மேலும் அறிய

Govindavadi Dakshinamoorthy Temple : திருமணத்தடை, கடன் தொல்லை தீர்க்கும் கோவிந்தவாடி தட்சிணாமூர்த்தி.. அரிய கோயில் சிறப்புகள்..

Govindavaadi Dakshinamoorthy Temple : திருமணத்தடை, கடன் தொல்லை தீர்க்கும் கோவிந்தவாடி தட்சிணாமூர்த்தி.. அரிய கோயில் சிறப்புகள் பற்றி தெரிஞ்சுக்கலாம் வாங்க..

இந்து சமயத்தில் நவகிரகங்கள்  மிக முக்கியமானவர்களாக   கருதப்படுகின்றனர்.  ஒரு மனிதனுக்கு  நடக்கக்கூடிய நல்லது கெட்டது அனைத்தும் நவகிரகங்களால் தீர்மானிக்கப்படுவதாக, ஜோதிடர்களும் நம்புகின்றனர். நவகிரகங்களில்  நன்மையை தரும் கிரகமாக ( சுப கிரகம் ) குருபகவான் கருதப்படுகிறார்.

பிரம்மனின்  மானச  மகனான  அங்கீக முனிவருக்கும் , வாசுதாவுக்கும்   குருபகவான் ஏழாவதாக பிறந்ததாக  நம்பப்படுகிறது. மஞ்சள் நிறம்  குரு பகவானுக்கு மிகவும் பிடிக்கும். தேவர்களுக்கு ஆசானாக குரு பகவான் விளங்குவதால்,  இவர் அறிவு, ஞானம்  இவற்றிற்கு மூலவராக விளங்குகிறார். " குரு பார்வை கோடி நன்மை " என கூறுவார்கள் , குரு பகவான் 5 7 9  ஆகிய பார்வை சகல நன்மையும் தரும்,  திருமணம் உள்ளிட்ட யோகங்களை குரு பகவான் அள்ளித் தருவார்.  குரு பகவானின் அருள் இருந்தால்  நினைத்தது நிறைவேறும்  என்பது நம்பிக்கை. சிவனின்  உருவமாக குரு பகவான் பார்க்கப்படுகிறார்.


Govindavadi Dakshinamoorthy Temple : திருமணத்தடை, கடன் தொல்லை தீர்க்கும் கோவிந்தவாடி தட்சிணாமூர்த்தி.. அரிய கோயில் சிறப்புகள்..

காஞ்சிபுரம் கோவிந்தவாடி - தட்சிணாமூர்த்தி திருக்கோயில் ( Govindavadi Agaram Temple )

காஞ்சிபுரம் மாவட்டம்,  காஞ்சிபுரம் அரக்கோணம் சாலையில் கம்மவார்பாளையம் என்ற ஊரிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் கோவிந்தபாடி அகரம் அமைந்துள்ளது. இத்தலத்தில் சிவபெருமானே குருவாகக் காட்சி தந்து மகாவிஷ்ணுவுக்கு உபதேசித்தார்.  என்பது  நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது. கோவிந்தனாகிய திருமால் சிவனைத்துதித்து பாடல்கள் பாடி வழிபட்ட தலம் என்பதால் " கோவிந்தபாடி" என அழைக்கப்பட்டு வந்தது  நாளடைவில் தற்போது அது  கோவிந்தவாடி அகரம் என அழைக்கப்பட்டு வருகிறது. இங்கு தட்சிணாமூர்த்தி பகவான் வீற்றிருந்து,  ‘குரு கோயில்’ என அழைக்கப்படும்  அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் மற்றும் தட்சிணாமூர்த்தி  திருக்கோயில் அமைந்துள்ளது.

இது குரு பரிகார ஸ்தலமாக உள்ளது. இக்கோயில் சிறந்த சைவ - வைணவ - குரு  கோயிலாக  விளங்கி வருகிறது.


Govindavadi Dakshinamoorthy Temple : திருமணத்தடை, கடன் தொல்லை தீர்க்கும் கோவிந்தவாடி தட்சிணாமூர்த்தி.. அரிய கோயில் சிறப்புகள்..

