மேலும் அறிய

இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய தர்ப்பணம் கொடுத்த தன்னார்வலர்கள் - தருமபுரியில் நெகிழ்ச்சி

தை அமாவாசையை ஒட்டி காவிரி கரையில் அமர்ந்து வாழை இலை, பச்சரிசி , தேங்காய், பழம், காய்கறி, மளிகைப் பொருள்கள் உள்ளிட்டவற்றை வைத்து பூஜை செய்து ஆதரவற்று இறந்தவர்களை நினைத்து, திதி கொடுத்து வழிபட்டனர்.

தருமபுரி பகுதியில் ஆதரவற்ற சடலங்களை நல்லடக்கம் செய்து வரும் மை தருமபுரி தன்னார்வ அமைப்பினர், இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய தை அமாவாசையொட்டி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தர்ப்பணம் கொடுத்தனர்.
 
தருமபுரியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக மை தருமபுரி என்ற தன்னார்வ அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த தன்னார்வ அமைப்பின் நிறுவனர் சதீஷ்குமார் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் குழுவாக இணைந்து மரக்கன்றுகள் நடுதல், ஆதரவற்றவரை காப்பகத்தில் சேர்த்தல், தினமும் அரசு மருத்துவமனை முன்பு மதிய உணவு வழங்குதல், பூங்கா உள்ளிட்ட பொது இடங்களை பராமரித்தல் போன்ற பல்வேறு சேவைகளை பத்தாண்டுகளாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த கொரோனா காலத்தில் ஆதரவற்ற நிலையில், பலர் உயிரிழந்து, சடலங்கள் அடக்கம் செய்யப்படாமல் மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டிருந்தது. இதனை காவல் துறையினர் உதவியுடன் ஆதரவற்ற நிலையில் கிடந்த சடலங்களை மை தருமபுரி இலவச ஊர்தி சேவை என்ற பெயரில் நல்லடக்கம் செய்து வருகின்றனர். இதுவரை தருமபுரி மாவட்டம் முழுவதும் வயது மூப்பு, விபத்து உள்ளிட்டவைகளில் உயிரிழந்த முதியவர், குழந்தைகள் என 80 ஆதரவற்ற சடலங்களை நல்லடக்கம் செய்து, உறவினர்கள் செய்யும் சடங்குகளை செய்து வருகின்றனர்.

இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய தர்ப்பணம் கொடுத்த தன்னார்வலர்கள் - தருமபுரியில் நெகிழ்ச்சி
 
இந்நிலையில் தை அமாவாசை நாட்களில் காவிரியில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தால் குடும்பத்தில் வளம் செழிக்கும் என்பது ஐதீகம். இதனால் தை அமாவாசை தினத்தில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஏராளமானோர் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். ஆனால் இது போன்ற ஆதரவற்ற நிலையில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் யார் என்று தெரியாத நிலையில், தர்ப்பணம் கொடுக்க முடியாது என்பதால், மை தருமபுரி தன்னார்வ அமைப்பினர், இதுவரை 80 உடல்களை நல்லடக்கம் செய்துள்ளதால், தை அமாவாசையை ஒட்டி காவிரி கரையில் அமர்ந்து வாழை இலை, பச்சரிசி , தேங்காய், பழம், காய்கறி, மளிகைப் பொருள்கள் உள்ளிட்டவற்றை வைத்து பூஜை செய்து ஆதரவற்று இறந்தவர்களை நினைத்து, திதி கொடுத்து வழிபட்டனர். தொடர்ந்து பூஜை செய்த பொருட்களை காவிரி ஆற்றில் மூழ்கி, புனித நீராடி அங்குள்ள காவிரி அம்மனை வழிபட்டனர். மேலும் குடும்பம் செழிக்க வேண்டும் என்பதற்காக முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வரும் நிலையில், சிலர் தங்களது முன்னோர்களை இறந்த பின் நினைத்துக் கூட பார்ப்பதில்லை. ஆனால் ஆதரவற்ற நிலையில் இறந்து கிடக்கின்ற சடலங்களை உறவினர்களை போன்று நல்லடக்கம் செய்து, இறுதிச் சடங்குகளை செய்து முடிப்பதோடு நிறுத்தி விடாமல், அவர்களுக்கு தை அமாவாசை நாளில் தர்ப்பணம் கொடுத்து பூஜை செய்து வழிபட்டு வரும் மை தருமபுரி தன்னார்வ அமைப்பினரின் செயலை பொதுமக்கள் மற்றும் சமூக பாராட்டி வாழ்த்தி வருகின்றனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Amit Shah in Tamil Nadu: தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Amit Shah in Tamil Nadu: தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Nissan Compact MPV: ரூ.6 லட்சத்துக்கே.. நிசானின் பெரிய புதிய 7 சீட்டர் கார் - என்னென்ன இருக்கு? டிச.18 லாஞ்ச்
Nissan Compact MPV: ரூ.6 லட்சத்துக்கே.. நிசானின் பெரிய புதிய 7 சீட்டர் கார் - என்னென்ன இருக்கு? டிச.18 லாஞ்ச்
சபரிமலை மண்டல பூஜை: தரிசன முன்பதிவு துவக்கம்! முக்கிய அறிவிப்பு வெளியீடு! | பக்தர்கள் கவனத்திற்கு
சபரிமலை மண்டல பூஜை: தரிசன முன்பதிவு துவக்கம்! முக்கிய அறிவிப்பு வெளியீடு! | பக்தர்கள் கவனத்திற்கு
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Embed widget