மேலும் அறிய

Hinduja Family: நாய்க்கு ரூ.8 லட்சம், ஊழியர்களுக்கு ரூ.660 - ஹிந்துஜா குடும்பத்தினர் 4 பேருக்கு 4 ஆண்டுகள் சிறை

Hinduja Family: வீட்டு வேலையாட்களை துன்புறுத்திய வழக்கில் ஹிந்துஜா குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு, சுவிட்சர்லாந்து நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

Hinduja Family: வீட்டு வேலையாட்களின் பாஸ்போர்ட்டைப் பறிமுதல் செய்துகொண்டு, வில்லாவை விட்டு வெளியேற விடாமல் தடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

ஹிந்துஜா குடும்பத்தினருக்கு சிறை தண்டனை:

வீட்டுப் பணியாளர்களை கொடுமைப்படுத்தியதாக ஹிந்துஜா குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேருக்கு 4.5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதித்து சுவிட்சர்லந்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தொழிலாளர்களின் பாஸ்போர்ட்டைப் பறிமுதல் செய்ததாகவும், அவர்களுக்கு சுவிஸ் பிராங்குகளில் அல்லாமல் ரூபாயில் ஊதியம் கொடுத்ததாகவும், வில்லாவை விட்டு வெளியேற விடாமல் தடுத்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. விசாரணையின் முடிவில், குற்றம்சாட்டப்பட்ட நான்கு பேரும் தொழிலாளர்களை துன்புறுத்தியதற்காகவும், அங்கீகரிக்கப்படாத வேலைவாய்ப்பை வழங்கியதற்காகவும் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

நாய்க்கு ரூ.8 லட்சம், ஊழியர்களுக்கு ரூ.660:

குறிப்பிட்ட பணியாளர்களின் வேலைக்கு சுவிட்சர்லாந்தில் வழங்கப்படும் ஊதியத்தில் பத்தில் ஒரு பங்கிற்கும் குறைவான ஊதியமே வழங்கப்பட்டதும், குறைந்த சுகாதார நலன்களை வழங்கியதும் விசாரணையின் முடிவில் உறுதியாகியுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வாதத்தின் போது, அவர்கள் வீட்டு நாய்க்கு ஆண்டிற்கு 8 லட்ச ரூபாயை ஹிந்துஜா குடும்பத்தினர் செலவு செய்வதாகவும், ஆனால் பணியாளர்களிடம் ஒரு நாளைக்கு 18 மணி நேரம் வேலை வாங்கி வெறும் 660 ரூபாயை மட்டுமே ஊதியமாக வழங்கியதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. அதன் முடிவில் குற்றவாளிகளை "சுயநலவாதிகள்" என்று நீதிமன்றம் சாடியுள்ளது. பாதிக்கப்பட்ட 3 பணியாளர்களுடன் ஹிந்துஜா குடும்பம் சமரசம் செய்துகொண்டாலும், தொழிலாளர் நலன் விதிகளை மீறியதாக வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

18 மாதங்கள் தண்டனை நிறுத்தி வைப்பு:

குற்றம்சாட்டப்பட்ட பிரகாஷ் ஹிந்துஜா மற்றும் அவரது மனைவி கமல் ஹிந்துஜா ஆகியோருக்கு தலா நான்கு ஆண்டுகள் மற்றும் ஆறு மாதங்கள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  அவர்களது மகன் அஜய் மற்றும் அவரது மனைவி நம்ரதா ஆகியோரருக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், இந்த தண்டனையை 18 மாதங்களுக்கு நிறுத்தி வைப்பதாகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக ஹிந்துஜா குடும்பம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹிந்துஜா குடும்பத்தின் வணிக சாம்ராஜ்ஜியம்:

ஹிந்துஜா குழுமம் 1914 ஆம் ஆண்டு இந்தியாவில் உள்ள சிந்தி குடும்பத்தைச் சேர்ந்த பர்மானந்த் தீப்சந்த் ஹிந்துஜாவால் நிறுவப்பட்டது.  ஆரம்பத்தில் ஷிகர்பூர் (தற்போதைய பாகிஸ்தான் ) மற்றும் இந்தியாவின் பம்பாயில் இயங்கி , 1919 இல் ஈரானில் நிறுவனத்தின் முதல் சர்வதேச செயல்பாட்டை தொடங்கியது. குழுமத் தலைவர் ஸ்ரீசந்த் ஹிந்துஜா மற்றும் அவரது சகோதரர் கோபிசந்த் , 1979 இல் ஏற்றுமதி வணிகத்தை மேம்படுத்துவதற்காக லண்டனில் குடியேறினர். மூன்றாவது சகோதரர் பிரகாஷ் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில், குழுமத்தின் செயல்பாடுகளை நிர்வகிக்கிறார். இளைய சகோதரர் அசோக் இந்திய நலன்களை மேற்பார்வையிடுகிறார்.