தட்சிணாமூர்த்தி ( Dakshinamurthy Temple Kanchipuram )

தட்சிணாமூர்த்தி மூலவராக வீற்றிருக்கும் ஒரே கோயில். இங்கு வந்து தட்சிணாமூர்த்தியை வணங்கினால், புத்தியில் தெளிவும் காரியத்தில் வெற்றியும் கிடைக்கும். கல்வியில் சிறந்து விளங்கலாம் என்பது ஐதீகம். குருதோஷம் நீங்க  தங்கள் ஜாதகத்திற்கு ஏற்ப பரிகாரம் செய்தால் நன்மை கிடைக்கும் என நம்பப்படுகிறது. கோயில் கருவறையில் சுமார் ஆறடி உயரத்தில் அழகிய திருமேனியராகக் காட்சி தருகிறார் ஸ்ரீதட்சிணாமூர்த்தி. பக்தர்கள் தங்கள் கரங்களாலயே தேங்காயை இரண்டாக உடைத்து அர்ச்சகரிடம் தர, தட்சிணாமூர்த்தி சன்னிதியில் அர்ச்சனை செய்து தருவது இவ்வாலய சிறப்பு. இங்கு வழிபடுவோருக்கு தடைகள் நீங்கி உடனே திருமணம் கூடி இனிய இல்லறம் அமைகிறது. தோஷங்கள் அகன்று குருபலம் கூடுவதால் பதவி உயர்வு, தொழில் சிறப்பு கிட்டுகின்றன.


Govindavadi Dakshinamoorthy Temple : திருமணத்தடை, கடன் தொல்லை தீர்க்கும் கோவிந்தவாடி தட்சிணாமூர்த்தி.. அரிய கோயில் சிறப்புகள்..

 தல வரலாறு : ( govindavadi guru temple history in tamil )

முன்பொரு காலத்தில்  குபன் என்ற அரசனுக்கும், ததீசி என்ற முனிவருக்கும் பகை இருந்ததாக கூறப்படுகிறது,  இதனை அடுத்து திருமால் இடம் முனிவரிடம்   தன்னை காக்குமாறு  வேண்டிக் கொள்கிறார். இதனை அடுத்து திருமால் ,  பயன்படுத்தி முனிவரை அளிக்க முற்படுகிறார்.  அப்பொழுது முனிவரின் வஜ்ர உடலை  தாக்க முடியாமல் சர்க்கரை ஆயுதம்  தோல்வியை தழுவுகிறது.

Govindavadi Dakshinamoorthy Temple : திருமணத்தடை, கடன் தொல்லை தீர்க்கும் கோவிந்தவாடி தட்சிணாமூர்த்தி.. அரிய கோயில் சிறப்புகள்..

இதனை அடுத்து சிவபெருமானிடம், சலந்தாசுரனை அளித்தபோது உருவான சக்கரத்தை கேட்டு பெறலாம் என திருமால்  முடிவெடுக்கிறார். அப்பொழுது காஞ்சி மாநகரில் சிவனை வழிபாடு மேற்கொண்டால் சக்கரம் கிடைக்கும் என  திருமாலுக்கு தேவர்கள் அறிவுரை கூறுகின்றனர்.  இதன் அடிப்படையில்  தேகம் முழுவதும் விபூதி இட்டு ,ருத்ராட்ச மாலை  அணிந்து,  தனி தீர்த்தம் ஒன்றை உருவாக்கி சிவபெருமானை வழிபாடு செய்து வந்துள்ளார். இதனை அடுத்து, சிவபெருமான் திருமால் முன் தோன்றி சக்கரத்தை கொடுத்தார்  என்பது தல புராணமாக உள்ளது தல புராணமாக உள்ளது.

நன்மைகள் என்னென்ன ?

