மேலும் அறிய

Aadi amavasai 2025: மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் அமாவாசை திருவிழா: லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

மேல்மலையனூர் அருள்மிகு ஶ்ரீ அங்காளம்மன் கோவிலில் ஆடி மாத அமாவாசை முன்னிட்டு உற்சவர் அங்காளம்மன் ஸ்ரீ நாகபூஷணி அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

விழுப்புரம்: பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயில் அமாவாசை திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்.

ஆடி அமாவாசை திருவிழா 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த பிரசித்திபெற்ற மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் மாதந்தோறும் அமாவாசை நாட்களில் ஊஞ்சல் உற்சவம் வெகு விமர்சியாக நடைபெறும். ஆடி அமாவாசை, தை, மாசி, அமாவாசை விழாக்கள் மிகவும் கோலாகலமாக நடைபெறும். இன்று ஆடி அமாவாசை விழாவை முன்னிட்டு அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. ஆடி அமாவாசை தினமான இன்று காலையிலிருந்தே பக்தர்களின் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. பெரும்பாலான பக்தர்கள் தாடை மற்றும் நாக்குகளில் அலகு குத்தியும், தீச்சட்டி ஏந்தியும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர்.

ஆடி அமாவாசை முன்னேற்பாடுகள்:-

மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோவிலில் 24.07.2025 இன்று அமாவாசை திருவிழா நடைபெறுகிறது. எனவே, பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொள்ள ஏதுவாக ஊராட்சி ஒன்றியத்தின் சார்பில், அடிப்படை வசதிகளான குடிநீர் வசதிகள், தற்காலிக கழிவறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்திடுவதோடு, தற்காலிக பேருந்து நிலையங்கள் மற்றும் திருக்கோவிலுக்கு வரும் வழிகளில் அதிகளவில் குப்பைதொட்டிகளை அமைத்து, குப்பைகளை உடனுக்குடன் அகற்றி, சுகாதாரப்பணிகள் மேற்கொள்ள எதுவாக துப்புரவு பணியாளர்களை பணியமர்த்தியுள்ளனர் .

பாதுகாப்பு பணியில் காவல் துறை 

மேலும், காவல்துறை சார்பில், பாதுகாப்பு நடவடிக்கையாக பாதுகாப்பு ஒத்திகை அணிவகுப்பு நடத்துவதுடன், தற்காலிக பேருத்து நிலையங்கள், கிராம தெருக்கள், திருக்கோயில் வளாகம் மற்றும் இதர இடங்களில் திருட்டு, வழிப்பறி மற்றும் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாத வண்ணம் போதிய அளவில் காவலர்களை நியமித்து பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

வாகனங்களுக்கு கட்டுப்பாடுகள் 

ஊஞ்சல் உற்சவம் நடைபெறும் நேரத்தில் திருக்கோயிலின் ஊஞ்சல் மண்டபம் (ம) கிழக்கு மண்டபத்தின் மேற்பகுதியில் எவரும் ஏறாத வகையில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளபட்டு வருகிறது. மேலும், கனரக வாகனங்கள் திருவிழா நாட்களில் செல்லா கூடாது. இதுமட்டுமல்லாமல், திருக்கோவிலுக்கு வரும் ஆட்டோக்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் செல்வதற்கான ஒருவழிப்பாதை அமைத்து வாகனங்கள் செல்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகம் சார்பில், திருக்கோயிலில் உள்ள மின் வழித்தடங்க் சீரமைக்கப்பட்டது. மேலும், திருவிழா நாட்களில், சுழற்சி முறையில் மின் பணியாளர்கள் 24 மணிநேரமும் பணியில் உள்ளனர். வாகனம் நிறுத்து மிடங்களில் போதிய மின்விளக்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கண்காணிப்பு மற்றும் அடிப்படை வசதிகள் 

மேலும், திருக்கோவில் நிர்வாகம் மற்றும் காவல்துறை மூலம், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு கேமரா அமைத்து கண்காணிக்கும் பணிகளில் ஈடுபட வேண்டும். ஆங்காங்கே குடிநீர் வசதிகள், தற்காலிக கழிப்பறை வசதிகள், கூட்டநெரிசலை தவிர்த்திடும் பொருட்டு தடுப்புகட்டை வசதிகளை அமைக்கப்பட்டுள்ளது. திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பாதை வசதிகள் மற்றும் திசைகள் அறிந்து கொள்ளும் வகையில் தேவையான இடங்களில் வழிகாட்டி பதாகைகள் (Route Map Boards) வைக்கப்பட்டுள்ளது.

