மேலும் அறிய
Advertisement
மார்கழி கடைசி நாள்.. மாஸ்காட்டிய கோவில் நகரம் காஞ்சிபுரம்...! தைத்திருநாளை எதிர்நோக்கி மக்கள்..!
நிறைவு தினத்தை ஒட்டி சிறுவர் சிறுமிகள் அம்மன்,ராதை, கோதை வேடம் இட்டு வீதி வீதியாக உலா
மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என பகவத்கீதையில் கிருஷ்ணன் பகவான கூறியுள்ளதைப்போல இறைவனை வழிபாடு செய்ய உகந்த மாதமாக மார்கழி மாதம் உள்ளது. மார்கழி மாதத்தில் சிவன் கோவில்களில் திருவெம்பாவையும், பெருமாள் கோவில்களில் திருப்பாவையையும் பாடப்படும். மார்கழி மாதம் பிறந்தாலே தெருக்களில் பஜனை கோஷ்டிகள் பாடிச் செல்வது வழக்கம். மார்கழி மாதம் முழுவதும் நடைபெற்றும் இன்று நிறைவு நாள் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
இந்நிலையில் கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் பிள்ளையார் பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ நவநீத கிருஷ்ணன் ஆலயத்தில் அதிகாலையிலேயே எழுந்து நீராடிவிட்டு நெற்றியில் திலகமிட்டு வந்த சிறுவர்கள், முதியவர்களின் வழிகாட்டுதல் ஏதுமின்றி கோவிலில் உள்ள ஆர்மோனியம், மிருதங்கம், ஜால்ரா, உள்ளிட்ட வாத்தியங்களை எடுத்து வைத்துக்கொண்டு சுவாமி முன்பு அமர்ந்து பஜனைப் பாடல்களை மனமுருக பாடி வருகின்றனர்.
மார்கழி மாதத்தில் பஜனைப் பாடல்களை பாட முதியவர்களே மறந்து வரும் நிலையில், மார்கழி மாதம் பிறந்த முதல் நாளே ஆர்வத்துடன் வந்து பஜனைப் பாடல்களைப் பாடத் துவங்கிய சிறுவர்களின் செயலை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் இன்றுடன் மார்கழி மாதம் நிறைவு அடைவது ஒட்டி சிறுவர் சிறுமிகள் அம்மன், ராதை போல் வேடமிட்டு சேலைராமசாமி திருவீதி இருந்து துவங்கி கண்ணன் தெரு, மேட்டு தெரு வழியாக 5 தெரு வீதி உலா வந்து உலா நிறைவு பெற்றது. ஏராளமான சிறுவர் சிறுமிகள் பாரம்பரிய உடை அணிந்து மேலும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Khelo khul ke, sab bhool ke - only on Games Live
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
விளையாட்டு
அரசியல்
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion