மேலும் அறிய

Govindavadi Dakshinamoorthy Temple : திருமணத்தடை, கடன் தொல்லை தீர்க்கும் கோவிந்தவாடி தட்சிணாமூர்த்தி.. அரிய கோயில் சிறப்புகள்..

Govindavaadi Dakshinamoorthy Temple : திருமணத்தடை, கடன் தொல்லை தீர்க்கும் கோவிந்தவாடி தட்சிணாமூர்த்தி.. அரிய கோயில் சிறப்புகள் பற்றி தெரிஞ்சுக்கலாம் வாங்க..

இந்து சமயத்தில் நவகிரகங்கள்  மிக முக்கியமானவர்களாக   கருதப்படுகின்றனர்.  ஒரு மனிதனுக்கு  நடக்கக்கூடிய நல்லது கெட்டது அனைத்தும் நவகிரகங்களால் தீர்மானிக்கப்படுவதாக, ஜோதிடர்களும் நம்புகின்றனர். நவகிரகங்களில்  நன்மையை தரும் கிரகமாக ( சுப கிரகம் ) குருபகவான் கருதப்படுகிறார்.

பிரம்மனின்  மானச  மகனான  அங்கீக முனிவருக்கும் , வாசுதாவுக்கும்   குருபகவான் ஏழாவதாக பிறந்ததாக  நம்பப்படுகிறது. மஞ்சள் நிறம்  குரு பகவானுக்கு மிகவும் பிடிக்கும். தேவர்களுக்கு ஆசானாக குரு பகவான் விளங்குவதால்,  இவர் அறிவு, ஞானம்  இவற்றிற்கு மூலவராக விளங்குகிறார். " குரு பார்வை கோடி நன்மை " என கூறுவார்கள் , குரு பகவான் 5 7 9  ஆகிய பார்வை சகல நன்மையும் தரும்,  திருமணம் உள்ளிட்ட யோகங்களை குரு பகவான் அள்ளித் தருவார்.  குரு பகவானின் அருள் இருந்தால்  நினைத்தது நிறைவேறும்  என்பது நம்பிக்கை. சிவனின்  உருவமாக குரு பகவான் பார்க்கப்படுகிறார்.


Govindavadi Dakshinamoorthy Temple :  திருமணத்தடை, கடன் தொல்லை  தீர்க்கும் கோவிந்தவாடி தட்சிணாமூர்த்தி.. அரிய கோயில் சிறப்புகள்..

காஞ்சிபுரம் கோவிந்தவாடி - தட்சிணாமூர்த்தி திருக்கோயில் ( Govindavadi Agaram Temple )

காஞ்சிபுரம் மாவட்டம்,  காஞ்சிபுரம் அரக்கோணம் சாலையில் கம்மவார்பாளையம் என்ற ஊரிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் கோவிந்தபாடி அகரம் அமைந்துள்ளது. இத்தலத்தில் சிவபெருமானே குருவாகக் காட்சி தந்து மகாவிஷ்ணுவுக்கு உபதேசித்தார்.  என்பது  நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது. கோவிந்தனாகிய திருமால் சிவனைத்துதித்து பாடல்கள் பாடி வழிபட்ட தலம் என்பதால் " கோவிந்தபாடி" என அழைக்கப்பட்டு வந்தது  நாளடைவில் தற்போது அது  கோவிந்தவாடி அகரம் என அழைக்கப்பட்டு வருகிறது. இங்கு தட்சிணாமூர்த்தி பகவான் வீற்றிருந்து,  ‘குரு கோயில்’ என அழைக்கப்படும்  அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் மற்றும் தட்சிணாமூர்த்தி  திருக்கோயில் அமைந்துள்ளது.

இது குரு பரிகார ஸ்தலமாக உள்ளது. இக்கோயில் சிறந்த சைவ - வைணவ - குரு  கோயிலாக  விளங்கி வருகிறது.


Govindavadi Dakshinamoorthy Temple :  திருமணத்தடை, கடன் தொல்லை  தீர்க்கும் கோவிந்தவாடி தட்சிணாமூர்த்தி.. அரிய கோயில் சிறப்புகள்..

