மேலும் அறிய

Thanjavur: மனதார வழிபட்டால் இழந்த அனைத்தையும் மீட்டு தருவார் பிரத்தியங்கரா தேவி

மனம் நிலைப்படுத்தி, முழு மனதோடு அய்யாவாடி பிரத்தியங்கிராதேவியை வழிபட்டு மனம் உருகி வேண்டினால் நாம் இதுவரை வாழ்வில் இழந்ததையெல்லாம் மீட்டுத் தந்திடுவாள் இத்தலத்து தேவி.

தஞ்சாவூர்: பக்தர்கள் மனதார வழிபட்டால் இழந்ததை எல்லாம் மீட்டு தந்திடும் அன்னையவள் அய்யாவாடி பிரத்தியங்கிரா தேவி. இந்த கோயில் அமைந்துள்ள இடம் கோயில் நகரம் என்று அழைக்கப்படும் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகில் உள்ள அய்யாவாடியில்தான். இதனால் இந்த கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமோ அதிகம்தான்.

வேண்டுதல்களை நிறைவேற்றும் அன்னை

அய்யாவாடி என்ற திருத்தலத்தில்தான் அற்புதமாகக் கோயில் கொண்டு பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி வருகிறரே; பிரத்தியங்கிராதேவி. அய்யாவாடி என்றால் ஐவர் பாடி என்று அர்த்தம். அதாவது ஐவர் பாடி என்பது பஞ்சபாண்டவர்களைக் குறிக்கும்.

பஞ்சபாண்டவர்கள் இங்கு வந்து, இந்தத் திருத்தலத்தில் உள்ள பிரத்தியங்கிரா தேவியை தவமிருந்து வழிபட்டனர். அவர்கள் வேண்டுதல்கள் நிறைவேறியது. பயன் அடைந்தனர். சொத்துக்கள், அரசாட்சியை இழந்து வனவாசம் இருந்த காலகட்டத்தில் சாப்பிட வகையில்லாமல், தூங்குவதற்கு இடமில்லாமல் தவித்துக் கலங்கிய பஞ்ச பாண்டவர்களுக்கு பிரத்தியங்கிரா தேவியை வழிபடுங்கள்; கடும் தவம் மேற்கொள்ளுங்கள் என்று கூறப்பட அதன்படியே அவர்களும் இத்தலம் தேடி வந்தனர்.

இங்கு சுயம்பு மூர்த்தமாக காட்சி தந்தாள் பிரத்தியங்கிரா தேவி. நெக்குருகிப் போனார்கள் பாண்டவர்கள். அது சித்திரை மாதம் என்பதால் பூக்கள் கிடைக்கவில்லை. அருகில் ஆலமரம் இருக்கவே மரத்தில் இருந்து இலையைப் பறித்தார்கள். அந்த இலையை, பூக்களாக பாவித்து பிரத்தியங்கரா தேவிக்கு அர்ச்சனை செய்து மனமுறுகி வேண்டிக் கொண்டனர். நெடுங்காலம் இந்த பூஜையைத் தொடர்ந்து மேற்கொண்டார்கள்.

ஆத்மார்த்தமான வேண்டுதலுக்கும், பூஜைக்கும் கிடைத்த பலனாக, பாண்டவர்கள் பகைவர்களை வென்றார்கள். வெற்றி வாகை சூடினார்கள். தர்மம் நிலைத்தது. இழந்த கெளரவம், மரியாதை, புகழ், செல்வம், தங்களின் ராஜாங்கம், தேசம் என அனைத்தையும் மீட்டெடுத்தனர் பாண்டவர்கள்.

இதனால்தான் பஞ்சபாண்டவர்கள் பிரத்தியங்கிரா தேவியை வழிபட்ட அந்த திருத்தலம் ஐவர்பாடி என்று அழைக்கப்பட்டு பின்னர் அய்யாவாடி என்று அழைக்கப்படுகிறது. திருநாகேஸ்வரத்துக்கு அருகில் உள்ள அய்யாவாடி பிரத்தியங்கிராதேவி, மகா சக்தி கொண்டவர். மகோன்னத குணங்கள் நிறைந்தவர்.

நல்லவர்களுக்கு உண்டாகிற எதிர்ப்புகளை களைந்து, தவிடு பொடியாக்கி அவர்களின் நிலையை மாற்றி இழந்தவற்றையெல்லாம் மீட்டுக் கொடுப்பவள் என்று போற்றுகின்றனர் மனம் நெகிழ்ந்து தெரிவிக்கின்றனர் பக்தர்கள்.

அய்யாவாடி திருத்தலத்தில் ஒவ்வொரு அமாவாசை தோறும் சிறப்பு யாகங்களும், விசேஷ வழிபாடுகளும் நடைபெறுகின்றன. செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு ஆராதனைகள் பிரத்தியங்கிரா தேவிக்கு விமரிசையாக நடைபெறும்.

மனம் நிலைப்படுத்தி, முழு மனதோடு அய்யாவாடி பிரத்தியங்கிராதேவியை வழிபட்டு மனம் உருகி வேண்டினால் நாம் இதுவரை வாழ்வில் இழந்ததையெல்லாம் மீட்டுத் தந்திடுவாள் இத்தலத்து தேவி. இன்னல்களையெல்லாம் துடைத்தெடுத்து அருளுவாள் இத்தலத்து அம்மன். மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோயிலை தேடி வந்து தங்களின் குறைகளை தெரிவித்து நிவர்த்தி பெற்று செல்கின்றனர் பக்தர்கள்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
ABP Premium

வீடியோ

TVK Ajitha | காரை மறித்த பெண் நிர்வாகி தவெகவில் இருந்து நீக்கம்?ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்
அதிமுக - பாஜக MEETING! MISS ஆன அண்ணாமலை! ஒதுக்கி வைக்கும் பாஜக
ஆதவ் அர்ஜூனாவுடன் ஒரே மேடையில் காங்கிரஸ் கட்சியினர்! கூட்டணிக்கான அச்சாரமா?
விஜய் சொன்னது பொய் கதை?”மக்களை அடிமையாக்கிய ஜோசப்” சர்ச்சையான KUTTY STORY உண்மை இதுதான்? | Christmas TVK Vijay Speech |
தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விஜய் ஒரு Spoiler .! அதிமுக- பாஜக கூட்டணியின் வெற்றிக்கு சிக்கல்.? போட்டுடைத்த பியூஸ் கோயல்
விஜய் ஒரு Spoiler .! அதிமுக- பாஜக கூட்டணியின் வெற்றிக்கு சிக்கல்.? போட்டுடைத்த பியூஸ் கோயல்
Pongal Gift: பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
America Offer illegal Immigrants: இலவச விமானப் பயணச்சீட்டு, 3000 டாலர்கள், அபராதம் ரத்து; ட்ரம்ப் அதிரடி ஆஃபர்; யாருக்கு தெரியுமா.?
இலவச விமானப் பயணச்சீட்டு, 3000 டாலர்கள், அபராதம் ரத்து; ட்ரம்ப் அதிரடி ஆஃபர்; யாருக்கு தெரியுமா.?
Bottle Water New Regulations: பாட்டில் குடிநீருக்கு புதிய விதிமுறைகள்; FSSAI கெடுபிடி; ஜனவரி 1 முதல் இதெல்லாம் கட்டாயம்
பாட்டில் குடிநீருக்கு புதிய விதிமுறைகள்; FSSAI கெடுபிடி; ஜனவரி 1 முதல் இதெல்லாம் கட்டாயம்
Embed widget