மேலும் அறிய

Srilanka: “மீண்டும் இலங்கைக்கு அனுப்பாதீங்க..” - நடுக்கடலில் மீட்கப்பட்ட இலங்கை தமிழ் அகதிகள் கதறல்!

Srilanka: நடுக்கடலில் தத்தளித்த இலங்கை தமிழ் அகதிகள் 303 பேர் மீட்டு வியாட்நாம் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

 Srilanka: நடுக்கடலில் தத்தளித்த இலங்கை தமிழ் அகதிகள் 303 பேர் மீட்டு வியாட்நாம் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

தத்தளித்த இலங்கை தமிழ் அகதிகள்: 

கொழும்பு: கனடா தப்பும் வழியில் படகு பழுதானதால் நடுக்கடலில் தத்தளித்த இலங்கை அகதிகள் 303 பேர் நேற்று மீட்கப்பட்டுள்ளனர். இலங்கையில் கடுமையான பொளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் அந்நாட்டு மக்கள் அகதிகளாக வெவ்வேறு நாடுகளுக்கு தப்பிச் செல்லும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில், 303 பேர் குடும்பம் குடும்பமாக சட்ட விரோதமாக படகு மூலம் கனடா செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. இவர்கள் சிங்கப்பூர், வியாட்நாம், பிலிப்பைன்ஸ் நாடுகளில் கடல் எல்லைக்கு  அருகாமையில் நேற்று முன்தினம் சென்றபோது, படகு திடீரென பழுதாகி  உள்ளது. 
இதனால் படகு  கடலில் மூழ்கத் தொடங்கியதால் அதிலிருந்தவர்கள அச்சம் அடைந்தனர். இதுகுறித்து கடலில் தத்தளித்தபடி உயிருக்கு போராடுவதாக ஆடியோ பதிவு ஒன்று இலங்கை கடற்படைக்கு பகிரப்பட்டது. இதுகுறித்து சிங்கப்பூர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சிங்கப்பூர், வியாட்நாம் நாட்டின் கடல்சார் தேடல் மற்றும் மீட்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று  மூழ்கிக் கொண்டிருந்த கப்பலில் இருந்த 39 குழந்தைகள், 264 ஆண்கள் என மொத்தம் 303 பேரை மீட்டனர். இவர்களை வியாட்நாம் நாட்டில் இன்று தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

”இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டாம்”

இலங்கையில் இருந்த பொருளாதார நெருக்கடியால் தப்பி சென்ற 303 பேர் தற்போது வியாட்நாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இது குறித்து இலங்கை தமிழ் அகதிகள் கூறியதாவது, " தங்களை இலங்கைக்கு திருப்பி அனுப்பு வேண்டாம்" என தெரிவித்ததாக கூறப்படுகிறது. பொருளாதார நெருக்கடி காரணமாக 303 அகதிகளை இலங்கைக்கு திருப்பி அனுப்பி வியாட்நாம் அரசு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும், அவர்களின் ஆவணங்களை சரிபார்த்த பிறகுதான் அனைவரும் இலங்கையை சேர்ந்தவர்களா என்பது உறுதிபடுத்தப்படும் என இலங்கை அமைச்சர் இந்திகா டிசில்வா கூறி உள்ளார்.

"இலங்கைக்கு திருப்பி அனுப்பவே திட்டம்"

வியாட்நாமில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கை  தமிழ் அகதிகளை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வர அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளதாக கடல்தொழில்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, இலங்கையில் தப்பிச் சென்ற 303 பேரை மற்ற நாடுகளில் தங்க வைக்க அந்நாட்டு அரசுகளுக்கு விருப்பமில்லை. பொருளாதார நெருக்கடி பெரும்பால நாடுகளில் இருப்பதால் இவர்களை அங்கு தங்க வைக்க மற்ற நாடுகள் மறுப்பு தெரிவிக்கின்றனர் என்றார்.

