மேலும் அறிய

karthigai deepam: கார்த்திகை தீபத்தன்று மகாலட்சுமி அருள் பெற இதை செய்யுங்கள்..! மண் அகலில் தீபம் ஏற்றுவது ஏன் ?

karthigai deepam 2024: இன்று கார்த்திகை தீபம் கொண்டாட உள்ள நிலையில், அகல்விளக்குகளை பயன்படுத்தி ஏன் தீபம் ஏற்ற வேண்டும் என்பது குறித்து தெரிந்து கொள்வோம் 

கார்த்திகை தீபம் 2024 (karthigai deepam 2024): தமிழ் மாதங்களில் சிறப்பான மாதமாக கார்த்திகை மாதமாக கார்த்திகை தீபம் பார்க்கப்படுகிறது. அந்த வகையில் கார்த்திகை மாதம் வரும் விழாக்களில் முக்கிய விழாவாக திருக்கார்த்திகை தீபம் உள்ளது. இந்த ஆண்டு திருக்கார்த்திகை தீபம் இன்று தமிழ்நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு பண்டிகைகள் இருந்தாலும், கோயில்கள் மற்றும் வீடுகளில் ஒரே நேரத்தில் கொண்டாடப்படும் பண்டிகையாக திருக்கார்த்திகை திருவிழா உள்ளது.‌ திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு சிவன் கோயில்கள் மற்றும் முருகர் கோயில்களில் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். 

வீடுகளில் கொண்டாட்டம்

அதேபோன்று திருக்கார்த்திகை தீபத்தன்று வீடுகளிலும் தீபம் ஏற்றி, முருகருக்கு படையில் போட்டு சாமி தரிசனம் மேற்கொள்வது வழக்கமாக உள்ளது. ஒவ்வொரு வீடுகளிலும் திருக்கார்த்திகை பண்டிகையை முன்னிட்டு, வீடு முழுவதும் அகல் விளக்குகளால் தீபம் ஏற்றி கொண்டாடுவது வழக்கமாக உள்ளது. குறிப்பாக அக்னி ஸ்தலமாக உள்ள திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுவது வழக்கமாக உள்ளது. இதேபோன்று பல்வேறு கோயில்களிலும் சிறிய அளவில் தீபங்கள் ஏற்றுவது, கோயில்களில் மலை மீது தீபம் ஏற்றுவது என பல்வேறு வகைகளில் கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்படுகிறது. 

அகல் விளக்கு ஏற்றப்படுவது ஏன் ?

கார்த்திகை தீபத்தன்று வீடுகளில் மண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்குகளால் தீபம் ஏற்றுவது பாரம்பரியமாக இருந்து வருகிறது. இன்று சந்தையில் பல்வேறு வகையில் அகல்விளக்குகள் கிடைத்தாலும் மண்ணால் செய்த அகல் விளக்குகளை பயன்படுத்தி தான் கார்த்திகை தீபத்தன்று தீபத்தை ஏற்ற வேண்டும். மண் அகலில் விளக்கேற்றினால் வீட்டில் இருப்பவர்களின் ஆயுள் பெருகும் என்பது நம்பிக்கையாக உள்ளது. இது சனி பகவானின் அம்சமாக கருதப்படுவதால், மண் அகலில் விளக்கேற்றினால் சனி தோஷம் விலகும். 

கார்த்திகை தீப பண்டிகை என்பது செல்வத்தை பெருக்கும் பண்டிகையாக பார்க்கப்படுகிறது எனவே மண்ணால் செய்யப்பட்ட அகல்விளக்கு, மண் மகளான மகாலட்சுமியையும் குறிப்பதாகும் எனவே மண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்குகளை ஏற்றினால் இல்ல மகாலட்சுமி அருள் பரிபூரணமாக கிடைக்கும். மண் என்பது நிலையாக இருக்கக் கூடியது. அது போல் நம்மை தேடி வரும் செல்வம் நம்மிடம் நிலையாக, உறுதியாக தங்க வேண்டும் என்பதற்காக மண் அகலில் தீபம் ஏற்ற வேண்டும் என்கிறார்கள்.

பழைய அகல்களை பயன்படுத்தியும் கார்த்திகை தீபத் திருவிழாவன்று வீடுகளில் விளக்கேற்றலாம். ஆனால் குறைந்த பட்சம் 3 புதிய அகல்களாவது வாங்கி, தீபம் ஏற்றுவது நன்மை பயக்கும் என்பது ஐதிகமாக உள்ளது. கார்த்திகை தீபத்தன்று கண்டிப்பாக வீட்டு வாசலில் போடப்படும் கோலத்தின் மீது, தீபம் ஏற்ற வேண்டும் என்பதும் ஐதீகமாக உள்ளது.

வீட்டில் தீபம் ஏற்ற சரியான நேரம் என்ன ?