தீயணைப்புத்துறை சார்பில், திருக்கோயில் வளாகத்தில் தீயணைப்பு வாகனத்தினை தயார் நிலையில் நிறுத்தி வைப்பதோடு, தியணைப்பு வீரர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் தொடர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், சுகாதார மருத்துவகுழு அவசர ஊர்தியுடன் திருக்கோவில் வளாகத்திற்குட்பட்ட இடங்களில் மருத்துவ முகாம் அமைத்து, மருத்துவ பணியினை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

போக்குவரத்து வசதி:- 

விழுப்புரம் சார்பாக மேல்மலையனூருக்கு விழுப்புரத்தை ஒட்டியுள்ள சென்னை, திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம், புதுச்சேரி, ஆரணி, ஆற்காடு ஆகிய வழித்தடங்களில் இருந்து மொத்தம் 425 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

சோழநாட்டு திருச்செந்தூர் திருவிடைக்கழியில் வைகாசி சதயத் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்! 
சோழநாட்டு திருச்செந்தூர் திருவிடைக்கழியில் வைகாசி சதயத் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்! 
மயிலாய் மாறிய அன்னை வழிபட்ட தலம்: மின்விளக்கு ஒளியில் மிதந்த மயூரநாதர் - கண்கொள்ளாக் காட்சி!
மயிலாய் மாறிய அன்னை வழிபட்ட தலம்: மின்விளக்கு ஒளியில் மிதந்த மயூரநாதர் - கண்கொள்ளாக் காட்சி!
வெறும் சைக்கிளில் 12 ஜோதிர்லிங்க தரிசனம்! - 14 மாநிலங்கள் கடந்து திருப்பத்தூர் சிவபக்தர் செய்த அசாத்திய சாதனை
வெறும் சைக்கிளில் 12 ஜோதிர்லிங்க தரிசனம்! - 14 மாநிலங்கள் கடந்து திருப்பத்தூர் சிவபக்தர் செய்த அசாத்திய சாதனை
காஞ்சிபுரம் தேர் திருவிழா: நகருக்குள் வாகனங்களுக்குத் தடை! பொதுமக்கள் கடும் எச்சரிக்கை!
காஞ்சிபுரம் தேர் திருவிழா: நகருக்குள் வாகனங்களுக்குத் தடை! பொதுமக்கள் கடும் எச்சரிக்கை!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.! யார் யார் எந்த மாவட்டத்திற்கு.? இதோ முழு லிஸ்ட்
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.! யார் யார் எந்த மாவட்டத்திற்கு.? இதோ முழு லிஸ்ட்
TN DGP: மக்களை அலறவிடும் குற்றங்கள்..! தினந்தோறும் தொடரும் சோகம் - புதிய டிஜிபி செய்யப்போவது என்ன?
மக்களை அலறவிடும் குற்றங்கள்..! தினந்தோறும் தொடரும் சோகம் - புதிய டிஜிபி செய்யப்போவது என்ன?
வங்கிமீது பழி ஏன்? மகாராஷ்டிராவால் சாத்தியமாகும் பயிர்க்கடன் தள்ளுபடி தமிழகத்தில் ஆகாதது ஏன்? அன்புமணி கேள்வி
வங்கிமீது பழி ஏன்? மகாராஷ்டிராவால் சாத்தியமாகும் பயிர்க்கடன் தள்ளுபடி தமிழகத்தில் ஆகாதது ஏன்? அன்புமணி கேள்வி
TN DGP: சட்ட-ஒழுங்கு டிஜிபியை சிறைத்துறைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு - மகேஷ் குமார் அகர்வால் வருகை..!
சட்ட-ஒழுங்கு டிஜிபியை சிறைத்துறைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு - மகேஷ் குமார் அகர்வால் வருகை..!
School Reopening: கொளுத்தும் வெயில்; உடல்நல பாதிப்பு அபாயம்- பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்கக் கோரிக்கை!
School Reopening: கொளுத்தும் வெயில்; உடல்நல பாதிப்பு அபாயம்- பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்கக் கோரிக்கை!
Maruti Hybrid Cars: லிட்டருக்கு 35+ KM மைலேஜ்..! மார்கெட்டில் 50% ஷேர் பிடிக்கனும் - மாருதியின் மலிவு விலை ஹைப்ரிட் கார்கள்
லிட்டருக்கு 35+ KM மைலேஜ்..! மார்கெட்டில் 50% ஷேர் பிடிக்கனும் - மாருதியின் மலிவு விலை ஹைப்ரிட் கார்கள்
Annamalai: வேகமாக வளர்ந்து அதைவிட வேகமாக வீழ்ந்த அண்ணாமலை - முகத்தை இழக்கும் பாஜக, என்ன பிரச்னை?
வேகமாக வளர்ந்து அதைவிட வேகமாக வீழ்ந்த அண்ணாமலை - முகத்தை இழக்கும் பாஜக, என்ன பிரச்னை?
Tamilnadu Round Up: புதிய DGP பதவியேற்பு? செவிலியர் மாணவி உயிரிழப்புக்கான காரணம், படப்பிடிப்பில் விபத்து - தமிழ்நாட்டில் இதுவரை
புதிய DGP பதவியேற்பு? செவிலியர் மாணவி உயிரிழப்புக்கான காரணம், படப்பிடிப்பில் விபத்து - தமிழ்நாட்டில் இதுவரை
Embed widget