மேலும் வியாட்நாமில் தங்க வைக்கப்பட்டுள்ள 303 பேரை இலங்கைக்கு திருப்பி அனுப்பவே இலங்கை அரசு முயற்சி செய்து வருவதாவும் கடல் தொழில்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

UKS: எம்கேஎஸ் கொண்டுவரும் யுகேஎஸ்; தமிழக அமைச்சரவை முக்கிய முடிவு- உங்கள் கனவுகளை நனவாக்க புதிய திட்டம்!
UKS: எம்கேஎஸ் கொண்டுவரும் யுகேஎஸ்; தமிழக அமைச்சரவை முக்கிய முடிவு- உங்கள் கனவுகளை நனவாக்க புதிய திட்டம்!
TN Weather: 5 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather: 5 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Christmas New Year Bumper Lottery: அம்மாடியோவ்..ரூ.93 கோடிக்கு கேரளா புத்தாண்டு பம்பர் லாட்டரி..முதல் பரிசே 20 கோடி- முழு பரிசு விவரம் இதோ!
Christmas New Year Bumper Lottery: அம்மாடியோவ்..ரூ.93 கோடிக்கு கேரளா புத்தாண்டு பம்பர் லாட்டரி..முதல் பரிசே 20 கோடி- முழு பரிசு விவரம் இதோ!
எங்க தயவுல தானே ஜெயிச்சீங்க.. தனியா போட்டி போட்டு பலத்த காட்டுங்க தலைவா.? மாணிக்கம் தாகூரை சீண்டும் திமுகவினர்
எங்க தயவுல தானே ஜெயிச்சீங்க.. தனியா போட்டி போட்டு பலத்த காட்டுங்க தலைவா.? மாணிக்கம் தாகூரை சீண்டும் திமுகவினர்
ABP Premium

வீடியோ

Congress VS DMK | பங்கு கேட்ட மாணிக்கம் தாகூர்
Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
UKS: எம்கேஎஸ் கொண்டுவரும் யுகேஎஸ்; தமிழக அமைச்சரவை முக்கிய முடிவு- உங்கள் கனவுகளை நனவாக்க புதிய திட்டம்!
UKS: எம்கேஎஸ் கொண்டுவரும் யுகேஎஸ்; தமிழக அமைச்சரவை முக்கிய முடிவு- உங்கள் கனவுகளை நனவாக்க புதிய திட்டம்!
TN Weather: 5 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather: 5 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Christmas New Year Bumper Lottery: அம்மாடியோவ்..ரூ.93 கோடிக்கு கேரளா புத்தாண்டு பம்பர் லாட்டரி..முதல் பரிசே 20 கோடி- முழு பரிசு விவரம் இதோ!
Christmas New Year Bumper Lottery: அம்மாடியோவ்..ரூ.93 கோடிக்கு கேரளா புத்தாண்டு பம்பர் லாட்டரி..முதல் பரிசே 20 கோடி- முழு பரிசு விவரம் இதோ!
எங்க தயவுல தானே ஜெயிச்சீங்க.. தனியா போட்டி போட்டு பலத்த காட்டுங்க தலைவா.? மாணிக்கம் தாகூரை சீண்டும் திமுகவினர்
எங்க தயவுல தானே ஜெயிச்சீங்க.. தனியா போட்டி போட்டு பலத்த காட்டுங்க தலைவா.? மாணிக்கம் தாகூரை சீண்டும் திமுகவினர்
அமித்ஷா போட்ட ஸ்கெட்ச்.! திமுக அமைச்சர்களை தூக்க லிஸ்ட் போட்ட எடப்பாடி- நடப்பது என்ன.?
அமித்ஷா போட்ட ஸ்கெட்ச்.! திமுக அமைச்சர்களை தூக்க லிஸ்ட் போட்ட எடப்பாடி- நடப்பது என்ன.?
Mahindra XUV 7XO Vs Rivals: போட்டியை சமாளிக்குமா XUV 7XO? அல்கசார், ஹெக்டருடன் மஹிந்த்ரா 7 சீட்டரின் முழு கம்பேரிசன்
Mahindra XUV 7XO Vs Rivals: போட்டியை சமாளிக்குமா XUV 7XO? அல்கசார், ஹெக்டருடன் மஹிந்த்ரா 7 சீட்டரின் முழு கம்பேரிசன்
Maduro's Son Vs America: “பழிதீர்ப்போம்“; அமெரிக்காவிற்கு எச்சரிக்கை; வெனிசுலா மக்களை வீதிக்கு அழைக்கும் மதுரோ மகன்
“பழிதீர்ப்போம்“; அமெரிக்காவிற்கு எச்சரிக்கை; வெனிசுலா மக்களை வீதிக்கு அழைக்கும் மதுரோ மகன்
Bullet 350, Classic 350 பிரியர்களுக்கு ஷாக்; விலையை உயர்த்திய ராயல் என்ஃபீல்டு; இப்போ எவ்வளவு.?
Bullet 350, Classic 350 பிரியர்களுக்கு ஷாக்; விலையை உயர்த்திய ராயல் என்ஃபீல்டு; இப்போ எவ்வளவு.?
Embed widget