மேலும் அறிய

Memorial Wall for Fallen Peacekeepers: உயிர்த் தியாகம் செய்த அமைதிப் படையினருக்காக புதிய நினைவுச் சுவர் அமைக்கப்படும்.. ஐநா பொதுச்சபை ஒப்புதல்..

உயிர்த் தியாகம் செய்த அமைதிப் படையினருக்காக புதிய நினைவுச் சுவர் உருவாக்க வேண்டுமென இந்தியா முன்மொழிந்த தீர்மானத்திற்கு ஐ.நா. பொதுச்சபை ஒப்புதல் அளித்துள்ளது.

உயிர்த் தியாகம் செய்த அமைதிப் படையினருக்காக புதிய நினைவுச் சுவர் உருவாக்க வேண்டுமென இந்தியா முன்மொழிந்த தீர்மானத்திற்கு ஐ.நா. பொதுச்சபை ஒப்புதல் அளித்துள்ளது குறித்து பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் மோடி தனது டிவிட்டரில்,  “உயிர்த் தியாகம் செய்துள்ள அமைதிப்படை வீரர்களுக்கு புதிய நினைவுச் சுவர் அமைக்க வேண்டுமென்ற இந்தியா கொண்டு வந்த தீர்மானம் ஐ.நா. பொதுச்சபையில் நிறைவேறியிருப்பது பெருமகிழ்ச்சியை அளிக்கிறது. இந்தத் தீர்மானத்திற்கு சாதகமாக 190 நாடுகளின் ஆதரவு கிடைத்துள்ளது. ஒவ்வொருவரது ஆதரவுக்கும் நன்றி” என பதிவிட்டுள்ளார்.  

முன்னதாக, ஐ.நா பொதுச் சபையில்,  உயிர் தியாகம் செய்த அமைதிப்படை வீரரகளை கவுரவிக்கும் வகையில்  நினைவுச் சுவர்  அமைப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாட்டில் அமைதியை மேம்படுத்துவது தொடர்பான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.  

இந்தியாவின் பிரதிநிதி ருசிரா கம்போஜ், ‘உயிர் தியாகம் செய்த  ஐக்கிய நாடுகளின் அமைதிப்படை வீரர்களுக்கான நினைவுச் சுவர்’ என்ற வரைவுத் தீர்மானத்தை அறிமுகப்படுத்தி, 125 நாடுகளைச் சேர்ந்த 10 லட்சத்துக்கும் அதிகமான ஆண்களும் பெண்களும் உலகளவில் 71 அமைதி காக்கும் திட்டத்தில் பணியாற்றியுள்ளனர் என்பதை சுட்டிக்காட்டினார். "இன்றும் கூட, 80,000 க்கும் மேற்பட்ட அமைதிப்படையினர் பல்வேறு சூழலில் பணியாற்றி வருகின்றனர், கடுமையான வானிலை சூழ்நிலைகளை சகித்து, அமைதியை காக்க தங்கள் உயிரை பணயம் வைத்துள்ளனர்," என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 4,200 க்கும் மேற்பட்ட அமைதிப்படையினர் சேவையின் போது தங்கள் இன்னுயிர்களை தியாகம் செய்துள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.  

இந்தியா மூன்று வாரங்களுக்கு முன் ஐநா இணையதளத்தில் இந்த வரைவுத் தீர்மானத்தை பதிவேற்றியது. இதற்கு பாகிஸ்தான் மற்றும் சீனா உட்பட 190 நாடுகளின் ஆதரவு கிடைத்துள்ளது. ஐநா பொது சபையானது இந்த தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்ட மூன்று ஆண்டுகளுக்குள் நியூயார்க்கில் உள்ள ஐ.நா.வில் உயிர் தியாகம் செய்த அமைதிப்படை வீரர்களின் நினைவை போற்றும் வகையில் ஒரு நினைவுச் சுவர் அமைக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.  நினைவு சுவர் கட்டுமானம், பராமரிப்பு முற்றிலும் தன்னார்வ பங்களிப்புகளிலிருந்து நிதியளிக்கப்படும் என்பதால், ஐநா பொது சபை, ஆர்வமுள்ள நாடுகளை பங்களிப்புகளை வழங்க அழைப்பு விடுத்துள்ளது. ஐ.நா. வின் அமைதிப்படை வீரர்களின் சர்வதேச தினம் மற்றும் ஐ.நா.வின் அமைதி காத்தல் தொடர்பான பிற நிகழ்வுகளில் நினைவுச் சுவருக்கு முக்கியத்துவம் கொடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.     

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget