மேலும் அறிய

ஆடித் திருவிழா: தலையில் தேங்காய் உடைக்கும் வினோத வழிபாடு! பக்தர்களின் பரவச அனுபவம்!

மகாலட்சுமி அம்மன் முன் கோரிக்கை வைத்து வேண்டுதல் நிறைவேறினால் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்துவதாக வேண்டுதல் வைப்பது வழக்கம்.

ஆடித்திருவிழா சிறப்பு குறித்து கூறும்போது, அது ஆன்மீகத்திலும், சமூகத்திலும், இயற்கையிலும் பல பரிமாணங்களில் சிறப்புடையதாகும். இந்த விழா தமிழ்மன்றத்திற்கும், கிழக்குத்தமிழர் பாரம்பரியத்திற்கும் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.


ஆடித் திருவிழா: தலையில் தேங்காய் உடைக்கும் வினோத வழிபாடு! பக்தர்களின் பரவச அனுபவம்!

ஆடி அமாவாசை, ஆடிப் பெருக்கு, ஆடி கிருத்திகை, ஆண்டாள் திருவிழா போன்றவை இந்த மாதத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. பெண்கள் அம்மனுக்கு  (மாரியம்மன், காளி, கங்கா போன்ற தேவிகளை) விரதமிட்டு பூஜை செய்கிறார்கள். இது பெண்கள் ஆசீர்வாதமும், குடும்ப நலனும் வேண்டும் வழிபாடாகும். ஆடியில் தமிழகத்தில் வானிலைக் கடவுள் “வருணன்” அருளால் பெரும்படியாக மழை பெய்யும். இந்த பருவக்காலத்தில் நதிகள், குளங்கள், வயல்கள் எல்லாம் நீரால் நிரம்பும். இதனைக் கொண்டாடுவதற்காகவே ஆடிப்பெருக்கு எனும் விழா கொண்டாடப்படுகிறது. இயற்கை வளம் பெருகும் அறுவடையின் தொடக்கநிலையை இது குறிக்கிறது.


ஆடித் திருவிழா: தலையில் தேங்காய் உடைக்கும் வினோத வழிபாடு! பக்தர்களின் பரவச அனுபவம்!

ஆடித் திருவிழாவின்போது மாட வீடுகளில் கொலு, பாவை அமைத்தல், ஓவியக்கலை, நாடகங்கள், பாடல்கள், கோலங்கள் போன்ற பாரம்பரியக் கலாச்சாரங்கள் மீண்டும் உயிர் பெறுகின்றன. ஆடிப்பெருக்கு திருவிழாக்கள் நடைபெறுவதில் கிராமப்புறங்களில் தேர், ஆட்டமேளங்கள், கும்மி, கொலாட்டம் போன்ற மக்கள் கலைவிழாக்களும் நடக்கின்றன. ஆடிப்பெருக்கில் இது போன்று பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்ற நிலையில், நத்தம் அருகே ஆடித்திருவிழாவில் பார்க்கவே புல்லரிக்கும் வகையில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் வினோத விழா  நடைபெற்றது. 30க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடனை செலுத்தினர்.


ஆடித் திருவிழா: தலையில் தேங்காய் உடைக்கும் வினோத வழிபாடு! பக்தர்களின் பரவச அனுபவம்!

திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி யூனியன்  கம்பிளியம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட ஆண்டியபட்டியில் குரும்பாகுல அருள்மிகு ஶ்ரீ மகாலெட்சுமி, ஶ்ரீ கருப்புசாமி கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் ஆடித்திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.  2 நாட்கள் மட்டுமே நடைபெறும் இத்திருவிழா நேற்று சாமி சாட்டுதலுடன் துவங்கியது.  திருவிழாவில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக காப்பு கட்டி விரதத்தை துவங்கினர். ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் சிறப்பாக நடைபெறும் இக்கோவில் திருவிழாவின் போது ஆண்கள், பெண்கள், உடல்நிலை சரியில்லாதவர்கள், திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மகாலட்சுமி அம்மன் முன் கோரிக்கை வைத்து வேண்டுதல் நிறைவேறினால் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்துவதாக வேண்டுதல் வைப்பது வழக்கம்.

