மேலும் அறிய

வாழ்வில் உண்டாகும் அழுத்தங்களில் இருந்து விடுபட உதவும் சாரங்கபாணி பெருமாளின் அழகிய தரிசனம்

வாழ்வின் அழுத்தங்களில் இருந்து விடுபட கும்பகோணம் சாரங்கபாணி பெருமாளின் அழகிய தரிசனம்.

வாழ்வில் உண்டாகும் அழுத்தங்களில் இருந்து விடுபட சுற்றுலா என்பது பெரிய விடுதலையாக அமையும் என்பதில் யாருக்கும்  துளியளவும் சந்தேகமே இல்லை. கும்பகோணம் சாரங்கபாணி பெருமாளின் அழகிய தரிசனம் மனதை குதூகலிக்க வைக்கும்.

வாழ்க்கையும் நம்மை சுற்றியுள்ள அழகான உலகமும் அதில் அடங்கியுள்ள வியப்புக்களும் எப்போதும் மாறாதவை. நாம் வாழும் சமூகம் எப்போதும் அதிசயங்கள் நிறைந்தவைதான். மாறும் உலகில் உலகத்தில் உள்ள புதுமைகளையும், அதிசயங்களையும் பார்த்து ரசிப்பது என்பது நமக்கு கிடைத்த வரப்பிரசாதம் என்றால் மிகையில்லை.

கிணற்று தவளைகளாகவும், தேங்கிய குட்டை போன்றும் இருப்பது எதற்கு. ஆற்று நீர் ஓடும் போதுதானே வாழ்வில் அமைந்துள்ள இரசனையை ரசிக்க முடியும். அட நம்மை சுற்றி இப்படியும் இடங்கள் இருக்கிறதா என்பதை உணர, தெரிந்து கொள்ள வைப்பதுதான் சுற்றுலா. மனிதர்கள் தங்களுக்கு கிடைக்கும் ஓய்வை மனதிற்கு இனிமையாக மாற்றிக் கொள்ள தாங்கள் வாழ்கின்ற சொந்த வாழ்விடங்களில் இருந்து வெளி இடங்களுக்கு அல்லது வெளி நாடுகளுக்கு சென்று அங்குள்ள இயற்கை சூழலை இரசிக்கவும் புதிய விஷயங்களை தேடி சென்று பார்ப்பதுதான் சுற்றுலா.

ஒவ்வொரு இடத்திற்கும், ஊருக்கும் ஏதாவது பெருமையும், புகழும் நிச்சயம் இருக்கிறது. அதுவும் தென்னிந்தியாவில் சுற்றுலா செல்ல விரும்புபவர்களுக்கு தஞ்சை மாவட்டம்தான் முதலில் நினைவுக்கு வரும். சுற்றுலா என்பதே மனிதர்கள் தங்களை புத்துணர்வு அடைந்து கொள்ள செய்யும் ஒரு டிராவல்தானே.

இன்று மனித வாழ்க்கை வெகுவாக மாறி விட்டது. வாழ்வின் அதிகளவான காலம் பணத்தின் பின்னால் ஓட வேண்டியுள்ளது. வாழ்க்கையில் சுமைகள், சோகங்கள் என பல அழுத்தங்களோடு மனிதன் ஓடிக் கொண்டிருப்பதனால் மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை விரக்தியை உண்டாக்கி விடும். இதிலிருந்து விடுபட சுற்றுலா உதவுகிறது. சுற்றுலா என்பது அனைவருக்கும் பொழுது போக்கும் இடம் என்று இல்லை. அந்தந்த ஊர்களின் பெருமைகளை நாம் உணர்ந்து கொள்ளும் சிறந்த தருணம்தான்.

அந்த வகையில் தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலங்கள், வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் சுற்றுலாவாக வந்தால் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வந்துவிட்டுதான் செல்வார்கள். இங்கு வீர சயனத்தில் பெருமாள் அருள்பாலிக்கிறார். இப்படி உலக பெருமை வாய்ந்த ஸ்ரீரங்கம் பெருமாள் கோயிலுக்கு பின்னர் சயன கோலத்தில் அதாவது உத்தான சயனம் என்று அழைக்கப்படும் கோலத்தில் பெருமாள் அருள்பாலிக்கும் இடம் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில்தான்.