இங்கு குருவை வழிபட்டால்  உயர் பதவிகள் கிடைக்கும்.  திருமணம் யோகம் கைகூடும்  செல்வ செழிப்பு மேலோங்கும்.  மன நிம்மதி  கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். கடன் தொல்லை தீரும்.  தீபம் ஏற்றி தேங்காய் உடைத்து வழிபட்டால்,  தேங்காய் உடைவது போல் துன்பங்கள் மறைந்து,  தீபம்  எரிவதைப் போல் வாழ்க்கை பிரகாசமாகும் என்பது நம்பிக்கையாக உள்ளது


Govindavadi Dakshinamoorthy Temple : திருமணத்தடை, கடன் தொல்லை தீர்க்கும் கோவிந்தவாடி தட்சிணாமூர்த்தி.. அரிய கோயில் சிறப்புகள்..

திறந்திருக்கும் நேரம் ( Dakshinamurthy Temple Kanchipuram - Timing )

தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும், வியாழக்கிழமை காலை 5 மணி முதல் தொடர்ச்சியாக இரவு 9 மணி .

அமைவிடத்திற்கு செல்லும் வழி ( Dakshinamurthy Temple Kanchipuram - Address)

காஞ்சிபுரத்திலிருந்து அரக்கோணம்   சாலையில் 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.  அருகில் இருக்கும் ரயில் நிலையம் திருமால்பூர் ரயில் நிலையம் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.  திருமால்பூரில் இருந்து   வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஷேர் ஆட்டோக்கள் கிடைக்கின்றன.  காஞ்சிபுரத்திலிருந்து அரக்கோணம் செல்லும் பேருந்துகளில் செல்லலாம்.  அரக்கோணத்தில் இருந்து வருபவர்கள் அரக்கோணத்தில் இருந்து காஞ்சிபுரம் வரும் பேருந்துகளில் வரலாம். 

தலைப்பு செய்திகள்

இருக்கண்குடி மாரியம்மன் கோயிலில் ரூ.23.67 கோடி வசதிகள் திறப்பு: பக்தர்கள் மகிழ்ச்சி!
இருக்கண்குடி மாரியம்மன் கோயிலில் ரூ.23.67 கோடி வசதிகள் திறப்பு: பக்தர்கள் மகிழ்ச்சி!
அண்ணன், தம்பிக்கு ராக்கி கட்ட முடியாதா? - கவலை வேண்டாம் போஸ்ட் ஆபிஸின் புதிய ஆஃபர்கள்.. இப்பவே புக் பண்ணுங்க
அண்ணன், தம்பிக்கு ராக்கி கட்ட முடியாதா? - கவலை வேண்டாம் போஸ்ட் ஆபிஸின் புதிய ஆஃபர்கள்.. இப்பவே புக் பண்ணுங்க
புனிதப்பயணம் மேற்கொள்ள 5000 ரூபாய் அரசு மானியம்: விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் இதோ...
புனிதப்பயணம் மேற்கொள்ள 5000 ரூபாய் அரசு மானியம்: விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் இதோ...
வளையல்களால் மூழ்கிய வல்லக்கோட்டை அம்மன் சந்நிதி! சிலிர்க்க வைக்கும் ஆடிப்பூரம் வைபவம்! 
வளையல்களால் மூழ்கிய வல்லக்கோட்டை அம்மன் சந்நிதி! சிலிர்க்க வைக்கும் ஆடிப்பூரம் வைபவம்! 

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
Trump Praises India: “அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
“அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
Yamaha Scooter Launch: ஆக்டிவாவுக்கு ஆப்பு கன்பார்ம்.! ஃபாசினோ, ரேZR ஹைப்ரிட்களின் 2026 பதிப்பை இறக்கிய யமாஹா; விலை என்ன.?
ஆக்டிவாவுக்கு ஆப்பு கன்பார்ம்.! ஃபாசினோ, ரேZR ஹைப்ரிட்களின் 2026 பதிப்பை இறக்கிய யமாஹா; விலை என்ன.?
Trump on Hormuz: ''ஹார்முஸ் அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது''; மீண்டும் ஈரானை சீண்டும் ட்ரம்ப்
''ஹார்முஸ் அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது''; மீண்டும் ஈரானை சீண்டும் ட்ரம்ப்
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
Embed widget