தட்சிணாமூர்த்தி ( Dakshinamurthy Temple Kanchipuram )

தட்சிணாமூர்த்தி மூலவராக வீற்றிருக்கும் ஒரே கோயில். இங்கு வந்து தட்சிணாமூர்த்தியை வணங்கினால், புத்தியில் தெளிவும் காரியத்தில் வெற்றியும் கிடைக்கும். கல்வியில் சிறந்து விளங்கலாம் என்பது ஐதீகம். குருதோஷம் நீங்க  தங்கள் ஜாதகத்திற்கு ஏற்ப பரிகாரம் செய்தால் நன்மை கிடைக்கும் என நம்பப்படுகிறது. கோயில் கருவறையில் சுமார் ஆறடி உயரத்தில் அழகிய திருமேனியராகக் காட்சி தருகிறார் ஸ்ரீதட்சிணாமூர்த்தி. பக்தர்கள் தங்கள் கரங்களாலயே தேங்காயை இரண்டாக உடைத்து அர்ச்சகரிடம் தர, தட்சிணாமூர்த்தி சன்னிதியில் அர்ச்சனை செய்து தருவது இவ்வாலய சிறப்பு. இங்கு வழிபடுவோருக்கு தடைகள் நீங்கி உடனே திருமணம் கூடி இனிய இல்லறம் அமைகிறது. தோஷங்கள் அகன்று குருபலம் கூடுவதால் பதவி உயர்வு, தொழில் சிறப்பு கிட்டுகின்றன.


Govindavadi Dakshinamoorthy Temple :  திருமணத்தடை, கடன் தொல்லை  தீர்க்கும் கோவிந்தவாடி தட்சிணாமூர்த்தி.. அரிய கோயில் சிறப்புகள்..

 தல வரலாறு : ( govindavadi guru temple history in tamil )

முன்பொரு காலத்தில்  குபன் என்ற அரசனுக்கும், ததீசி என்ற முனிவருக்கும் பகை இருந்ததாக கூறப்படுகிறது,  இதனை அடுத்து திருமால் இடம் முனிவரிடம்   தன்னை காக்குமாறு  வேண்டிக் கொள்கிறார். இதனை அடுத்து திருமால் ,  பயன்படுத்தி முனிவரை அளிக்க முற்படுகிறார்.  அப்பொழுது முனிவரின் வஜ்ர உடலை  தாக்க முடியாமல் சர்க்கரை ஆயுதம்  தோல்வியை தழுவுகிறது.

Govindavadi Dakshinamoorthy Temple :  திருமணத்தடை, கடன் தொல்லை  தீர்க்கும் கோவிந்தவாடி தட்சிணாமூர்த்தி.. அரிய கோயில் சிறப்புகள்..

இதனை அடுத்து சிவபெருமானிடம், சலந்தாசுரனை அளித்தபோது உருவான சக்கரத்தை கேட்டு பெறலாம் என திருமால்  முடிவெடுக்கிறார். அப்பொழுது காஞ்சி மாநகரில் சிவனை வழிபாடு மேற்கொண்டால் சக்கரம் கிடைக்கும் என  திருமாலுக்கு தேவர்கள் அறிவுரை கூறுகின்றனர்.  இதன் அடிப்படையில்  தேகம் முழுவதும் விபூதி இட்டு ,ருத்ராட்ச மாலை  அணிந்து,  தனி தீர்த்தம் ஒன்றை உருவாக்கி சிவபெருமானை வழிபாடு செய்து வந்துள்ளார். இதனை அடுத்து, சிவபெருமான் திருமால் முன் தோன்றி சக்கரத்தை கொடுத்தார்  என்பது தல புராணமாக உள்ளது தல புராணமாக உள்ளது.

நன்மைகள் என்னென்ன ?

இங்கு குருவை வழிபட்டால்  உயர் பதவிகள் கிடைக்கும்.  திருமணம் யோகம் கைகூடும்  செல்வ செழிப்பு மேலோங்கும்.  மன நிம்மதி  கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். கடன் தொல்லை தீரும்.  தீபம் ஏற்றி தேங்காய் உடைத்து வழிபட்டால்,  தேங்காய் உடைவது போல் துன்பங்கள் மறைந்து,  தீபம்  எரிவதைப் போல் வாழ்க்கை பிரகாசமாகும் என்பது நம்பிக்கையாக உள்ளது


Govindavadi Dakshinamoorthy Temple :  திருமணத்தடை, கடன் தொல்லை  தீர்க்கும் கோவிந்தவாடி தட்சிணாமூர்த்தி.. அரிய கோயில் சிறப்புகள்..

திறந்திருக்கும் நேரம் ( Dakshinamurthy Temple Kanchipuram - Timing )

தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும், வியாழக்கிழமை காலை 5 மணி முதல் தொடர்ச்சியாக இரவு 9 மணி .

