மேலும் அறிய

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் லட்சதீப விழா: பக்தர்களின் பக்தி பரவசம்! சிவ-பார்வதி காதல் கதை தெரியுமா?

Laksha Deepotsavam: "காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில், லட்சதீப விழா வெகு விமர்சையாக நடைபெற்றது"

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் கோலாகலமாக நடந்த லட்சதீப விழா, ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் லட்சதீப விழா 

காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்றதும் பஞ்ச பூத ஸ்தலங்களில் ஒன்றான அருள்மிகு ஏகாம்பரநாதர் கோயிலில் லட்சதீப விழா விமரிசையாக நடைபெற்றது. ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் வரும் சோமவாரத்தை ஒட்டி காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயில்களில் லட்சதீப விழா நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இவ்வாண்டிற்கான லட்சதீப விழா இன்று விமரிசையாக நடைபெற்றது. இதனை ஒட்டி மூலவர் மற்றும் உற்சவர் ஏகாம்பரநாதர் மற்றும் ஏலவார்குழலி அம்மையாருக்கு சிறப்பு அபிஷேகமும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. அதே போல திருக்கோவில் உட்பிரகாரத்தினை சுற்றியுள்ள லிங்களுக்கு அபிஷேகங்களானது நடைபெற்றது. அதனைத் தொடர்ந்நு ஏகாம்பரநாதர் மற்றும் ஏலவார்குழலி அம்மையாருக்கு தூப, தீப ஆராதனைகளானது நடைபெற்றது.

பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம்

இந்த லட்ச தீபம் விழாவையொட்டி திரளான பக்தர்கள் திருக்கோவிலுக்கு வருகைதந்து கோவில் உள் மற்றும் வெளி பிரகாரங்களிலும், நந்தி மணிடபம் ஆகிய இடங்களில் பல்வேறு வடிவிலான கோலமிட்டு அதன் மீது விளக்குகளை ஏற்றியும், அதேபோல சிவ வடிவிலான கோலங்கள் வரைந்து அதன் மீது திருவிளக்குகளை வைத்து சிவ வடிவில் தீபங்களை ஒளிர செய்தும் குடும்பத்துடன் சாமி தரிசனம் மேற்கொண்டனர்.

தல வரலாறு கூறுவது என்ன ?

புராணப்படி இக்கோவில் உருவானதற்கு முக்கிய கதை ஒன்று கூறப்படுகிறது. ஒருமுறை பார்வதி, சிவபெருமானின் கண்ணை விளையாட்டாக மூடியதால் உலகமே இருண்டுள்ளது. இதனால் கோடிக்கணக்கான ஜீவராசிகள், பாதிப்படைந்தனர். இதனைத் தொடர்ந்து சிவபெருமான் நெற்றிக்கண்ணை திறந்து உலகத்திற்கு வெளிச்சம் தந்தார் என நம்பப்படுகிறது. 

பார்வதியின் விளையாட்டால், பார்வதி மீது சிவன் கோபம் கொண்டார். இதனைத் தொடர்ந்து பார்வதி பூலோகம் வந்து, சிவபெருமானின் கோபம் குறைய வேண்டி சிவபெருமானை நோக்கி, தவமிருந்தார். மணல் லிங்கம் செய்து, மாமரத்தின் அடியில் பல ஆண்டுகள் பார்வதி தான் தவமிருந்ததை கண்டு சிவபெருமான் வியந்தார். அவரது தவத்தை உலகம் அறியும் வகையில், சிவபெருமான் கம்பா நதியில்Ekambareswarar Temple வெள்ளத்தை உண்டாக்கினார். பார்வதி தனது மணல் லிங்கத்தை வெள்ளம் அடித்து, செல்லாமல் இருக்க கட்டி அணைத்துக் கொண்டார். 

