மேலும் அறிய

குடியாத்தம் கெங்கை அம்மன் சிரசு திருவிழா; லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

குடியாத்தம் நகரில் கோலாகலமாக நடைபெற்ற கெங்கை அம்மன் சிரசு திருவிழா. லட்சக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.

ஆண்டு தோறும் வைகாசி 1- ம் தேதி நடைபெறும் புகழ்பெற்ற வேலூர் மாவட்டம் குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா வெகு விமர்சியாகவும் கோலாகலமாகவும் நடைபெற்றது. நகர் முழுவதும் குவிந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் அம்மன் சிரசு ஊர்வலம் நடைபெற்றது. விழாவின் முக்கிய அம்சமான தரணம்பேட்டை பகுதியில் உள்ள முத்தியாலம்மன் ஆலயத்தில் இருந்து அமம்ன் சிரசு நகரின் வீதி வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோபாலபுரத்தில் உள்ள கெங்கையம்மன் ஆலத்தில் உள்ள அம்மன் உடலில் பொறுதப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு அம்மன் கண் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அம்மன் சிரசு ஊர்வலத்தில் போது பக்தர்கள் சாலை நெடுங்கிலும் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்து நேர்த்திக்கடனை செலுத்தி வழிபட்டனர். சிரசு திருவிழாவை காண தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதனால் குடியாத்தம் நகரமே விழாக்கோலமாக மக்கள் வெள்ளமாக காட்சியளித்தது. பாதுகாப்பு பணியில் 6 கூடுதல் காவல்கண்காணிப்பாளர்கள், 15 துணை காவல் கண்காணிப்பாளர்கள் என ஆயிரதிற்கும் மேற்பட்ட   காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.  


குடியாத்தம் கெங்கை அம்மன் சிரசு திருவிழா; லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

திருவிழாவின் வரலாறு: 

தந்தை சொல்லை தட்டாத பரசுராமன் தனது தாயின் தலையை வெட்டி பின் வரம்பெற்று மீண்டும் உயிர்பித்த நிகழ்வு சிரசு திருவிழாவாக கொண்டாப்படுகிறது. முன்னொரு காலத்தில் விதர்ப தேசத்தை ஆண்டுவந்த விஜரவத என்ற அரசன் குழந்தை வரம் வேண்டி பிரம்மனை நோக்கிக் கடும் தவமிருந்தார். அரசனின் தவத்தை மெச்சிய பிரம்மன், ரேணுகா தேவியை மகளாகப் பெற்றெடுக்கும் பாக்கியத்தை அருளினார். பின்னர் ரேணுகா தேவிக்கும் ஜமதக்கனி முனிவருக்கும் திருமணம் ஆனது. இவர்களுக்கு 4 ஆண் பிள்ளைகள் பிறந்தனர். ரேணுகா தேவி ஒருநாள் தாமரை குளம் சென்று நீராடிவிட்டு, மண்ணால் ஆன குடத்தை வழக்கம்போல செய்ய முயன்றும் முடியவில்லை. கந்தர்வ உருவத்தால் மெய் மறந்து போனார். நீண்ட நேரம் ஆகியும் வராததால் நடந்ததை தனது ஞான கண்ணால் அறிந்த முனிவர் ஜமதக்கனி மனைவி கற்பு தவறியதால் அவரின் தலையை வெட்ட தனது 4 மகன்களுக்கு உத்தரவிடுகிறார். அதில் மூன்று மகன்கள் தாயின் மீது உள்ள பாசத்தால் இதை மறுத்ததால் நான்காவது மகன் தந்தை சொல்லை தட்டாமல் தனது தாயின் தலையை வெட்ட செல்கிறார். இதனை அறிந்த ரேணுகாதேவி ஓடிச் சென்று அருகே இருந்த இடுகாட்டில் உள்ள வீட்டில் தஞ்சம் அடைகிறார்.


குடியாத்தம் கெங்கை அம்மன் சிரசு திருவிழா; லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

கங்கை அம்மன் சிரசு திருவிழா கொண்டாட்டம் 

அவரை வெட்ட நான்காவது மகன் முயற்சித்தபோது இதனை தடுக்க குறுக்கே வந்த வெட்டியானின் மனைவியின் தலையையும் பரசுராமன் வெட்டி விடுகிறார். தனது தாயின் தலையோடு தந்தை ஜமதக்கனி முனிவரை சென்று சந்திக்கிறார் மகன் பரசுராமன். தனது சொல்லை நிறைவேற்றிய மகனை பாராட்டிய முனிவர் ஜமதக்கனி உனக்கு என்ன வரம் வேண்டும் என கேட்கிறார். அதற்கு தனது தாய் மீண்டும் உயிரோடு வேண்டும் என வரம் கேட்கிறார் மகன் பரசுராமன். வரத்தை முனிவர் ஜமதக்கனி அளிக்கவே மிக வேகமாக சென்று அவசரத்தில் வெட்டியானின் வீட்டில் கிடந்த இரண்டு உடல்களில் வெட்டியானின் மனைவி உடலில் ரேணுகா தேவியின் தலையையும், தாய் ரேணுகா தேவியின் உடலில் வெட்டி யானின் மனைவி தலையையும் என மாற்றி மாற்றி தலையை பொறுத்து விடுகிறார் பரசுராமன். இத்தகைய நிகழ்வு குடியாத்தம் கங்கை அம்மன் சிரசு திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