அமைவிடத்திற்கு செல்லும் வழி ( Dakshinamurthy Temple Kanchipuram - Address)

காஞ்சிபுரத்திலிருந்து அரக்கோணம்   சாலையில் 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.  அருகில் இருக்கும் ரயில் நிலையம் திருமால்பூர் ரயில் நிலையம் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.  திருமால்பூரில் இருந்து   வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஷேர் ஆட்டோக்கள் கிடைக்கின்றன.  காஞ்சிபுரத்திலிருந்து அரக்கோணம் செல்லும் பேருந்துகளில் செல்லலாம்.  அரக்கோணத்தில் இருந்து வருபவர்கள் அரக்கோணத்தில் இருந்து காஞ்சிபுரம் வரும் பேருந்துகளில் வரலாம். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather: டிட்வா கதை ஓவர்? சென்னையில் இயல்பு நிலை? தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை
TN Weather: டிட்வா கதை ஓவர்? சென்னையில் இயல்பு நிலை? தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை
Putin Visit India: இன்று இந்தியா வரும் புதின் - டெல்லியில் எலைட் கமாண்டோக்கள், ஸ்நைப்பர், ஆரஸ் செனட் கார் - 40 ரஷ்யர்கள்
Putin Visit India: இன்று இந்தியா வரும் புதின் - டெல்லியில் எலைட் கமாண்டோக்கள், ஸ்நைப்பர், ஆரஸ் செனட் கார் - 40 ரஷ்யர்கள்
Thiruparankundram Deepam Issue: கார்த்திகை தீபம்; பதற்ற பூமியாக மாறிய திருப்பரங்குன்றம்; 144 தடை உத்தரவு - நடந்தது என்ன.?
கார்த்திகை தீபம்; பதற்ற பூமியாக மாறிய திருப்பரங்குன்றம்; 144 தடை உத்தரவு - நடந்தது என்ன.?
TN School Leave: கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

OPS Delhi Visit |20 நிமிட பேச்சுவார்த்தை!DEAL-ஐ முடித்த குருமூர்த்திOPS அமித்ஷா சந்திப்பின் பின்னணி?
OPS Delhi Visit | OPS டெல்லி விசிட்!தனிக்கட்சியா? பாஜகவா?அரசியலில் திடீர் ட்விஸ்ட்
சென்னையில் மழை தாண்டவாம் டிட்வாவின் LATEST UPDATE எப்போது மழை நிற்கும்? | TN Rain Ditwah Cyclone
திண்டுக்கல் வந்த தனுஷ் சூழ்ந்த நூற்றுக்கணக்கான ரசிகர்கள் SPOT-க்கு ஓடோடி வந்த போலீஸ் | Dhanush

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather: டிட்வா கதை ஓவர்? சென்னையில் இயல்பு நிலை? தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை
TN Weather: டிட்வா கதை ஓவர்? சென்னையில் இயல்பு நிலை? தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை
Putin Visit India: இன்று இந்தியா வரும் புதின் - டெல்லியில் எலைட் கமாண்டோக்கள், ஸ்நைப்பர், ஆரஸ் செனட் கார் - 40 ரஷ்யர்கள்
Putin Visit India: இன்று இந்தியா வரும் புதின் - டெல்லியில் எலைட் கமாண்டோக்கள், ஸ்நைப்பர், ஆரஸ் செனட் கார் - 40 ரஷ்யர்கள்
Thiruparankundram Deepam Issue: கார்த்திகை தீபம்; பதற்ற பூமியாக மாறிய திருப்பரங்குன்றம்; 144 தடை உத்தரவு - நடந்தது என்ன.?
கார்த்திகை தீபம்; பதற்ற பூமியாக மாறிய திருப்பரங்குன்றம்; 144 தடை உத்தரவு - நடந்தது என்ன.?
TN School Leave: கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
IND vs SA 2nd ODI: ஷாக்கான இந்திய அணி.. திருப்பி அடித்த தென்னாப்பிரிக்கா.. 2வது ஒருநாள் போட்டியில் அபார வெற்றி!
IND vs SA 2nd ODI: ஷாக்கான இந்திய அணி.. திருப்பி அடித்த தென்னாப்பிரிக்கா.. 2வது ஒருநாள் போட்டியில் அபார வெற்றி!
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Joy Crizildaa Vs Rangaraj: டேய் தகப்பா.! மாதம்பட்டி ரங்கராஜை மாட்டிவிட்ட பச்சிளம் குழந்தை - ஜாய் கிரிசில்டா பதிவ பாருங்க
டேய் தகப்பா.! மாதம்பட்டி ரங்கராஜை மாட்டிவிட்ட பச்சிளம் குழந்தை - ஜாய் கிரிசில்டா பதிவ பாருங்க
IND Vs SA 2nd ODI: கோலி, கெய்க்வாட் அபாரம்; 359 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா - எட்டுவார்களா பவுமா பாய்ஸ்.?
கோலி, கெய்க்வாட் அபாரம்; 359 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா - எட்டுவார்களா பவுமா பாய்ஸ்.?
Embed widget