இலங்கையில் நாளை மறுதினம் வரை நீட்டிக்கப்பட்டது ஊரடங்கு!
இலங்கை முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை மறுதினம் வியாழக்கிழமை (12) காலை 7 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது.

இலங்கை முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை மறுதினம் வியாழக்கிழமை (12) காலை 7 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக குடியரசு தலைவர் ஊடகப் பிரிவு இதனைக் குறிப்பிட்டுள்ளது.
பொது மக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 16ஆம் சரத்தின் கீழ் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளின் எழுத்துமூல அனுமதியின்றி பொது வீதிகள், போக்குவரத்து மார்க்கங்கள், பொது பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் அல்லது வேறு பொது இடங்களிலும் கடற்கரைகளிலும் இருப்பதற்கு அனுமதி மறுக்கப்படுவதாக குடியரசு தலைவர் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், அதிகாரம் பெற்ற அதிகாரிகளின் எழுத்துமூலம் அனுமதியின்றி, ஊரடங்கும் காலப்பகுதியில் மேற்படி இடங்களில் நடமாடுவது தடைசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Before You Go
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
ட்ரெண்டிங் செய்திகள்






