உதவிக்கரம் நீட்டிய ஜெயலலிதா! கருணாநிதிக்கு எதிராகவே பரப்புரை.. மு.க முத்து பற்றிய சுவாரஸ்யம்
உதவிக்கரம் நீட்டிய ஜெயலலிதா! கருணாநிதிக்கு எதிராகவே பரப்புரை.. மு.க முத்து பற்றிய சுவாரஸ்யம்
இந்தியாவில் 2036 ஒலிம்பிக் போட்டிகள்.. அமித் ஷா சொன்ன முக்கிய தகவல்
இந்தியாவில் 2036 ஒலிம்பிக் போட்டிகள்.. அமித் ஷா சொன்ன முக்கிய தகவல்
என்னை கொல்ல சதி.. மதுரை ஆதீனம் தொடர்பான வழக்கில் முன் ஜாமின் உத்தரவில் என்ன உள்ளது ?
என்னை கொல்ல சதி.. மதுரை ஆதீனம் தொடர்பான வழக்கில் முன் ஜாமின் உத்தரவில் என்ன உள்ளது ?
எங்கப்பாவும், நானும் தோத்துட்டோம்.. கருணாநிதி பற்றி மு.க.முத்து கூறியது இதுதான்!
எங்கப்பாவும், நானும் தோத்துட்டோம்.. கருணாநிதி பற்றி மு.க.முத்து கூறியது இதுதான்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Annamalai vs EPS |
Congress DMK Alliance | ”2026-ல் கூட்டணி ஆட்சிதான்”புயலை கிளப்பும் காங்கிரஸ் மீண்டும் வெடித்த மோதல்?
Spicejet Flight Women Fight : ’’சீட் பெல்ட் போட முடியாது’’PILOT அறைக்குள் சென்ற பெண்கள்அவசரமாக தரையிறங்கிய விமானம்
NDA Alliance | வெளியேற்றப்படும் OPS, TTV? எடப்பாடியை நம்பும் அமித்ஷா! வெளுத்து வாங்கிய புகழேந்தி
PMK ADMK Alliance | கூட்டணிக்கு அழைத்த EPS ”ஆட்சியில் பங்கு வேண்டும்” செக் வைத்த அன்புமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உதவிக்கரம் நீட்டிய ஜெயலலிதா! கருணாநிதிக்கு எதிராகவே பரப்புரை.. மு.க முத்து பற்றிய சுவாரஸ்யம்
உதவிக்கரம் நீட்டிய ஜெயலலிதா! கருணாநிதிக்கு எதிராகவே பரப்புரை.. மு.க முத்து பற்றிய சுவாரஸ்யம்
இந்தியாவில் 2036 ஒலிம்பிக் போட்டிகள்.. அமித் ஷா சொன்ன முக்கிய தகவல்
இந்தியாவில் 2036 ஒலிம்பிக் போட்டிகள்.. அமித் ஷா சொன்ன முக்கிய தகவல்
என்னை கொல்ல சதி.. மதுரை ஆதீனம் தொடர்பான வழக்கில் முன் ஜாமின் உத்தரவில் என்ன உள்ளது ?
என்னை கொல்ல சதி.. மதுரை ஆதீனம் தொடர்பான வழக்கில் முன் ஜாமின் உத்தரவில் என்ன உள்ளது ?
எங்கப்பாவும், நானும் தோத்துட்டோம்.. கருணாநிதி பற்றி மு.க.முத்து கூறியது இதுதான்!
எங்கப்பாவும், நானும் தோத்துட்டோம்.. கருணாநிதி பற்றி மு.க.முத்து கூறியது இதுதான்!
பக்தர்களுக்கு ஷாக்... திருவண்ணாமலை கோவில் தரிசன கட்டணம் உயர்வு! முழு விவரம்
பக்தர்களுக்கு ஷாக்... திருவண்ணாமலை கோவில் தரிசன கட்டணம் உயர்வு! முழு விவரம்
மதுரை வரதட்சணை கொடுமை வழக்கு – தலைமறைவாக இருந்த காவலர் பூபாலன் கைது!
மதுரை வரதட்சணை கொடுமை வழக்கு – தலைமறைவாக இருந்த காவலர் பூபாலன் கைது!
Railway Board Approval: 4-வது முனையம்; பெரம்பூர் to அம்பத்தூர் 2 புதிய ரயில் பாதைகள்; சூப்பரான ரயில்வே வாரிய அறிவிப்பு
4-வது முனையம்; பெரம்பூர் to அம்பத்தூர் 2 புதிய ரயில் பாதைகள்; சூப்பரான ரயில்வே வாரிய அறிவிப்பு
சுயசார்பு இந்தியா - நாட்டின் பொருளாதார நிலப்பரப்பை மாற்றும் உள்நாட்டு தயாரிப்புகள்..
சுயசார்பு இந்தியா - நாட்டின் பொருளாதார நிலப்பரப்பை மாற்றும் உள்நாட்டு தயாரிப்புகள்..
Embed widget