மேலும் அறிய

Thanjavur: மனதார வழிபட்டால் இழந்த அனைத்தையும் மீட்டு தருவார் பிரத்தியங்கரா தேவி

மனம் நிலைப்படுத்தி, முழு மனதோடு அய்யாவாடி பிரத்தியங்கிராதேவியை வழிபட்டு மனம் உருகி வேண்டினால் நாம் இதுவரை வாழ்வில் இழந்ததையெல்லாம் மீட்டுத் தந்திடுவாள் இத்தலத்து தேவி.

தஞ்சாவூர்: பக்தர்கள் மனதார வழிபட்டால் இழந்ததை எல்லாம் மீட்டு தந்திடும் அன்னையவள் அய்யாவாடி பிரத்தியங்கிரா தேவி. இந்த கோயில் அமைந்துள்ள இடம் கோயில் நகரம் என்று அழைக்கப்படும் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகில் உள்ள அய்யாவாடியில்தான். இதனால் இந்த கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமோ அதிகம்தான்.

வேண்டுதல்களை நிறைவேற்றும் அன்னை

அய்யாவாடி என்ற திருத்தலத்தில்தான் அற்புதமாகக் கோயில் கொண்டு பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி வருகிறரே; பிரத்தியங்கிராதேவி. அய்யாவாடி என்றால் ஐவர் பாடி என்று அர்த்தம். அதாவது ஐவர் பாடி என்பது பஞ்சபாண்டவர்களைக் குறிக்கும்.

பஞ்சபாண்டவர்கள் இங்கு வந்து, இந்தத் திருத்தலத்தில் உள்ள பிரத்தியங்கிரா தேவியை தவமிருந்து வழிபட்டனர். அவர்கள் வேண்டுதல்கள் நிறைவேறியது. பயன் அடைந்தனர். சொத்துக்கள், அரசாட்சியை இழந்து வனவாசம் இருந்த காலகட்டத்தில் சாப்பிட வகையில்லாமல், தூங்குவதற்கு இடமில்லாமல் தவித்துக் கலங்கிய பஞ்ச பாண்டவர்களுக்கு பிரத்தியங்கிரா தேவியை வழிபடுங்கள்; கடும் தவம் மேற்கொள்ளுங்கள் என்று கூறப்பட அதன்படியே அவர்களும் இத்தலம் தேடி வந்தனர்.

இங்கு சுயம்பு மூர்த்தமாக காட்சி தந்தாள் பிரத்தியங்கிரா தேவி. நெக்குருகிப் போனார்கள் பாண்டவர்கள். அது சித்திரை மாதம் என்பதால் பூக்கள் கிடைக்கவில்லை. அருகில் ஆலமரம் இருக்கவே மரத்தில் இருந்து இலையைப் பறித்தார்கள். அந்த இலையை, பூக்களாக பாவித்து பிரத்தியங்கரா தேவிக்கு அர்ச்சனை செய்து மனமுறுகி வேண்டிக் கொண்டனர். நெடுங்காலம் இந்த பூஜையைத் தொடர்ந்து மேற்கொண்டார்கள்.

ஆத்மார்த்தமான வேண்டுதலுக்கும், பூஜைக்கும் கிடைத்த பலனாக, பாண்டவர்கள் பகைவர்களை வென்றார்கள். வெற்றி வாகை சூடினார்கள். தர்மம் நிலைத்தது. இழந்த கெளரவம், மரியாதை, புகழ், செல்வம், தங்களின் ராஜாங்கம், தேசம் என அனைத்தையும் மீட்டெடுத்தனர் பாண்டவர்கள்.

இதனால்தான் பஞ்சபாண்டவர்கள் பிரத்தியங்கிரா தேவியை வழிபட்ட அந்த திருத்தலம் ஐவர்பாடி என்று அழைக்கப்பட்டு பின்னர் அய்யாவாடி என்று அழைக்கப்படுகிறது. திருநாகேஸ்வரத்துக்கு அருகில் உள்ள அய்யாவாடி பிரத்தியங்கிராதேவி, மகா சக்தி கொண்டவர். மகோன்னத குணங்கள் நிறைந்தவர்.

நல்லவர்களுக்கு உண்டாகிற எதிர்ப்புகளை களைந்து, தவிடு பொடியாக்கி அவர்களின் நிலையை மாற்றி இழந்தவற்றையெல்லாம் மீட்டுக் கொடுப்பவள் என்று போற்றுகின்றனர் மனம் நெகிழ்ந்து தெரிவிக்கின்றனர் பக்தர்கள்.

அய்யாவாடி திருத்தலத்தில் ஒவ்வொரு அமாவாசை தோறும் சிறப்பு யாகங்களும், விசேஷ வழிபாடுகளும் நடைபெறுகின்றன. செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு ஆராதனைகள் பிரத்தியங்கிரா தேவிக்கு விமரிசையாக நடைபெறும்.