திருவண்ணாமலை மலை உச்சியில் மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்படும். அதன் பிறகு நமது வீடுகளில் தீபம் ஏற்றுவது நன்மை பயக்கும்.‌ திருவண்ணாமலையில் ஜோதி வடிவமாக காட்சியளிக்கும், சிவபெருமான் நமது வீடுகளிலும் ஜோதி வடிவாக காட்சி தருவது, ஐதீகமாக பார்க்கப்படுகிறது. செல்வத்தைத் தரும் கார்த்திகை தீப பண்டிகையை, அனைவரும் தங்களது இல்லங்களில் கொண்டாடி மகிழ்வோம். 

தலைப்பு செய்திகள்

சனியின் கடுமை குறைந்து செல்வம் பொங்க அருள்புரியும் திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர்!
சனியின் கடுமை குறைந்து செல்வம் பொங்க அருள்புரியும் திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர்!
தஞ்சாவூர் பெரிய கோயிலில் மஹா வாராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா
தஞ்சாவூர் பெரிய கோயிலில் மஹா வாராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா
அக்னி, சூரியன், சந்திரன்... மூன்று தீர்த்தங்களிலும் தீர்த்தவாரி: திருவெண்காட்டில் நடந்த ஆன்மீக அதிசயம்!
அக்னி, சூரியன், சந்திரன்... மூன்று தீர்த்தங்களிலும் தீர்த்தவாரி: திருவெண்காட்டில் நடந்த ஆன்மீக அதிசயம்!
பக்தர்களின் ‘ஓம் சக்தி’ கோஷம்! காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் தங்கத்தேர் உற்சவம்!
பக்தர்களின் ‘ஓம் சக்தி’ கோஷம்! காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் தங்கத்தேர் உற்சவம்!

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Meghalaya Project : ’தவெக ஆட்சியை கவிழ்க்க சதி – ஆபரேஷன் மேகாலயா’ பெயருக்கான காரணம் என்ன?
’தவெக ஆட்சியை கவிழ்க்க சதி – ஆபரேஷன் மேகாலயா’ பெயருக்கான காரணம் என்ன?
Monsoon season: பாதுகாப்பு முக்கியம் பாஸு; மழைக்கால கார் பயணம்- சேஃப்டிக்கு என்னென்ன தேவை?
Monsoon season: பாதுகாப்பு முக்கியம் பாஸு; மழைக்கால கார் பயணம்- சேஃப்டிக்கு என்னென்ன தேவை?
Free Claude AI: ஆசிரியர்களுக்கு இலவச ஏஐ சேவை அறிமுகம்- யாரெல்லாம் பெறலாம்? முழு விவரம்
Free Claude AI: ஆசிரியர்களுக்கு இலவச ஏஐ சேவை அறிமுகம்- யாரெல்லாம் பெறலாம்? முழு விவரம்
NEET UG Result 2026: நீட் மறுதேர்வில் யார் முதலிடம், தேர்ச்சி சதவீதம், பெண்களே அதிகம், கட் ஆஃப்- முக்கிய ஹைலைட்ஸ்!
NEET UG Result 2026: நீட் மறுதேர்வில் யார் முதலிடம், தேர்ச்சி சதவீதம், பெண்களே அதிகம், கட் ஆஃப்- முக்கிய ஹைலைட்ஸ்!
மாணவர்கள் உயர்கல்விக்கு பிணையில்லா கடன்: சிஎம் விஜய் திட்டம்!- தனி அலுவலர் நியமனம்!
மாணவர்கள் உயர்கல்விக்கு பிணையில்லா கடன்: சிஎம் விஜய் திட்டம்!- தனி அலுவலர் நியமனம்!
Chennai Power Cut: சென்னையில ஜூலை 18-ம் தேதி எங்கெங்க மின்சாரத் தடை பண்ணப் போறாங்க தெரியுமா.? ’ஏரியா லிஸ்ட் இதோ
சென்னையில ஜூலை 18-ம் தேதி எங்கெங்க மின்சாரத் தடை பண்ணப் போறாங்க தெரியுமா.? ’ஏரியா லிஸ்ட் இதோ
Vaiko : என் வாழ்க்கையில் நான் செய்த இரண்டு மிகப்பெரிய தவறுகள்.! பட்டியலிட்டு கொந்தளித்த வைகோ
என் வாழ்க்கையில் நான் செய்த இரண்டு மிகப்பெரிய தவறுகள்.! பட்டியலிட்டு கொந்தளித்த வைகோ
ஏழை மாணவர் கல்வி: நவோதயா பள்ளிகளை தவெக அரசு திறக்க வேண்டும்- பாஜக வலியுறுத்தல்
ஏழை மாணவர் கல்வி: நவோதயா பள்ளிகளை தவெக அரசு திறக்க வேண்டும்- பாஜக வலியுறுத்தல்
Embed widget