மேலும் அறிய

”கோவிந்தோ கோவிந்தோ” கோஷங்களுடன் முல்லை பெரியாற்றில் இறங்கினார் கள்ளழகர்

ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு இன்று காலை ஸ்ரீ வரதராஜ பெருமாள் கள்ளழகர் பேட்டை பச்சை பட்டு உடுத்தி முல்லைப் பெரியாற்றில் இறங்கும் வைபோகம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

உப்பார்பட்டி கிராமத்தில் ஸ்ரீ வரதராஜ பெருமாள் முல்லைப் பெரியாற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம் நடைபெற்றது. இதில் 5000 - க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பௌர்ணமி அன்று மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் வழங்கும் பொருட்டு சுந்தரராஜபெருமாள் கள்ளழகர் வேடமிட்டு  வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.


”கோவிந்தோ கோவிந்தோ” கோஷங்களுடன் முல்லை பெரியாற்றில் இறங்கினார் கள்ளழகர்

இந்தாண்டிற்கான கள்ளழகர் சித்திரை திருவிழா மதுரையில் கடந்த 8 ஆம் தேதி தொடங்கிய நிலையில் 3வது நாள் நிகழ்வாக நேற்றைய முன் தினம் மதுரை மாவட்டம் அழகர்மலை அடிவாரத்தில் உள்ள கள்ளழகர் கோவிலில் இருந்து சுந்தராஜபெருமாள் தங்கப்பல்லக்கில் கள்ளழகர் வேடமிட்டு மதுரை நோக்கி புறப்பட்டாகினார். இந்த நிலையில் இன்று காலை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதை குறிப்பாக தென் மாவட்டங்களில் உள்ள பெருமாள் கோவில்களில் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெறும்.

அந்த வகையில் தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள உப்புக்கோட்டை ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவில் மற்றும் உப்பார்பட்டி ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு கள்ளழகர் ஆண்டு தோறும் முல்லைப் பெரியாற்றில் இறங்கும் வைபோகம் நடைபெறும். பின்னர் முல்லைப் பெரியாற்று கரையில் இரு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கள்ளழகர்  எதிர்சேவை நடைபெறுவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு உப்புக்கோட்டை கிராமத்தில் உள்ள ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகான திருப்பணிகள் நடைபெற்று வருவதால் இந்த ஆண்டு உப்புக்கோட்டை கிராமத்தில் உள்ள கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபோகம் நடைபெறாது என கிராம கமிட்டி சார்பாக தெரிவிக்கப்பட்டனர்.


”கோவிந்தோ கோவிந்தோ” கோஷங்களுடன் முல்லை பெரியாற்றில் இறங்கினார் கள்ளழகர்

இதனால் இந்த ஆண்டு  உப்பார்பட்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு இன்று காலை ஸ்ரீ வரதராஜ பெருமாள் கள்ளழகர் பேட்டை பச்சை பட்டு உடுத்தி முல்லைப் பெரியாற்றில் இறங்கும் வைபோகம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது . அப்போது அங்கு கூடியிருந்த ஏராளமான பொதுமக்கள் ”கோவிந்தோ கோவிந்தோ” என கோஷங்களை எழுப்பி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபோகத்தை கண்டு களித்து சுவாமி தரிசனம் செய்தனர்.

அதனைத் தொடர்ந்து உப்புக்கோட்டை முல்லைப் பெரியாற்று கரையில் அமைக்கப்பட்டிருந்த பந்தலில் கள்ளழகர் இறக்கி வைத்தனர். உப்புக்கோட்டை மற்றும் உப்பார்பட்டி இரு கிராமத்தைச் சேர்ந்த 5000 - க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் ஒவ்வொரு ஆண்டும் உப்புக்கோட்டை மற்றும் உப்பார்பட்டி இரு கிராமங்களில் இணைந்து கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபோகம் நடைபெறும் நிலையில் இந்த ஆண்டு சித்திரைத் திருவிழாவை உப்பார்பட்டி கிராமம் மட்டுமே சேர்ந்த கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபோகம் நடைபெற்றது.

தலைப்பு செய்திகள்

"காசியை விட புனிதம்" - ஆனால் சொட்டு நீர் இல்லை... மயிலாடுதுறை துலா கட்டத்தில் சோகமான ஆடி அமாவாசை!
முன்னோர்களை நினைத்து வழிபடும் புனித நாள்... ஆடி அமாவாசை: திருவையாறில் குவிந்த மக்கள்
முன்னோர்களை நினைத்து வழிபடும் புனித நாள்... ஆடி அமாவாசை: திருவையாறில் குவிந்த மக்கள்
சதுரகிரியில் மீண்டும் காட்டுத்தீ: பக்தர்களுக்கு அனுமதி ரத்து - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
சதுரகிரியில் மீண்டும் காட்டுத்தீ: பக்தர்களுக்கு அனுமதி ரத்து - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
முடியப்போது ஆடி.. தாலி கட்ட ரெடியாகும் புது மாப்பிள்ளைங்க..! ஆவணி முதல் முகூர்த்தத்திற்கு வெயிட்டிங்!
முடியப்போது ஆடி.. தாலி கட்ட ரெடியாகும் புது மாப்பிள்ளைங்க..! ஆவணி முதல் முகூர்த்தத்திற்கு வெயிட்டிங்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
Maruti Suzuki SUV: 7 எஸ்யுவிக்களை நாங்க கொடுக்கிறோம்..! மாருதி அதிரடி - 7 சீட்டர், ஹைப்ரிட், EV, CNG - முழு லிஸ்ட்
7 எஸ்யுவிக்களை நாங்க கொடுக்கிறோம்..! மாருதி அதிரடி - 7 சீட்டர், ஹைப்ரிட், EV, CNG - முழு லிஸ்ட்
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
Chennai Power Cut: சென்னையில் ஆகஸ்ட் 13-ம் தேதி எந்தெந்த பகுதிகளில் மின் தடை ஏற்படப் போகிறது தெரியுமா.? இதோ லிஸ்ட்
சென்னையில் ஆகஸ்ட் 13-ம் தேதி எந்தெந்த பகுதிகளில் மின் தடை ஏற்படப் போகிறது தெரியுமா.? இதோ லிஸ்ட்
CM Vijay: தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
Embed widget