ஆராவமுதனைக் காண கண் கோடி வேண்டும் என்பார்கள். அவரின் அழகில் சொக்கிப் போவோம். சாரங்கபாணியின் சந்நிதியில் நின்று வேண்டிக்கொண்டாலே, நம் கவலைகளும் துக்கங்களும் சடுதியில் கரைந்து காணாமல் போகும் என்கிறார்கள் பக்தர்கள். கோயில் நகரம் எனும் பெருமைக்கு உரியது கும்பகோணம். சைவக் கோயில்களும் ஏராளம். வைணவக் கோயில்களும் தாராளமோ தாராளம். இங்குள்ள ஆலயங்களில், மிகப்பிரமாண்டமான ஆலயமாகத் திகழ்கிறது ஸ்ரீசாரங்கபாணி கோயில். பெருமாளுக்கு ஸ்ரீசாரங்கபாணி. ஆராவமுதன் என்று பெயர். மூலவர் சாரங்கபாணி உத்தான சயனத்தில், கிடந்த கோலத்தில் கிழக்கு நோக்கியபடி அருள்பாலிக்கிறார். அதனால்தான் உத்தான சாயி என்ற பெயரும் பெருமாளுக்கு உண்டு.


வாழ்வில் உண்டாகும் அழுத்தங்களில் இருந்து விடுபட உதவும் சாரங்கபாணி பெருமாளின் அழகிய தரிசனம்

கும்பகோணம் ஸ்ரீசாரங்கபாணி பெருமாள் கோயிலுக்கு திருமழிசை ஆழ்வார் வந்து தரிசித்து வழிபட்டார். அப்போது பெருமாள் சயனத்தில், தூங்கிய நிலையில் இருந்தாராம். இதைப் பார்த்துவிட்டு பதறிப் போனார் திருமழிசை ஆழ்வார். அவர் தனது பதற்றத்தை பாட்டாக பாட திருமழிசை ஆழ்வாருக்கு பதில் கூறும் விதமாகக் கிடந்த கோலத்தில் இருந்தபடியே எழுந்த கோலத்தில் காட்சி தருகிறார். இதைத்தான் உத்தான சயனம் எனப்படுகிறது என்கிறார்கள்.

கும்பகோணத்தில் இன்றைக்கும் சாரங்கபாணி கோயில் என்றால்தான் எல்லோருக்கும் தெரியும். அவரது மற்றொரு பெயரான ஆராவமுதன் என்று அழைத்தவர் நம்மாழ்வார். ‘உண்டாலும் தெவிட்டாத அமுதுக்கு ஆரா அமுது’ என்று பெயர்க்காரணம் சொல்கிறது புராணம்.

ஆராவமுதனைக் காண கண் கோடி வேண்டும் என்பார்கள். அவரின் அழகில் சொக்கிப் போவோம். சாரங்கபாணியின் சந்நிதியில் நின்று வேண்டிக்கொண்டாலே, நம் கவலைகளும் துக்கங்களும் சடுதியில் கரைந்து காணாமல் போகும் என்கிறார்கள் பக்தர்களும், சுற்றுலாப்பயணிகளும். இதனால்தான் ஸ்ரீரங்கம் வருபவர்கள் அடுத்ததாக கும்பகோணத்திற்கு வந்து இத்தல பெருமாள் பார்த்து தரிசனம் செய்து அவரது அழகிய திருக்கோலத்தை கண்டு சொக்கிப்போகின்றனர்.

