மேலும் அறிய

Thanjavur: மனதார வழிபட்டால் இழந்த அனைத்தையும் மீட்டு தருவார் பிரத்தியங்கரா தேவி

மனம் நிலைப்படுத்தி, முழு மனதோடு அய்யாவாடி பிரத்தியங்கிராதேவியை வழிபட்டு மனம் உருகி வேண்டினால் நாம் இதுவரை வாழ்வில் இழந்ததையெல்லாம் மீட்டுத் தந்திடுவாள் இத்தலத்து தேவி.

தஞ்சாவூர்: பக்தர்கள் மனதார வழிபட்டால் இழந்ததை எல்லாம் மீட்டு தந்திடும் அன்னையவள் அய்யாவாடி பிரத்தியங்கிரா தேவி. இந்த கோயில் அமைந்துள்ள இடம் கோயில் நகரம் என்று அழைக்கப்படும் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகில் உள்ள அய்யாவாடியில்தான். இதனால் இந்த கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமோ அதிகம்தான்.

வேண்டுதல்களை நிறைவேற்றும் அன்னை

அய்யாவாடி என்ற திருத்தலத்தில்தான் அற்புதமாகக் கோயில் கொண்டு பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி வருகிறரே; பிரத்தியங்கிராதேவி. அய்யாவாடி என்றால் ஐவர் பாடி என்று அர்த்தம். அதாவது ஐவர் பாடி என்பது பஞ்சபாண்டவர்களைக் குறிக்கும்.

பஞ்சபாண்டவர்கள் இங்கு வந்து, இந்தத் திருத்தலத்தில் உள்ள பிரத்தியங்கிரா தேவியை தவமிருந்து வழிபட்டனர். அவர்கள் வேண்டுதல்கள் நிறைவேறியது. பயன் அடைந்தனர். சொத்துக்கள், அரசாட்சியை இழந்து வனவாசம் இருந்த காலகட்டத்தில் சாப்பிட வகையில்லாமல், தூங்குவதற்கு இடமில்லாமல் தவித்துக் கலங்கிய பஞ்ச பாண்டவர்களுக்கு பிரத்தியங்கிரா தேவியை வழிபடுங்கள்; கடும் தவம் மேற்கொள்ளுங்கள் என்று கூறப்பட அதன்படியே அவர்களும் இத்தலம் தேடி வந்தனர்.

இங்கு சுயம்பு மூர்த்தமாக காட்சி தந்தாள் பிரத்தியங்கிரா தேவி. நெக்குருகிப் போனார்கள் பாண்டவர்கள். அது சித்திரை மாதம் என்பதால் பூக்கள் கிடைக்கவில்லை. அருகில் ஆலமரம் இருக்கவே மரத்தில் இருந்து இலையைப் பறித்தார்கள். அந்த இலையை, பூக்களாக பாவித்து பிரத்தியங்கரா தேவிக்கு அர்ச்சனை செய்து மனமுறுகி வேண்டிக் கொண்டனர். நெடுங்காலம் இந்த பூஜையைத் தொடர்ந்து மேற்கொண்டார்கள்.

ஆத்மார்த்தமான வேண்டுதலுக்கும், பூஜைக்கும் கிடைத்த பலனாக, பாண்டவர்கள் பகைவர்களை வென்றார்கள். வெற்றி வாகை சூடினார்கள். தர்மம் நிலைத்தது. இழந்த கெளரவம், மரியாதை, புகழ், செல்வம், தங்களின் ராஜாங்கம், தேசம் என அனைத்தையும் மீட்டெடுத்தனர் பாண்டவர்கள்.

இதனால்தான் பஞ்சபாண்டவர்கள் பிரத்தியங்கிரா தேவியை வழிபட்ட அந்த திருத்தலம் ஐவர்பாடி என்று அழைக்கப்பட்டு பின்னர் அய்யாவாடி என்று அழைக்கப்படுகிறது. திருநாகேஸ்வரத்துக்கு அருகில் உள்ள அய்யாவாடி பிரத்தியங்கிராதேவி, மகா சக்தி கொண்டவர். மகோன்னத குணங்கள் நிறைந்தவர்.

நல்லவர்களுக்கு உண்டாகிற எதிர்ப்புகளை களைந்து, தவிடு பொடியாக்கி அவர்களின் நிலையை மாற்றி இழந்தவற்றையெல்லாம் மீட்டுக் கொடுப்பவள் என்று போற்றுகின்றனர் மனம் நெகிழ்ந்து தெரிவிக்கின்றனர் பக்தர்கள்.

அய்யாவாடி திருத்தலத்தில் ஒவ்வொரு அமாவாசை தோறும் சிறப்பு யாகங்களும், விசேஷ வழிபாடுகளும் நடைபெறுகின்றன. செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு ஆராதனைகள் பிரத்தியங்கிரா தேவிக்கு விமரிசையாக நடைபெறும்.

