால் நம்பப்படுகிறது.
 

புஷ்பவனேஸ்வரர் திருக்கோயிலில் புரட்டாசி மகாளாய அமாவாசை

 
சிவகங்கை மாவட்டம்,  திருப்புவனம் நகரில் அமைந்துள்ள புராண சிறப்பு மிக்க அருள்மிகு ஸ்ரீ சௌந்தர நாயகி அம்பாள் சமேத ஸ்ரீ புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில். இங்கு புரட்டாசி மகாளாய அமாவாசை திருநாளை முன்னிட்டு அதி காலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர்.
 

பக்தர்கள் வைகை ஆற்றில் வரிசையாக அமர்ந்து வழிபாடு

 
காசி, ராமேஸ்வரத்திற்கு அடுத்தபடியாக தர்ப்பணம் கொடுக்கும் கோயில் ஸ்தலமாக திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. கோயிலில் சாதாரண நாட்களில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திதி தர்ப்பணம் கொடுத்து சுவாமி அம்மனை வழிபட்டு செல்கின்றனர். புரட்டாசி அமாவாசையை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வைகை ஆற்றில் வரிசையாக அமர்ந்து தங்கள் முன்னோர்களை நினைத்து திதி தர்ப்பணம் செய்து சூரியபகவானை வழிபாடு செய்தனர். தொடர்ந்து விநாயகர் பெருமானையும்  புஷ்பனேஸ்வர ஸ்வாமி சௌந்தர நாயகி அம்மனையும் விளக்கேற்றி வழிபாடு செய்தனர் .
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

துணை முதல்வர் தனிச்செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம்; 12 ஐஏஎஸ் அதிகாரிகள் இட மாற்றம்- முழு லிஸ்ட்!
துணை முதல்வர் தனிச்செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம்; 12 ஐஏஎஸ் அதிகாரிகள் இட மாற்றம்- முழு லிஸ்ட்!
Breaking News LIVE OCT 2 : சென்னை மெரினாவில் ஏர் ஷோ ஒத்திகை!  கண்டு ரசித்த பொதுமக்கள்..
Breaking News LIVE OCT 2 : சென்னை மெரினாவில் ஏர் ஷோ ஒத்திகை! கண்டு ரசித்த பொதுமக்கள்..
IRAN Indian Guidelines: ”ஈரான் பக்கமே இந்தியர்கள் போக வேண்டாம்” - வெளியுறவு அமைச்சகம் பயண எச்சரிக்கை
IRAN Indian Guidelines: ”ஈரான் பக்கமே இந்தியர்கள் போக வேண்டாம்” - வெளியுறவு அமைச்சகம் பயண எச்சரிக்கை
Babar Azam:கேப்டன் பதவியில் இருந்து விலகினார் பாபர் அசாம்! அடுத்த நடவடிக்கை என்ன?
Babar Azam:கேப்டன் பதவியில் இருந்து விலகினார் பாபர் அசாம்! அடுத்த நடவடிக்கை என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anbil Mahesh Hospitalized | கடும் வயிற்றுவலி..அட்மிட்டான அன்பில் மகேஷ்!ஓடி வந்த உதயநிதிAnbil Mahesh | Vanitha Robert Marriage|வனிதாவுக்கு 4வது கல்யாணம்? ராபர்ட் மாஸ்டர் மாப்பிள்ளையா வைரலாகும் INVITATIONRahul Gandhi Slams Modi | ”கல்யாணத்துக்கு இவ்ளோ செலவா? அம்பானி பணத்தின் பின்னணி” போட்டுடைத்த ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
துணை முதல்வர் தனிச்செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம்; 12 ஐஏஎஸ் அதிகாரிகள் இட மாற்றம்- முழு லிஸ்ட்!
துணை முதல்வர் தனிச்செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம்; 12 ஐஏஎஸ் அதிகாரிகள் இட மாற்றம்- முழு லிஸ்ட்!
Breaking News LIVE OCT 2 : சென்னை மெரினாவில் ஏர் ஷோ ஒத்திகை!  கண்டு ரசித்த பொதுமக்கள்..
Breaking News LIVE OCT 2 : சென்னை மெரினாவில் ஏர் ஷோ ஒத்திகை! கண்டு ரசித்த பொதுமக்கள்..
IRAN Indian Guidelines: ”ஈரான் பக்கமே இந்தியர்கள் போக வேண்டாம்” - வெளியுறவு அமைச்சகம் பயண எச்சரிக்கை
IRAN Indian Guidelines: ”ஈரான் பக்கமே இந்தியர்கள் போக வேண்டாம்” - வெளியுறவு அமைச்சகம் பயண எச்சரிக்கை
Babar Azam:கேப்டன் பதவியில் இருந்து விலகினார் பாபர் அசாம்! அடுத்த நடவடிக்கை என்ன?
Babar Azam:கேப்டன் பதவியில் இருந்து விலகினார் பாபர் அசாம்! அடுத்த நடவடிக்கை என்ன?
கதர் ஆடைகள் உங்களுக்கு பிடிக்குமா? முதலமைச்சர் ஸ்டாலின் மக்களுக்கு விடுத்த கோரிக்கை...
கதர் ஆடைகள் உங்களுக்கு பிடிக்குமா? முதலமைச்சர் ஸ்டாலின் மக்களுக்கு விடுத்த கோரிக்கை...
Navratri 2024 9 Days: நவராத்திரி கொண்டாட்டம்! அம்மனுக்கு 9 நாளும் 9 பெயர், 9 நிறம் - முழு விவரம்
Navratri 2024 9 Days: நவராத்திரி கொண்டாட்டம்! அம்மனுக்கு 9 நாளும் 9 பெயர், 9 நிறம் - முழு விவரம்
மக்களே உஷார்! வடகிழக்கு பருவ மழை - வானிலை ஆய்வு மையம் கொடுத்த வார்னிங்
மக்களே உஷார்! வடகிழக்கு பருவ மழை - வானிலை ஆய்வு மையம் கொடுத்த வார்னிங்
Ford EV TN: கம்பேக் சும்மா அதிரணும்.. தமிழ்நாட்டில் மின்சார கார் உற்பத்தி - ஃபோர்ட் நிறுவனம் அதிரடி
Ford EV TN: கம்பேக் சும்மா அதிரணும்.. தமிழ்நாட்டில் மின்சார கார் உற்பத்தி - ஃபோர்ட் நிறுவனம் அதிரடி
Embed widget