இந்த ஆண்டும் நடைபெற்று வரும் திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான நேர்த்திக்கடன் வைத்த பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது நேர்த்திக்கடன் வைத்த 30 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவில் முன்பு தரையில் வரிசையாக அமர வைக்கப்பட்டு ”கோவிந்தா கோவிந்தா” என கோஷம் முழங்க பக்தர்கள் தலையில் பூசாரி தேங்காய் உடைத்தார்.  இதில் பழனி,தேனி, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கம்பிளியம்பட்டி, ஆண்டியபட்டி மற்றும் அதன் சுற்று வட்டார கிராம பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
Nepal Gen Z Protest: மீண்டும் களமிறங்கிய Gen Z; நேபாளத்தில் வெடித்த போராட்டம்; கூட்டங்களுக்கு தடை - ஊரடங்கு அமல்
மீண்டும் களமிறங்கிய Gen Z; நேபாளத்தில் வெடித்த போராட்டம்; கூட்டங்களுக்கு தடை - ஊரடங்கு அமல்
Tejashwi Wishes Nitish: “புதிய அரசு வாக்குறுதிகளை பொறுப்புடன் நிறைவேற்றும் என நம்புகிறேன்“; நிதிஷுக்கு தேஜஸ்வி வாழ்த்து
“புதிய அரசு வாக்குறுதிகளை பொறுப்புடன் நிறைவேற்றும் என நம்புகிறேன்“; நிதிஷுக்கு தேஜஸ்வி வாழ்த்து
Joy Crizildaa Vs Rangaraj: அவர கண்டா வரச் சொல்லுங்க.! தைரியம் இருந்தா DNA டெஸ்ட்டுக்கு வாங்க கணவரே.! - ஜாய் கிரிசில்டா
அவர கண்டா வரச் சொல்லுங்க.! தைரியம் இருந்தா DNA டெஸ்ட்டுக்கு வாங்க கணவரே.! - ஜாய் கிரிசில்டா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஜோதிமணி ARREST! தரதரவென இழுத்த POLICE! போராட்டக் களத்தில் விஜயபாஸ்கர்
மாமுல் தராத ஆட்டோக்காரர் ! ஓட ஓட விரட்டிய கும்பல்.. பகீர் கிளப்பும் வீடியோ
’தைரியமா இருங்க’’உடைந்து அழுத தந்தை! ஆறுதல் கூறிய அன்பில் மகேஸ்
T.NAGAR தொகுதி யாருக்கு?பாஜகவின் பலே திட்டம் விட்டுக்கொடுக்குமா அதிமுக? | Chennai | BJP Election Plan

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
Nepal Gen Z Protest: மீண்டும் களமிறங்கிய Gen Z; நேபாளத்தில் வெடித்த போராட்டம்; கூட்டங்களுக்கு தடை - ஊரடங்கு அமல்
மீண்டும் களமிறங்கிய Gen Z; நேபாளத்தில் வெடித்த போராட்டம்; கூட்டங்களுக்கு தடை - ஊரடங்கு அமல்
Tejashwi Wishes Nitish: “புதிய அரசு வாக்குறுதிகளை பொறுப்புடன் நிறைவேற்றும் என நம்புகிறேன்“; நிதிஷுக்கு தேஜஸ்வி வாழ்த்து
“புதிய அரசு வாக்குறுதிகளை பொறுப்புடன் நிறைவேற்றும் என நம்புகிறேன்“; நிதிஷுக்கு தேஜஸ்வி வாழ்த்து
Joy Crizildaa Vs Rangaraj: அவர கண்டா வரச் சொல்லுங்க.! தைரியம் இருந்தா DNA டெஸ்ட்டுக்கு வாங்க கணவரே.! - ஜாய் கிரிசில்டா
அவர கண்டா வரச் சொல்லுங்க.! தைரியம் இருந்தா DNA டெஸ்ட்டுக்கு வாங்க கணவரே.! - ஜாய் கிரிசில்டா
America Weapon Sale: அட பரவாயில்லையே.! இந்தியாவிற்கு ரூ.823 கோடிக்கு ஆயுதங்கள் விற்பனை; அமெரிக்கா ஒப்புதல்
அட பரவாயில்லையே.! இந்தியாவிற்கு ரூ.823 கோடிக்கு ஆயுதங்கள் விற்பனை; அமெரிக்கா ஒப்புதல்
Trump Vs India: 350% வரின்னு சொன்னேன், நிறுத்துனாங்க பாரு போர.! இந்தியா-பாக். போர்; மீண்டும் பேசிய ட்ரம்ப்
350% வரின்னு சொன்னேன், நிறுத்துனாங்க பாரு போர.! இந்தியா-பாக். போர்; மீண்டும் பேசிய ட்ரம்ப்
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
Chennai Power Cut: சென்னை மக்களே.! நவம்பர் 21-ம் தேதி பவர் கட் ஆகப் போற ஏரியா இதுதான்.. நோட் பண்ணிக்கோங்க
சென்னை மக்களே.! நவம்பர் 21-ம் தேதி பவர் கட் ஆகப் போற ஏரியா இதுதான்.. நோட் பண்ணிக்கோங்க
Embed widget