Rahul Slams Modi: அது ஒண்ணும் பர்சனல் மேட்டர் இல்ல, மோடி இப்படி செஞ்சுருக்க கூடாது..எதை பற்றி கூறினார் ராகுல்.?
அமெரிக்கா சென்றிருந்தபோது, பத்திரிகையாளரின் கேள்வி ஒன்றிற்கு மோடி அளித்த பதில் குறித்து, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.

சமீபத்தில் அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, ட்ரம்ப்பை சந்தித்தபின், அவர்கள் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு மோடி அளித்த பதில் குறித்து, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையான விமர்சனத்தை வைத்துள்ளார்.
அதானி மீது அமெரிக்காவில் குற்றச்சாட்டு பதிவு
உலக பணக்காரர்கள் வரிசையில் இடம்பெற்றுள்ள இந்திய தொழிலதிபர் கௌதம் அதானி, இந்தியாவில் தனது புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நிறுவனம், சில ஒப்பந்தங்களை கைப்பற்றுவதற்காக, இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க ஒப்புக்கொண்டதாகவும், அந்த ஒப்பந்தங்களுக்கான முதலீட்டை அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச முதலீட்டாளர்களிடம் பெற்றபோது, லஞ்ச விவகாரத்தை மறைத்ததாக அதானி மீது மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள ஊழலுக்கு எதிரான கொள்கைகள் மற்றும் வழக்கங்களை மீறி, லஞ்சம் கொடுக்க ஒப்புக்கொண்டதை மறைத்து, அமெரிக்க நிறுவனங்களிடமிருந்து கடனாகவும், பத்திரங்கள் மூலமாகவும் 3 பில்லியன் டாலர்களை அதானி குழுமம் பெற்றுள்ளதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.
இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள அதானி குழுமம், அதற்கு ஆதாரங்கள் இல்லை எனவும் தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடியை சாடிய ராகுல் காந்தி
சமீபத்தில் அமெரிக்க பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அமெரிக்க அதிபருடன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,ட அதானி மீதான குற்றச்சாட்டு குறித்து, ட்ரம்ப்பிடம் பேசினாரா என மோடியை நோக்கி செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த மோடி, இருநாடுகளின் முக்கிய பிரதிநிதிகள், இதுபோன்ற தனிப்பட்ட பிரச்னைகள் குறித்து ஒருபோதும் விவாதிப்பதில்லை என பதிலளித்தார்.
மோடியின் இந்த பதில் குறித்து விமர்சித்துள்ள ராகுல் காந்தி, அதானி விவகாரம் தனிப்பட்ட விஷயம் அல்ல என்றும், அது நாட்டைப் பற்றியது என்றும் கூறியுள்ளார். மேலும், அவர் உண்மையாக இந்தியாவின் பிரதமராக இருந்தால், அதானி விஷயம் குறித்து ட்ரம்ப்பிடம் பேசியிருப்பார் என்றும், அதை விசாரிக்கச் சொல்வதாகவும், தேவைப்பட்டால் அதானியை விசாரணைக்கு அனுப்பி வைப்பதாகவும் கூறியிருப்பார் என்றும், ஆனால் அது தனிப்பட்ட விஷயம் என்று மோடி கூறிவிட்டார் எனவும் கடுமையாக சாடியுள்ளார்.


தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

