மேலும் அறிய

ஒப்புதல் இன்றி ஆணுறை இல்லாமல் பாலியல் உறவில் ஈடுபடுவது குற்றம்... கனடா நீதிமன்றம் அதிரடி

பாலியல் உறவின்போது இணையரின் அனுமதியின்றி ஆணுறை அணியாததற்கு ஒருவர் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு சுமத்தப்படலாம் என கனடாவின் உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.

பாலியல் உறவின்போது இணையரின் அனுமதியின்றி ஆணுறை அணியாததற்கு ஒருவர் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு சுமத்தப்படலாம் என கனடாவின் உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது. 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் 4 நீதிபதிகள் இதற்கு ஆதரவான தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பாக மேல்முறையீட்டு நீதிமன்றம் மறு விசாரணைக்கு உத்தரவிடுவதற்கு முன்பு, பிரிட்டன் கொலம்பியா நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் ரோஸ் மெக்கென்சி கிர்க்பாட்ரிக் என்பவர் விடுவிக்கப்பட்டிருந்தார். 

கிர்க்பாட்ரிகிடம் புதிதாக விசாரணை நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது. பாதுகாப்பான முறையில் பாலியல் உறவு வைத்து கொள்ள சம்மதித்த பெண்ணுடனான உறவின்போது ஆணுறை அணியவில்லை என கிர்க்பாட்ரிக் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இருப்பினும், அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபணமானதா என்பது குறித்து நீதிமன்றம் விளக்கவில்லை.

உடலுறவின் போது ஆணுறையை ரகசியமாக அகற்றும் செயல், சில சமயங்களில் "stealthing" என்று குறிப்பிடப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து ஜெர்மனி, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. பாலியல் உறவின்போது இணையரின் அனுமதியின்றி ஆணுறை அணியாதவர்களை குற்றவாளி என இந்த இரண்டு நாடுகளிலும் நீதிமன்றங்கள் தீர்ப்பு அளித்துள்ளது.

"ஆம் என்றால் ஆம், இல்லை என்றால் இல்லை. இல்லை, ஆணுறை இல்லாமல் பாலியல் உறவு வேண்டாம் என்றால் ஆம் என்று எடுத்து கொள்ள முடியாது" என்று நீதிபதி ஷீலா மார்ட்டின் பெரும்பான்மை தீர்ப்பில் கருத்து தெரிவித்துள்ளார்.

கனட சட்டத்தின் கீழ், பாலியல் ரீதியான தாக்குதல் நடந்தது என்பதை நிரூபணம் செய்ய குறிப்பிட்ட பாலியல் செயல் ஒப்புதல் இன்றி நடைபெற்றதற்கான ஆதாரம் தேவை. ஆணுறை பயன்பாடு என்பது பாலியல் உறவின் ஒரு பகுதியாக இருக்கலாம். ஏனெனில், ஆணுறை இல்லாமல் பாலியல் உறவு மேற்கொள்வது என்பது ஆணுறையுடன் பாலியல் உறவு மேற்கொள்வதிலிருந்து வேறுபட்ட ஒன்று என நீதிபதி தெரிவித்துள்ளார்.

கிர்க்பாட்ரிக் ஒரு பெண்ணை ஆன்லைனிலும் பின்னர் நேரிலும் சந்தித்தார். அவர்கள் 2017 ஆம் ஆண்டு ஒரே இரவில் இரண்டு முறை பாலியல் உறவு கொண்டனர். பெண்ணுக்கு தெரியாமல் ஒரு முறை ஆணுறையுடனும் பின்னர் மீண்டும் ஒரு முறை ஆணுறை இல்லாமலும் பாலியல் உறவு வைத்ததாக பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார். 