மனம் நிலைப்படுத்தி, முழு மனதோடு அய்யாவாடி பிரத்தியங்கிராதேவியை வழிபட்டு மனம் உருகி வேண்டினால் நாம் இதுவரை வாழ்வில் இழந்ததையெல்லாம் மீட்டுத் தந்திடுவாள் இத்தலத்து தேவி. இன்னல்களையெல்லாம் துடைத்தெடுத்து அருளுவாள் இத்தலத்து அம்மன். மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோயிலை தேடி வந்து தங்களின் குறைகளை தெரிவித்து நிவர்த்தி பெற்று செல்கின்றனர் பக்தர்கள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi: ”அவங்களுக்கு எதிரா நான் பேசுனதே கிடையாது - அடித்து சொல்லும் பிரதமர் மோடி,
”அவங்களுக்கு எதிரா நான் பேசுனதே கிடையாது - அடித்து சொல்லும் பிரதமர் மோடி
Lok Sabha Election 5th Phase LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம் - 23.66% ஆக பதிவானது
Lok Sabha Election 5th Phase LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம் - 23.66% ஆக பதிவானது
Car Health Tips: இந்த அறிகுறிகள் எல்லாம் தெரியுதா? உடனே உங்க காரை மெக்கானிக் ஷாப் கொண்டு போங்க..!
இந்த அறிகுறிகள் எல்லாம் தெரியுதா? உடனே காரை மெக்கானிக் ஷாப் கொண்டு போங்க..!
”என்னை மாதிரி யாரும் ஆகிடக்கூடாது” : முதலமைச்சர் வீட்டிற்கு குடிபோதையில் சென்றதால் பரபரப்பு
”என்னை மாதிரி யாரும் ஆகிடக்கூடாது” : முதலமைச்சர் வீட்டிற்கு குடிபோதையில் சென்றதால் பரபரப்பு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Baby Viral Video |  உனக்கெல்லாம் எதுக்கு குழந்தை? தாயின் விபரீத முடிவு..Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கே

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: ”அவங்களுக்கு எதிரா நான் பேசுனதே கிடையாது - அடித்து சொல்லும் பிரதமர் மோடி,
”அவங்களுக்கு எதிரா நான் பேசுனதே கிடையாது - அடித்து சொல்லும் பிரதமர் மோடி
Lok Sabha Election 5th Phase LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம் - 23.66% ஆக பதிவானது
Lok Sabha Election 5th Phase LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம் - 23.66% ஆக பதிவானது
Car Health Tips: இந்த அறிகுறிகள் எல்லாம் தெரியுதா? உடனே உங்க காரை மெக்கானிக் ஷாப் கொண்டு போங்க..!
இந்த அறிகுறிகள் எல்லாம் தெரியுதா? உடனே காரை மெக்கானிக் ஷாப் கொண்டு போங்க..!
”என்னை மாதிரி யாரும் ஆகிடக்கூடாது” : முதலமைச்சர் வீட்டிற்கு குடிபோதையில் சென்றதால் பரபரப்பு
”என்னை மாதிரி யாரும் ஆகிடக்கூடாது” : முதலமைச்சர் வீட்டிற்கு குடிபோதையில் சென்றதால் பரபரப்பு
Thalapathy Vijay: ஜேசன் சஞ்சயை நம்பவே முடியாது.. மகனை பற்றி வெளிப்படையாக பேசிய நடிகர் விஜய்!
ஜேசன் சஞ்சயை நம்பவே முடியாது.. மகனை பற்றி வெளிப்படையாக பேசிய நடிகர் விஜய்!
Latest Gold Silver Rate:வரலாற்றில் புதிய உச்சம்..ஒரு சவரன் தங்கம் விலை ரூ.55 ஆயிரத்தை கடந்தது!
வரலாற்றில் புதிய உச்சம்..ஒரு சவரன் தங்கம் விலை ரூ.55 ஆயிரத்தை கடந்தது!
Iran President: உயிரிழந்த சர்வதேச தலைவர்கள்.. வான்வழி விபத்துகள்.. அதிர வைக்கும் பட்டியல்
Iran President: உயிரிழந்த சர்வதேச தலைவர்கள்.. வான்வழி விபத்துகள்.. அதிர வைக்கும் பட்டியல்
BCCI: மீண்டும் மத்திய ஒப்பந்தத்தில் இடமா..?  ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷனை முகாமுக்கு அழைத்துள்ள பிசிசிஐ..!
மீண்டும் மத்திய ஒப்பந்தத்தில் இடமா..? ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷனை முகாமுக்கு அழைத்துள்ள பிசிசிஐ..!
Embed widget