Russia Gun Fire: ரஷ்ய இசை நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு; பலி எண்ணிக்கை 115 ஆக உயர்வு: 11 பேர் கைது
Russia Gun Fire: ரஷ்ய இசை நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 115 ஆக அதிகரித்துள்ளது.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நேற்று நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 115 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இசை நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு:

11 people 'directly' involved in Crocus City Hall attack detained: Russian Security Service
Read @ANI Story | https://t.co/5aezwo3Gp5#moscowattack #Russia pic.twitter.com/udYrwdRx7P— ANI Digital (@ani_digital) March 23, 2024
துப்பாக்கி நடைபெற்ற சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் வீடியோக்கள் பரவி வருகிறது. அதில் துப்பாக்கி தாக்குதலை தொடர்ந்து இசை அரங்கில் இருந்து மக்கள் அலறியடித்து வெளியேறுகின்றனர். இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தாக்குதல் குறித்து மாகாண ஆளுநர் ஆண்ட்ரி வோரோபியோவ் தகவல் கூறுகையில், "மாஸ்கோவில் பல ஆண்டுகளில் நடக்காத அளவுக்கு மிக மோசமான பயங்கரவாதத் தாக்குதல் இதுவாகும் என தெரிவித்தா.