அவர் இரண்டாவது முறையாக ஆணுறை பயன்படுத்தவில்லை என்பது தனக்குத் தெரியாது என்றும், அவ்வாறு செய்திருந்தால், அதற்கு அவர் சம்மதித்திருக்க மாட்டார் என்றும் பாதிக்கப்பட்ட பெண் புகாரில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Punjab Farmers: இரவோடு இரவாக அகற்றம்..! பாஜகவிற்கு ஆதரவாக ஆம் ஆத்மி சிஎம், விவசாயிகள் கைது
Punjab Farmers: இரவோடு இரவாக அகற்றம்..! பாஜகவிற்கு ஆதரவாக ஆம் ஆத்மி சிஎம், விவசாயிகள் கைது
Weather: இன்று இரவு 6 மாவட்டங்களில் மழை இருக்கு-  நாளைய வானிலை எப்படி?
இன்று இரவு 6 மாவட்டங்களில் மழை இருக்கு- நாளைய வானிலை எப்படி?
அடுத்தடுத்த நாளில் அடுத்தடுத்து கொலைகள்! அதிர்ச்சியில் தமிழக மக்கள்! பிடியை இறுக்குமா காவல்துறை?
அடுத்தடுத்த நாளில் அடுத்தடுத்து கொலைகள்! அதிர்ச்சியில் தமிழக மக்கள்! பிடியை இறுக்குமா காவல்துறை?
CISF Recruitment 2025: 10-வது தேர்ச்சி பெற்றவரா? 1161 பணியிடங்கள்! மத்திய அரசுப் பணி; விவரம் இதோ!
CISF Recruitment 2025: 10-வது தேர்ச்சி பெற்றவரா? 1161 பணியிடங்கள்! மத்திய அரசுப் பணி; விவரம் இதோ!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sunita williams Return | சுனிதாவை பாராட்டாத மோடி 2007-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் பின்னணி..! | Haren PandyaSenthil Balaji Delhi Visit | TASMAC ஊழல்.. துரத்தும் ED டெல்லி பறந்த செந்தில் பாலாஜி திடீர் விசிட்! பின்னணி என்ன?Sunita Williams: 27 ஆயிரம் KM Speed! 1927 டிகிரி செல்சியஸ்! Real Wonder Woman சுனிதா வில்லியம்ஸ்DMDK Alliance DMK |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Punjab Farmers: இரவோடு இரவாக அகற்றம்..! பாஜகவிற்கு ஆதரவாக ஆம் ஆத்மி சிஎம், விவசாயிகள் கைது
Punjab Farmers: இரவோடு இரவாக அகற்றம்..! பாஜகவிற்கு ஆதரவாக ஆம் ஆத்மி சிஎம், விவசாயிகள் கைது
Weather: இன்று இரவு 6 மாவட்டங்களில் மழை இருக்கு-  நாளைய வானிலை எப்படி?
இன்று இரவு 6 மாவட்டங்களில் மழை இருக்கு- நாளைய வானிலை எப்படி?
அடுத்தடுத்த நாளில் அடுத்தடுத்து கொலைகள்! அதிர்ச்சியில் தமிழக மக்கள்! பிடியை இறுக்குமா காவல்துறை?
அடுத்தடுத்த நாளில் அடுத்தடுத்து கொலைகள்! அதிர்ச்சியில் தமிழக மக்கள்! பிடியை இறுக்குமா காவல்துறை?
CISF Recruitment 2025: 10-வது தேர்ச்சி பெற்றவரா? 1161 பணியிடங்கள்! மத்திய அரசுப் பணி; விவரம் இதோ!
CISF Recruitment 2025: 10-வது தேர்ச்சி பெற்றவரா? 1161 பணியிடங்கள்! மத்திய அரசுப் பணி; விவரம் இதோ!
Rajinikanth: ரஜினியை பார்த்து பைத்தியக்காரன் என்ற பிரபல இயக்குனர்! பார்த்திபன் பகிர்ந்த ஷாக்!
Rajinikanth: ரஜினியை பார்த்து பைத்தியக்காரன் என்ற பிரபல இயக்குனர்! பார்த்திபன் பகிர்ந்த ஷாக்!
தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்கள் தாக்கிக்கொள்வதாகப் பரவும் காணொளி.. உண்மையா?
அரசு பள்ளி மாணவர்கள் தாக்கிக்கொள்வதாகப் பரவும் காணொளி.. உண்மையா?
இனி பாலுக்கு பிரச்னையே இருக்காது.. விவசாயிகளுக்கு அடிச்சது ஜாக்பாட்.. தெரிஞ்சுக்கோங்க!
இனி பாலுக்கு பிரச்னையே இருக்காது.. விவசாயிகளுக்கு அடிச்சது ஜாக்பாட்.. தெரிஞ்சுக்கோங்க!
GATE Result 2025: மாணவர்களே அலர்ட்.. கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி? முதலிடம் யாருக்கு?
GATE Result 2025: மாணவர்களே அலர்ட்.. கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி? முதலிடம் யாருக்கு?
Embed widget