மனம் நிலைப்படுத்தி, முழு மனதோடு அய்யாவாடி பிரத்தியங்கிராதேவியை வழிபட்டு மனம் உருகி வேண்டினால் நாம் இதுவரை வாழ்வில் இழந்ததையெல்லாம் மீட்டுத் தந்திடுவாள் இத்தலத்து தேவி. இன்னல்களையெல்லாம் துடைத்தெடுத்து அருளுவாள் இத்தலத்து அம்மன். மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோயிலை தேடி வந்து தங்களின் குறைகளை தெரிவித்து நிவர்த்தி பெற்று செல்கின்றனர் பக்தர்கள்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

கூட்டணிக்கட்சியினர் பற்றி பொதுவெளியில் பேசக்கூடாது.. தொண்டர்களுக்கு திமுக தலைமை உத்தரவு!
கூட்டணிக்கட்சியினர் பற்றி பொதுவெளியில் பேசக்கூடாது.. தொண்டர்களுக்கு திமுக தலைமை உத்தரவு!
வாக்காளர் பட்டியலில் குளறுபடி: கொத்தாக மாயமான இஸ்லாமியர்கள் பெயர்கள்...பரபரப்பு...
வாக்காளர் பட்டியலில் குளறுபடி: கொத்தாக மாயமான இஸ்லாமியர்கள் பெயர்கள்...பரபரப்பு...
ராமதாசுக்கு விஜய்யுடனும் கூட்டணி வைக்க சிக்கல்?‌ ராமதாஸ் நிலை என்ன? அரசியல் களத்தில் பரபரப்பு!
ராமதாசுக்கு விஜய்யுடனும் கூட்டணி வைக்க சிக்கல்?‌ ராமதாஸ் நிலை என்ன? அரசியல் களத்தில் பரபரப்பு!
நாம் இணைந்து தயாரிக்கும் தேர்தல் அறிக்கை இருக்க வேண்டும்... எம்.பி., கனிமொழி உறுதி
நாம் இணைந்து தயாரிக்கும் தேர்தல் அறிக்கை இருக்க வேண்டும்... எம்.பி., கனிமொழி உறுதி
ABP Premium

வீடியோ

OPS ADMK Alliance | TTV-க்கு பாஜக கொடுத்த TASK! கூட்டணிக்கு வருகிறாரா OPS? குக்கர் சின்னத்தில் போட்டி?
Maharashtra Police | ”அம்பேத்கரையே மதிக்கல என் வேலை போனாலும் பரவால” பாஜக அமைச்சர் vs பெண் POLICE
MK Stalin Warns KO Thalapathi |
Ramadoss vs DMK | திருமாவுக்காக கைவிரித்த திமுக! குழப்பத்தில் ராமதாஸ்! சைலண்டாக இருக்கும் விஜய்
Jothimani |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கூட்டணிக்கட்சியினர் பற்றி பொதுவெளியில் பேசக்கூடாது.. தொண்டர்களுக்கு திமுக தலைமை உத்தரவு!
கூட்டணிக்கட்சியினர் பற்றி பொதுவெளியில் பேசக்கூடாது.. தொண்டர்களுக்கு திமுக தலைமை உத்தரவு!
வாக்காளர் பட்டியலில் குளறுபடி: கொத்தாக மாயமான இஸ்லாமியர்கள் பெயர்கள்...பரபரப்பு...
வாக்காளர் பட்டியலில் குளறுபடி: கொத்தாக மாயமான இஸ்லாமியர்கள் பெயர்கள்...பரபரப்பு...
ராமதாசுக்கு விஜய்யுடனும் கூட்டணி வைக்க சிக்கல்?‌ ராமதாஸ் நிலை என்ன? அரசியல் களத்தில் பரபரப்பு!
ராமதாசுக்கு விஜய்யுடனும் கூட்டணி வைக்க சிக்கல்?‌ ராமதாஸ் நிலை என்ன? அரசியல் களத்தில் பரபரப்பு!
நாம் இணைந்து தயாரிக்கும் தேர்தல் அறிக்கை இருக்க வேண்டும்... எம்.பி., கனிமொழி உறுதி
நாம் இணைந்து தயாரிக்கும் தேர்தல் அறிக்கை இருக்க வேண்டும்... எம்.பி., கனிமொழி உறுதி
American Warship Iran Houthi : நெருங்கிய அமெரிக்க போர்க்கப்பல்; கண்டுபிடிக்க முடியாமல் திணறும் ஈரான்; மிரட்டும் ஹவுதி, ஹெஸ்பொல்லா
நெருங்கிய அமெரிக்க போர்க்கப்பல்; கண்டுபிடிக்க முடியாமல் திணறும் ஈரான்; மிரட்டும் ஹவுதி, ஹெஸ்பொல்லா
HDFC: ஓய்வுக்காலத்திற்காக எதையும் சேமிக்கவில்லையா? இப்போதே திட்டமிட சில எளிய வழிகள்!
HDFC: ஓய்வுக்காலத்திற்காக எதையும் சேமிக்கவில்லையா? இப்போதே திட்டமிட சில எளிய வழிகள்!
UGC Equity Regulation: யுஜிசி புது விதிகள் பொதுப்பிரிவு மாணவர்களுக்கு ஆபத்தா? எழும் எதிர்ப்புகள்- உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!
UGC Equity Regulation: யுஜிசி புது விதிகள் பொதுப்பிரிவு மாணவர்களுக்கு ஆபத்தா? எழும் எதிர்ப்புகள்- உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!
India-EU Trade Deal: குறையும் சரக்கு விலை; குஷியில் மதுப்பிரியர்கள்; எந்தெந்த பொருட்கள் மலிவாகும்.?
குறையும் சரக்கு விலை; குஷியில் மதுப்பிரியர்கள்; எந்தெந்த பொருட்கள் மலிவாகும்.?
Embed widget