ஆட்டோமொபைல் , எண்ணெய் மற்றும் சிறப்பு ரசாயனங்கள், வங்கி & நிதி , IT மற்றும் ITeS, இணைய பாதுகாப்பு , சுகாதாரம் , வர்த்தகம் , உள்கட்டமைப்பு திட்ட மேம்பாடு, ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு , சக்தி மற்றும் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பதினொரு துறைகளில் ஹிந்துஜா குழுமம் பரந்து விரிந்துள்ளது. இங்கிலாந்தின் பணக்கார குடும்பங்களில் ஒன்றாக ஹிந்துஜா உள்ளது. 38 நாடுகளில் வணிகங்களை நடத்து, ஹிந்துஜாக்களின் சொத்து மதிப்பு சுமார் 47 பில்லியன் டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather Update: 16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை சென்னை நிலவரம்  என்ன? தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: 16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை சென்னை நிலவரம் என்ன? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
நெருங்கும் தேர்தல்; கொங்கு மண்டலம் செல்லும் முதல்வர் ஸ்டாலின்- 2 நாள் பயணத் திட்டம் என்ன?
நெருங்கும் தேர்தல்; கொங்கு மண்டலம் செல்லும் முதல்வர் ஸ்டாலின்- 2 நாள் பயணத் திட்டம் என்ன?
TN Rain Alert:  கனமழை எச்சரிக்கை! எந்தெந்த மாவட்டங்களில் மழை? மீனவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!
கனமழை எச்சரிக்கை! எந்தெந்த மாவட்டங்களில் மழை? மீனவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விஜய்க்கு NO CHANCE! ”திமுகவுடன் தான் கூட்டணி” ஆட்டத்தை ஆரம்பித்த ராகுல்
இறைநிலை அடைந்த AR ரஹ்மான் SUFISM என்றால் என்ன? ஆன்மிகம், இசை SUFI பயணம் | AR Rahman Sufi Concert
பொம்மை முதல்வர் நிதிஷ்குமார்?முக்கிய துறைகளை தூக்கிய பாஜக பரபரக்கும் பீகார் அரசியல் | Nitish kumar
சென்னை மக்களே உஷார் அடுத்த இரண்டு நாட்கள்...வானிலை மையம் ALERT | Chennai rain
சித்தராமையாவுக்கு ஆப்பு? டெல்லியில் குவிந்த MLA-க்கள்! DK சிவக்குமார் ப்ளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: 16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை சென்னை நிலவரம்  என்ன? தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: 16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை சென்னை நிலவரம் என்ன? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
நெருங்கும் தேர்தல்; கொங்கு மண்டலம் செல்லும் முதல்வர் ஸ்டாலின்- 2 நாள் பயணத் திட்டம் என்ன?
நெருங்கும் தேர்தல்; கொங்கு மண்டலம் செல்லும் முதல்வர் ஸ்டாலின்- 2 நாள் பயணத் திட்டம் என்ன?
TN Rain Alert:  கனமழை எச்சரிக்கை! எந்தெந்த மாவட்டங்களில் மழை? மீனவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!
கனமழை எச்சரிக்கை! எந்தெந்த மாவட்டங்களில் மழை? மீனவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!
பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்ணை கேள்வி கேட்பது மன நோய் - செளமியா அன்புமணி ஆவேசம்
பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்ணை கேள்வி கேட்பது மன நோய் - செளமியா அன்புமணி ஆவேசம்
TET exam: டெட் தேர்வு ரத்தாகுமா?- முதல்வர் ஸ்டாலினை சந்தித்துப் பேசிய அமைச்சர் அன்பில்
TET exam: டெட் தேர்வு ரத்தாகுமா?- முதல்வர் ஸ்டாலினை சந்தித்துப் பேசிய அமைச்சர் அன்பில்
பைஜூ ரவீந்திரனுக்கு ₹9,591 கோடி அபராதம்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு: காரணம் என்ன?
பைஜூ ரவீந்திரனுக்கு ₹9,591 கோடி அபராதம்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு: காரணம் என்ன?
அய்யா PMK: ராமதாஸ் ஆதரவாளர்கள் புதிய கட்சி தொடக்கம்? மாம்பழ சின்னம் யாருக்கு? பரபரப்பு தகவல்!
அய்யா PMK: ராமதாஸ் ஆதரவாளர்கள் புதிய கட்சி தொடக்கம்? மாம்பழ சின்னம் யாருக்கு? பரபரப்பு தகவல்!
Embed widget