சிவபெருமான் அந்த மாமரத்தின் அடியில் தோன்றி பார்வதி தேவிக்கு காட்சியளித்தார். பார்வதி வழிபட்ட மணல் லிங்கம் தான் பிரித்வி லிங்கம் என்று அழைக்கப்படுகிறது. அந்த மாமரம் தான் கோவிலின் தல விருச்சகமாக இருந்து வருகிறது. பார்வதி தேவி கட்டித் தழுவியதால் இங்கு உள்ள சிவபெருமானை "தழுவக் குழைந்தார்" என்றும் அழைப்பதுண்டு. இக்கோவில் சிவன் மற்றும் பார்வதி ஆகிய இருவருக்கிடையே இருந்த காதலை வெளிப்படுத்தும் கோவிலாகவும் பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL Auction 2026: யாருக்கு ஜாக்பாட்? 10 அணிகள், 77 இடங்கள், 350 வீரர்கள், ரூ.237.55 கோடி - இன்று ஐபிஎல் மினி ஏலம்
IPL Auction 2026: யாருக்கு ஜாக்பாட்? 10 அணிகள், 77 இடங்கள், 350 வீரர்கள், ரூ.237.55 கோடி - இன்று ஐபிஎல் மினி ஏலம்
Elon Musk: அடேங்கப்பா.. உலகின் முதல் மனிதர் - ரூ.54.46 லட்சம் கோடிகள் குவிப்பு - எலான் மஸ்க் செய்த மேஜிக் என்ன?
Elon Musk: அடேங்கப்பா.. உலகின் முதல் மனிதர் - ரூ.54.46 லட்சம் கோடிகள் குவிப்பு - எலான் மஸ்க் செய்த மேஜிக் என்ன?
சென்னை, மதுரைக்கு இனி ஏ.டி.ஆர் விமானங்கள் இல்லை! இண்டிகோ அதிரடி மாற்றம்: புதிய விமானங்கள், சீட் வசதிகள்!
சென்னை, மதுரைக்கு இனி ஏ.டி.ஆர் விமானங்கள் இல்லை! இண்டிகோ அதிரடி மாற்றம்: புதிய விமானங்கள், சீட் வசதிகள்!
நெல்லையில் அசாம் பெண் பாலியல் வன்கொடுமை.. சிறுவர்கள் செய்த கொடூர காரியம்.. அதுவும் கணவன் கண்முன்னே!
நெல்லையில் அசாம் பெண் பாலியல் வன்கொடுமை.. சிறுவர்கள் செய்த கொடூர காரியம்.. அதுவும் கணவன் கண்முன்னே!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

நயினார் கொடுத்த REPORT! அமித்ஷாவின் GAMESTARTS! பியூஸ் கோயல் வைத்து ஸ்கெட்ச்
DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL Auction 2026: யாருக்கு ஜாக்பாட்? 10 அணிகள், 77 இடங்கள், 350 வீரர்கள், ரூ.237.55 கோடி - இன்று ஐபிஎல் மினி ஏலம்
IPL Auction 2026: யாருக்கு ஜாக்பாட்? 10 அணிகள், 77 இடங்கள், 350 வீரர்கள், ரூ.237.55 கோடி - இன்று ஐபிஎல் மினி ஏலம்
Elon Musk: அடேங்கப்பா.. உலகின் முதல் மனிதர் - ரூ.54.46 லட்சம் கோடிகள் குவிப்பு - எலான் மஸ்க் செய்த மேஜிக் என்ன?
Elon Musk: அடேங்கப்பா.. உலகின் முதல் மனிதர் - ரூ.54.46 லட்சம் கோடிகள் குவிப்பு - எலான் மஸ்க் செய்த மேஜிக் என்ன?
சென்னை, மதுரைக்கு இனி ஏ.டி.ஆர் விமானங்கள் இல்லை! இண்டிகோ அதிரடி மாற்றம்: புதிய விமானங்கள், சீட் வசதிகள்!
சென்னை, மதுரைக்கு இனி ஏ.டி.ஆர் விமானங்கள் இல்லை! இண்டிகோ அதிரடி மாற்றம்: புதிய விமானங்கள், சீட் வசதிகள்!
நெல்லையில் அசாம் பெண் பாலியல் வன்கொடுமை.. சிறுவர்கள் செய்த கொடூர காரியம்.. அதுவும் கணவன் கண்முன்னே!
நெல்லையில் அசாம் பெண் பாலியல் வன்கொடுமை.. சிறுவர்கள் செய்த கொடூர காரியம்.. அதுவும் கணவன் கண்முன்னே!
MG Hector: அப்க்ரேடட் எம்ஜி ஹெக்டர்.. ரூ.2 லட்சம் விலை குறைப்பு, புதுசா என்ன இருக்கு? வசதிகள் கூடியிருக்கா?
MG Hector: அப்க்ரேடட் எம்ஜி ஹெக்டர்.. ரூ.2 லட்சம் விலை குறைப்பு, புதுசா என்ன இருக்கு? வசதிகள் கூடியிருக்கா?
TN School Leave: மாணவர்களே, ஜாலிதான்.! அரையாண்டு விடுமுறையை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை; எத்தனை நாள் தெரியுமா.?
மாணவர்களே, ஜாலிதான்.! அரையாண்டு விடுமுறையை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை; எத்தனை நாள் தெரியுமா.?
CM Stalin Condemnation: “100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் பாஜக அரசு!“: முதல்வர் கண்டனம்
“100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் பாஜக அரசு!“: முதல்வர் கண்டனம்
Gold Rate Dec.15th: அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
Embed widget