மேலும் அறிய

Sabarimala Temple: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு... இந்தாண்டு எத்தனை லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்?

Sabarimala Ayyappan Temple Closed: கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 10 லட்சம் பக்தர்கள் கூடுதலாக சாமி தரிசனம் செய்துள்ளனர்.

சபரிமலை ஐயப்பன் கோவில் 2024-2025ம் ஆண்டிற்கான மண்டல-மகர விளக்கு பூஜைகள் நிறைவடைந்ததை அடுத்து கோவில் நடை சாத்தப்பட்டது. மீண்டும் மாசி மாத பூஜைக்காக பிப்ரவரி 12ஆம் தேதியன்று மாலை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு, வழக்கமான பூஜைகள் நடத்தப்படும். தொடர்ந்து 5 நாட்கள் கோவில் திறந்திருக்கும் இந்த சமயத்தில் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவார்கள்.


Sabarimala Temple: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு... இந்தாண்டு எத்தனை லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்?
சபரிமலையில் இந்த ஆண்டு வழக்கத்தை விட மிக அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். ஆண்டிற்கான மண்டல-மகரவிளக்கு பூஜைகள் நிறைவடைந்ததை அடுத்து ஜனவரி 20ம் தேதியான இன்று காலை 06.30 மணி அளவில் கோவில் நடை அடைக்கப்பட்டது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டிற்கான மண்டல பூஜைக்காக நவம்பர் 15ம் தேதி மாலை கோவில் நடை திறக்கப்பட்டது. கார்த்திகை முதல் தேதியான நவம்பர் 16ம் தேதியன்று அதிகாலை முதல் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டனர். நவம்பர் 16ம் தேதி துவங்கி, டிசம்பர் 26ம் தேதி வரையிலான 41 நாட்கள் மண்டல பூஜை நடைபெற்றது. மண்டல பூஜை காலத்தின் போது மட்டும் 32 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. டிசம்பர் 26ம் தேதியன்று மண்டல பூஜை நிறைவடைந்ததை அடுத்து, அன்று இரவு கோவில் நடை சாத்தப்பட்டது. மீண்டும் மகரவிளக்கு உற்சவத்திற்காக டிசம்பர் 30ம் தேதியன்று மாலை கோவில் நடை திறக்கப்பட்டது.


Sabarimala Temple: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு... இந்தாண்டு எத்தனை லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்?

மகரவிளக்கு மகோற்சவத்தின் முக்கிய நிகழ்வான ஜனவரி 14ம் தேதி மகர சங்கராந்தி அன்று மாலை மகரஜோதி தரிசனம் நடைபெற்றது. இதில் 3 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதைத் தொடர்ந்து மகர மாத பூஜைகள், படி பூஜை ஆகியவை ஜனவரி 19ம் தேதி வரை நடத்தப்பட்டது. ஜனவரி 19ம் தேதி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் ஜனவரி 20ம் தேதியான இன்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, கிழக்கு மண்டபத்தில் கணபதி ஹோமம் நடத்தப்பட்டு, பூஜைகள் நடத்தப்பட்டது. காலை நடைபெற்ற பூஜையில் பந்தளம் ராஜ பிரதிநிதி திருக்கேத்தநாள் ராஜராஜ வர்மா மட்டும் கலந்து கொண்டார். அவரது தரிசனத்துடன் நடை அடைக்கப்பட்டது. சாமி ஐயப்பனுக்கு மகரஜோதி அன்று அணிவிக்கப்பட்ட திருவாபரணங்கள், திருவாபரண சங்கத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அய்யனை வணங்கி, அனுமதி பெற்று மீண்டும் பந்தள அரண்மனை நோக்கி திருவாரபண பெட்டி ஊர்வலம் புறப்பட்டு சென்றது. ஜனவரி 23ம் தேதி திருவாபரண பெட்டி ஊர்வலம் பந்தள அரண்மனையை சென்றடையும்.


Sabarimala Temple: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு... இந்தாண்டு எத்தனை லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்?

ராஜபிரதிநிதி சோபானம், சாமி ஐயப்பனை தரிசனம் செய்த பிறகு, மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி, ஐயப்பன் சிலைக்கு விபூதி அபிஷேகம் செய்து, ஐயப்பனின் திருமேனி முழுவதும் விபூதியால் மூடப்பட்டு, கழுத்தில் ருத்ராட்ச மாலை அணிவிக்கப்பட்டு, கையில் யோக குச்சி அணிவிக்கப்பட்டது. பிறகு ஹரிவராசனம் பாடி முடித்த பிறகு கோவில் நடை அடைக்கப்பட்டது.பதினெட்டாம் படியில் பின்னோக்கி இறங்கி வந்த அரச பிரதிநிதி, தேவசம் போர்டு பிரதிநிதிகள் மற்றும் மேல்சாந்தி முன்னிலையில் சபரிமலை நிர்வாக அதிகாரி பிஜூ வி நாத்திடம் கோவிலின் சாவியை ஒப்படைத்தார். 2025-2025 சபரிமலை மண்டல-மகரவிளக்கு சீசனின் போது இதுவரை இல்லாத அளவிற்கு பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.


Sabarimala Temple: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு... இந்தாண்டு எத்தனை லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்?

டிசம்பர் 30ம் தேதி துவங்கி, ஜனவரி 17 வரை நடைபெற்ற மகரவிளக்கு உற்சவத்தின் போது மட்டும் 19,00,789 பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர். இந்த ஆண்டு நவம்பர் 15 துவங்கி, ஜனவரி 17ம் தேதி வரையிலான மண்டல-மகரவிளக்கு காலத்தின் போது மட்டும் 51,92,550 பேர் சாமி தரிசனம் செய்துள்ளதாக தேவசம் போர்டு தகவல் தெரிவித்துள்ளது. இந்த சீசனில் மொத்தமாக 25 லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டுள்ளதாகவும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 10 லட்சம் பக்தர்கள் கூடுதலாக சாமி தரிசனம் செய்துள்ளதாகவும், பக்தர்கள் வருகை அதிகரித்திருப்பதன் காரணமாக கோவில் வருமானமும் அதிகரித்துள்ளதாக தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
Cyclone Ditwah: திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: கொட்டித் தீர்க்கும் கனமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம் பள்ளி, கல்லூரி விடுமுறை?
Cyclone Ditwah: கொட்டித் தீர்க்கும் கனமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம் பள்ளி, கல்லூரி விடுமுறை?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை
Sengottaiyan Joins TVK | தவெகவில் இணைந்தார்  செங்கோட்டையன்! விஜய் கொடுத்த முதல் TASK?
இன்னும் 2 நாள் தான்...நெருங்கி வரும் பேராபத்து 6 மாவட்டங்களுக்கு RED ALERT | Rain Alert | TN Rain | Weather Report

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
Cyclone Ditwah: திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: கொட்டித் தீர்க்கும் கனமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம் பள்ளி, கல்லூரி விடுமுறை?
Cyclone Ditwah: கொட்டித் தீர்க்கும் கனமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம் பள்ளி, கல்லூரி விடுமுறை?
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
CM Stalin Alert: டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
கார்த்திகை தீபம்: திருவண்ணாமலைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆட்சியர்!
கார்த்திகை தீபம்: திருவண்ணாமலைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆட்சியர்!
Embed widget