மேலும் அறிய

'பற்றி எரியும் இலங்கை' பரவும் வன்முறை...! பதவி விலகுவாரா கோத்தபய ராஜபக்ச?

இலங்கையில் இன்று நடைபெற்ற வன்முறையில் மகிந்த ராஜபக்‌ஷேவுக்கு ஆதரவளித்த எம்பிக்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் இன்று நடைபெற்ற வன்முறையில் மகிந்த ராஜபக்‌ஷேவுக்கு ஆதரவளித்த எம்பிக்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்கு ராஜபக்‌ஷே குடும்பத்தினர்தான் என்றும், அவர்கள் தான் இலங்கை இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டது என்று கூறி இலங்கை முழுவதும் பல மாதங்களாக கடும் போராட்டம் நடைபெற்று வருகிறது. பிரதமர் ராஜபக்‌சே உள்பட அவரது குடும்பத்தினர் அனைவரும் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் இலங்கையில் உள்ள பிரதமரின் இல்லமான டெம்பிள் ட்ரீஸ் முன்பு போராட்டக்காரர்கள் குவிந்தனர். பிரதமர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அவர் பதவி விலகக் கூடாது என்று ராஜபக்‌ஷே ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே இரு தரப்பினரிடையிலும் மோதல் ஏற்பட்டது.

காவல்துறையினர் முன்னிலையிலேயே ராஜபக்‌சே ஆதரவாளர்கள் பொதுமக்களை கடுமையாக தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் இரு தரப்பினரிடையேயும் ஏற்பட்ட கடுமையான மோதலை தடுக்க காவல்துறையினர், ராணுவத்தினர் தடியடி, கண்ணீர் புகை வீசுதல், தண்ணீர் பீய்ச்சியடித்தல் என்று பல்வேறு வகைகளில் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனிடையே இலங்கை பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக மகிந்த ராஜபக்‌ஷே அறிவித்ததோடு, ராஜினாமா கடிதத்தை அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷேவிற்கு அனுப்பி வைத்தார்.

இந்த நிலையில், பிரதமர் ராஜபக்‌ஷேவுக்கு ஆதரவளிப்பதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் வந்த, ராஜபக்‌சே கட்சியின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சியின் ஆதரவாளர்கள் பேருந்துகளில் வந்திருந்தனர். திரும்பிச் செல்கையில் பேருந்துகளை போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கினர்.

அதுமட்டுமல்லாமல் வில்கோடாவில் உள்ள முன்னாள் அமைச்சர் ஜான்ஸ்டன் ஃபெர்னாண்டோவின் அலுவலகம், குருனேகலாவில் உள்ள அவரது வீட்டை தாக்கியதோடு தீ வைத்து எரித்தனர்.

மொரத்துவாவின் மேயர் சமன்லால் ராஜபக்‌ஷேவுக்கு ஆதரவாக எட்டு பேருந்துகளில் ஆட்களை ஏற்றிக்கொண்டு டெம்பிள் ட்ரீஸ்க்கு சென்றிருந்தார் அவரும் போராட்டக்காரர்களால் தாக்குதலுக்குள்ளாகியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திகா பெர்னாண்டோ வின் கொச்சிக்கடே வீட்டையும் போராட்டக்காரர்கள் தீக்கிரையாக்கினர்.

அருந்திகா மட்டுமல்லாமல் புட்டலம் எம்பியும், முன்னாள் அமைச்சருமான சனத் நிஷாந்தா மற்றும் அவரது சகோதரர் அரச்சிகட்டுவா, ஜகத் சமந்தா, முன்னாள் அமைச்சர் ரமேஷ் பதிராணா, ப்ரசன்ன ரணதுங்கா, கம்பகா மேயர் எரங்கா செனனாயகே ஆகியோரது வீடுகளும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

இதே போன்று மகிந்த ராஜபக்‌ஷேவிற்கு ஆதரவளித்த  பல்வேறு நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் மீது கல்வீச்சு தாக்குதலும் நடைபெற்றுள்ளது. இலங்கை தலைநகரான கொழும்புவில் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு வன்முறை செல்வதால் அந்நாட்டு காவல்துறையில் அனைவருக்கும் விடுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. விடுப்பில் உள்ளவர்களும் பணிக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Embed widget