தலைப்பு செய்திகள்

சோழநாட்டு திருச்செந்தூர் திருவிடைக்கழியில் வைகாசி சதயத் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்! 
சோழநாட்டு திருச்செந்தூர் திருவிடைக்கழியில் வைகாசி சதயத் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்! 
மயிலாய் மாறிய அன்னை வழிபட்ட தலம்: மின்விளக்கு ஒளியில் மிதந்த மயூரநாதர் - கண்கொள்ளாக் காட்சி!
மயிலாய் மாறிய அன்னை வழிபட்ட தலம்: மின்விளக்கு ஒளியில் மிதந்த மயூரநாதர் - கண்கொள்ளாக் காட்சி!
வெறும் சைக்கிளில் 12 ஜோதிர்லிங்க தரிசனம்! - 14 மாநிலங்கள் கடந்து திருப்பத்தூர் சிவபக்தர் செய்த அசாத்திய சாதனை
வெறும் சைக்கிளில் 12 ஜோதிர்லிங்க தரிசனம்! - 14 மாநிலங்கள் கடந்து திருப்பத்தூர் சிவபக்தர் செய்த அசாத்திய சாதனை
காஞ்சிபுரம் தேர் திருவிழா: நகருக்குள் வாகனங்களுக்குத் தடை! பொதுமக்கள் கடும் எச்சரிக்கை!
காஞ்சிபுரம் தேர் திருவிழா: நகருக்குள் வாகனங்களுக்குத் தடை! பொதுமக்கள் கடும் எச்சரிக்கை!

வீடியோ

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள்; முக்கிய பதிவை வெளியிட்ட முதல்வர் விஜய்!
CM Vijay: கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள்; முக்கிய பதிவை வெளியிட்ட முதல்வர் விஜய்!
ஸ்கூலே முடிக்கலை, அதுக்குள்ளயா? ஐஐஎம்மில் வைபவ் மாடல்! ஐபிஎல்லில் அசத்தும் சூர்யவன்ஷி!
ஸ்கூலே முடிக்கலை, அதுக்குள்ளயா? ஐஐஎம்மில் வைபவ் மாடல்! ஐபிஎல்லில் அசத்தும் சூர்யவன்ஷி!
TMC Rift: ”கட்சிக்கு நீங்க தான் தலைவர், ஆனா சட்டமன்றத்த நாங்க பாத்துக்குறோம்” மம்தாவுக்கு ஆர்டர் போடும் MLAக்கள்
”கட்சிக்கு நீங்க தான் தலைவர், ஆனா சட்டமன்றத்த நாங்க பாத்துக்குறோம்” மம்தாவுக்கு ஆர்டர் போடும் MLAக்கள்
Central Minister on Hormuz: ஹார்முஸில் இப்போது ஒரே ஒரு இந்திய கப்பல் தான் வருகிறது.! ABP மாநாட்டில் மத்திய அமைச்சர் ஷாக் தகவல்
ஹார்முஸில் இப்போது ஒரே ஒரு இந்திய கப்பல் தான் வருகிறது.! ABP மாநாட்டில் மத்திய அமைச்சர் ஷாக் தகவல்
Trump New Tariff: மீண்டும் வரி ஆட்டத்தை தொடங்கிய ட்ரம்ப்; 60 நாடுகள் மீது கூடுதலாக 12.5%; US பரிந்துரையால் அதிர்ச்சி
மீண்டும் வரி ஆட்டத்தை தொடங்கிய ட்ரம்ப்; 60 நாடுகள் மீது கூடுதலாக 12.5%; US பரிந்துரையால் அதிர்ச்சி
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.! யார் யார் எந்த மாவட்டத்திற்கு.? இதோ முழு லிஸ்ட்
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.! யார் யார் எந்த மாவட்டத்திற்கு.? இதோ முழு லிஸ்ட்
Inverter Battery Tips: கோடைல இன்வெர்ட்டர் ரொம்ப முக்கியம் கண்ணு.! பேட்டரி வேகமா குறையுதா.? காரணமும், டிப்ஸும் இதோ
கோடைல இன்வெர்ட்டர் ரொம்ப முக்கியம் கண்ணு.! பேட்டரி வேகமா குறையுதா.? காரணமும், டிப்ஸும் இதோ
TN DGP: மக்களை அலறவிடும் குற்றங்கள்..! தினந்தோறும் தொடரும் சோகம் - புதிய டிஜிபி செய்யப்போவது என்ன?
மக்களை அலறவிடும் குற்றங்கள்..! தினந்தோறும் தொடரும் சோகம் - புதிய டிஜிபி செய்யப்போவது என்ன?
Embed widget