மேலும் அறிய

Subramanian Swamy Meet Rajapaksa : ராஜபக்சே வீட்டில் நவராத்திரி.. கோத்தபயவை சந்தித்த சுப்பிரமணியன் சுவாமி.. இலங்கையில் நடந்தது என்ன?

இலங்கை சென்ற முன்னாள் மத்திய அமைச்சர் சுப்பிரமணிய சுவாமி ராஜபக்சே சகோதரர்களை நேரில் சந்தித்து பேசினார்.

இலங்கை நாட்டின் அதிபராக பொறுப்பு வகித்தவர் கோத்தபய ராஜபக்சே. இந்தாண்டு தொடக்கம் முதல் அந்த நாட்டில் ஏற்பட்ட வரலாறு காணாத விலைவாசி உயர்வு, பொருளாதார சரிவு உள்ளிட்ட காரணங்களால் மக்கள் கொதித்தெழுந்தனர். இதையடுத்து, கோத்தபய ராஜபக்சே தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு குடும்பத்தினருடன் நாட்டை விட்டு கடந்த ஜூலை மாதம் 13-ந் தேதி தப்பியோடினார்.
Subramanian Swamy Meet Rajapaksa : ராஜபக்சே வீட்டில் நவராத்திரி.. கோத்தபயவை சந்தித்த சுப்பிரமணியன் சுவாமி.. இலங்கையில் நடந்தது என்ன?

இந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு மீண்டும் இலங்கைக்கு கோத்தபய ராஜபக்சே திரும்பினார். இந்த நிலையில், பா.ஜ.க. எம்.பி.யும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுப்பிரமணிய சுவாமி இலங்கை சென்றிருந்தார். இலங்கை சென்றிருந்த சுப்பிரமணிய சுவாமி முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவை நேரில் சந்தித்து பேசினார். இலங்கை அதிபர் பதவியை ராஜினாமா செய்த பிறகு நாட்டைவிட்டு தப்பியோடிய கோத்தபய ராஜபக்சே, நாடு திரும்பிய பிறகு அவரைச் சந்தித்த முதல் வெளிநாட்டவர் சுப்பிரமணிய சுவாமி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சந்திப்பின்போது, இவர்கள் இருவரும் இலங்கை அரசியல் நிலவரம், பொருளாதார சூழல், ராஜபக்சே குடும்ப அரசியல் பற்றி விவாதித்ததாக கூறப்படுகிறது. மேலும், கோத்தபய ராஜபக்சேவை சந்தித்தது மட்டுமின்றி, அவரது சகோதரரும், முன்னாள் அதிபரும், முன்னாள் பிரதமருமான மகிந்த ராஜபக்சேவையும் சுப்பிரமணியசுவுாமி சந்தித்துள்ளார். மகிந்த ராஜபக்சே வீட்டில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற நவராத்திரி பூஜையில் சுப்பிரிமணிய சுவாமி பங்கேற்றார் என்றும் தகவல்கள் வெளியாகியது.

இலங்கையில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கில் பங்கேற்பதற்காக வழக்கறிஞர்கள் குழுவுடன் சென்ற சுப்பிரமணிய சுவாமி இலங்கையின் தற்போதைய பிரதமர் தினேஷ் குணவர்தனாவையும் கொழும்புவில் சந்தித்து பேசியுள்ளார். முன்னதாக, இலங்கையில் இருந்து தப்பியோடிய கோத்தபய ராஜபக்சே மாலத்தீவிற்கு சென்றார். அங்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அங்கிருந்து சிங்கப்பூர் சென்றார். அங்கும் அவருக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியதையடுத்து, தாய்லாந்து தப்பிச்சென்றார். இந்த நிலையில், இந்த மாத தொடக்கத்தில்தான் கோத்தபய ராஜபக்சே இலங்கை திரும்பினார்.

இலங்கையின் கொழும்பு நகரில் தற்போது வசித்து வரும் ராஜபக்சேவிற்கு, ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசு பாதுகாப்பு அளித்து வருகிறது. சுப்பிரமணிய சுவாமிக்கும், ராஜபக்சே சகோதரர்களுக்கும் இடையே நீண்டகால நட்பு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget